search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    துலீப் கோப்பை: மூன்றாம் நாள் முடிவில் இந்தியா டி அணி 244/5
    X

    துலீப் கோப்பை: மூன்றாம் நாள் முடிவில் இந்தியா டி அணி 244/5

    • இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் எடுத்தது.
    • இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்கள் எடுத்துள்ளது.

    அனந்தபூர்:

    ஆந்திராவின் அனந்தபூரில் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பி அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் சதமடித்து 106 ரன் குவித்தார்.

    தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், ரிக்கி புய் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

    இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, ஆடிய இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 116 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 87 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா டி சார்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், ஆதித்யா தாக்கரே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா டி அணி மூன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. ரிக்கி புல் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அவுட்டானார். இதுவரை இந்தியா டி அணி 311 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    மற்றொரு லீக் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி அணி பவுலிங்'தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷஷ்வாத் ராவத் 124 ரன்னில் அவுட்டானார். ஆவேஷ் கான் அரை சதம் கடந்தார். ஷாம்ஸ் முலானி 44 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சி சார்பில் விஜயகுமார் 4 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும், விஜயகுமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்தியா சி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அபிஷேக் பரோல் அரை சதம் கடந்து 82 ரன் எடுத்தார். புல்கிட் நாரங் 35 ரன்னும், பாபா இந்திரஜித் 34 ரன்னும் எடுத்தனர். இறுதியில் இந்தியா சி அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா ஏ அணி சார்பில் ஆவேஷ் கான், அக்யூப் கான் தலா 3 விக்கெட்டும், முலானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 6 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்தது. ரியான் பராக், ஷஷ்வாத் ராவத் அரை சதம் கடந்தனர். இதுவரை இந்தியா ஏ அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றது.

    Next Story
    ×