search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தி.மு.க.வின் அத்துமீறல்களை தொடர்ந்து ஈரோடு தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்- டி.ஜெயக்குமார் பேட்டி
    X

    தி.மு.க.வின் அத்துமீறல்களை தொடர்ந்து ஈரோடு தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்- டி.ஜெயக்குமார் பேட்டி

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவகிறது.
    • தி.மு.க. அத்துமீறல்கள், அநியாயங்கள் செய்தாலும் அதையும் தாண்டி அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    சென்னை:

    சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தி.மு.க. அரசில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது.

    எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் கனிமொழிக்கு பழைய வரலாறு தெரியாது. அ.தி.மு.க. ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆம்லேட், டீ போடும் தி.மு.க. அமைச்சர்கள் பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இலங்கை பயந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவகிறது.

    ஈரோடு கிழக்கு தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் மீது தி.மு.க. பழியை போடும். தி.மு.க. அத்து மீறல்கள், அநியாயங்கள் செய்தாலும் அதையும் தாண்டி அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×