search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் சர்மா: இந்தியா 247 ரன்கள் குவிப்பு
    X

    ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் சர்மா: இந்தியா 247 ரன்கள் குவிப்பு

    • முதலில் ஆடிய இந்தியா 247 ரன்களைக் குவித்துள்ளது.
    • அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

    மும்பை:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்தில் இருந்து அதிரடியை ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 16 பந்தில் அவுட்டானார்.

    அடுத்து அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நாலா புறமும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 10 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த திலக் வர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 44 பந்தில் 113 ரன்கள் சேர்த்தது.

    சூர்யகுமார் யாதவ் 2 ரன்னும், ஷிவம் துபே 30 ரன்னும், பாண்ட்யா, ரிங்கு சிங் தலா 9 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அபிஷேக் சர்மா தனி ஆளாக இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 54 பந்தில் 13 சிக்சர், 7பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×