search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    துலீப் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா ஏ அணி
    X

    துலீப் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா ஏ அணி

    • ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2-வது இடம் பிடித்தது.
    • ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.

    அனந்தபூர்:

    துலீப் கோப்பை தொடரின் 3-வது மற்றும் கடைசி ரவுண்ட் ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெற்றன. இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி, கெய்வாட் தலைமையிலான இந்தியா சி உடன் மோதியது.

    இதில் முதலில் ஆடிய ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சி அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல் அவுட்டானது.

    63 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஏ அணி 286 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ரியான் பராக் 73 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 53 ரன்னும் எடுத்தனர். இந்தியா சி சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சி அணி களமிறங்கியது. அந்த அணியின் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில் இந்தியா சி அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா ஏ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    மற்றொரு போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் மோதின முதலில் ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் சதமடித்து 106 ரன் குவித்தார்.

    இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 116 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 87 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா டி சார்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், ஆதித்யா தாக்கரே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிக்கி புல் 119 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அவுட்டானார்.

    இதையடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா பி அணி 115 ரன்களில் சுருண்டது. இதனால் 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா டி அணி வெற்றி பெற்றது.

    மொத்தமாக விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஏ அணி 2024 துலீப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    கெய்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2வது இடமும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி மூன்றாம் இடமும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.

    Next Story
    ×