search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க முடிவு
    X

    வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க முடிவு

    • முதல் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
    • டெஸ்ட் தொடருக்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிராக டி20 தொடர் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி 27-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடருக்கு பிறகு டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    வங்கதேசத்தைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

    எனவே அந்த முக்கியமான தொடர்களில் சுப்மன் கில் பங்கேற்க வேண்டும் என்பதால் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×