என் மலர்
இந்தியா

தினமும் 5 மணி நேரம் செல்போன்களில் செலவிடும் இந்தியர்கள்- ஆய்வில் தகவல்
- 70 சதவீதம் பேர் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுகின்றனர்.
- நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர்.
பெங்களூரு:
இந்தியாவை சேர்ந்த ஒரு தனியார் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் செல்போன் பயன்பாடுகள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து ஒரு ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வு அறிக்கையில் ஒவ்வொரு இந்தியரும் தினமும் சராசரியாக 5 மணி நேரம் செல்போன்களில் நேரத்தை செலவிடுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர் சமூக ஊடகங்களிலும், மற்றவர்கள் விளையாட்டு மற்றும் பல்வேறு வீடியோக்களை பார்ப்பதில் நேரத்தை செலவிடுவது தெரிய வந்துள்ளது.
ஒருவர் தினமும் செல்போனில் செலவிடும் நேரத்தை பொறுத்தவரை, இந்தோனேசியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது தெரியவந்தது. அதே நேரம் செல்போன் பயன்படுத்துவதில் மொத்த மணி நேரங்களை பொறுத்தவரை இந்தியா உலகின் மிகப்பெரிய பயனர் நாடாக இருப்பது தெரியவந்தது.
மேலும் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இதில் 5ஜி பயன்பாட்டிலும் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இது கடந்த 2024-ம் ஆண்டில் 27 மில்லியனாக உயர்ந்துள்ளது. இணைய சந்தாதாரர்களில் 40 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.