என் மலர்
சிரியா
- ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கிளர்ச்சியாளர்கள் சூளுரை.
- துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கினர்.
ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் இன்று காலை, சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததை பகிரங்கமாக அறிவித்தனர். தலைநகரில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி சிரியாவில் முடிவுக்கு வந்தது. கிளர்ச்சியாளர்கள் குழு டமாஸ்கஸ்-ஐ நுழைந்ததை அடுத்து பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு விமானத்தில் தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் எங்கு சென்றுள்ளார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
சிரிய அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் தூக்கி எறியப்பட்ட நிலையில், அந்நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை சிரிய அரசு தொலைக்காட்சி மூலம் கிளர்ச்சியாளர்கள் குழு வீடியோ வெளியிட்டு அறிக்கை ஒன்றை ஒளிபரப்பியது.
இந்த அறிக்கையை படித்த நபர், டமாஸ்கஸ்-ஐ ஆசாத்-இடம் இருந்து விடுவிக்கப்பட்டதை நாங்கள் அறிவிக்கிறோம். உலகம் முழுக்க இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது, என்று தெரிவித்தார்.

கடந்த பத்து நாட்களுக்குள் சிரியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்ட கிளர்ச்சியாளர் குழு இன்று காலை தலைநகர் டமாஸ்கஸ்-ஐ கைப்பற்றிய நிலையில், சிரியா அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இதனை சிரிய பிரதமர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய சிரிய பிரதமர் முகமது காசி ஜலாலி, "அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு தன் கையை நீட்ட தயாராக இருக்கிறது. அரசு தன் செயல்பாடுகளை இடைநிலை அரசாங்கத்திற்கு மாற்றவும் தயாராக இருக்கிறது. நான் என் வீட்டில் இருக்கிறேன், நான் வெளியேறவில்லை. இதற்குக் காரணம் நான் இந்த நாட்டை சேர்ந்தவன்." ," என்று கூறினார்.
மேலும், பணியை தொடர தனது அலுவலகத்திற்கு செல்வதாக கூறிய அவர், பொது சொத்துக்களை சிதைக்க வேண்டாம் என்று சிரிய குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்தார். ஆசாத் தப்பியோடினாரா என்பது பற்றி தகவல்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
சிரியாவில் பஷார் அல் ஆசாத்-இன் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து டமாஸ்கஸ் நகரில் பொது மக்கள் வெளியே வந்து மசூதிகளில் பிரார்த்தனை செய்தும், சதுரங்களில் கொண்டாடவும் செய்தனர். இதோடு "கடவுள் பெரியவர்" என்றும் பஷார் அல் ஆசாத் எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.
சிலர் தங்களது காரின் ஹாரன்களை ஒலித்தனர். சில பகுதிகளில், கொண்டாட்டத்தின் அங்கமாக துப்பாக்கி குண்டுகளும் முழங்கின.
- சிரியாவை விட்டு வெளியேறியதாக தகவல்.
- பஷார் ஆசாத் விமானத்தில் புறப்பட்டதாக ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
சிரிய அதிபர் பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சிரிய எதிர்க்கட்சி போர் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். சிரிய தலைநகருக்குள் நுழைய தொடங்கியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை டமாஸ்கஸ்-இல் இருந்து பஷார் ஆசாத் விமானத்தில் புறப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் ரமி அப்துர் ரஹ்மான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து அப்துர் ரஹ்மானின் கருத்துக்கள் வெளியாகி உள்ளன. தலைநகரில் வசிப்பவர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சத்தங்களை கேட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிரிய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை அறிவிப்பு எதுவும் இல்லை.
- சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.
ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.
இந்த நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததாக சிரிய கிளிர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், இது குறித்து சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இது குறித்து அந்நாட்டின் ஷாம் எப்.எம். ரேடியோ வெளியிட்ட தகவல்களில் டமாஸ்கஸ் விமான நிலையம் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய தலைநகர் வடக்கில் உள்ள சயித்நயா ராணுவ சிறைக்குள் நுழைந்து தங்களது குழுவை சேர்ந்த சிறைவாசிகளை விடுவித்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ்-ஐ அரசாங்கப் படைகள் கைவிட்டதைத் தொடர்ந்து முந்தைய நாள் இரவு, எதிர்க்கட்சிப் படைகள் அதைக் கைப்பற்றின. ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான வதந்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
- அதிபர் ஆசாத்தின் புகைப்படத்தைப் பள்ளிச் சுவர்களில் கிராப்பிடி ஆக வரைந்து எதிர்ப்பை பதிவு செய்த பள்ளி மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்
- முந்தைய உள்நாட்டு போரின் போது தாரா கிளர்ச்சியின் பிறப்பிடமாக இருந்தது
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.
ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.

ராணுவம் அங்கிருந்து வெளியேறிய நிலையில் முந்திய உள்நாட்டு போரின் போது உதவிய ரஷியா மீண்டும் போர் விமானங்களை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் துரிதமாக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் கடந்த வியாழனன்று ஹமா நகரையும் கைப்பற்றினர்.
கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நகர் பகுதியில் தாக்குதல் தொடர்ந்தால் மக்களும் பாதிக்கப்படுவர் என்பதால் ஹமா நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ராணுவம் தெரிவித்தது.
தொடர்ந்து மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகருக்கு கிளர்ச்சியாளர்கள் குறிவைத்துள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். ஹோம்ஸ், கிழக்கு பகுதி நகரங்களுடன் டமாஸ்கஸ் ஐ இணைப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில் தாரா [Daraa] நகரையும் ராணுவத்திடம் இருந்து கிளர்ச்சியாளர்கள் இன்று கைபட்டறியுள்ளனர். முந்தைய உள்நாட்டு போரின் போது தாரா கிளர்ச்சியின் பிறப்பிடமாக இருந்த ஒன்றாகும்.
இங்கே 2011 ஆம் ஆண்டில் அதிபர் ஆசாத்தின் புகைப்படத்தைப் பள்ளிச் சுவர்களில் கிராப்பிடி ஆக வரைந்து எதிர்ப்பை பதிவு செய்த பள்ளி மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தாரா நகரில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அதுவே உள்நாட்டு போராக பின்னர் பரிணமித்தது.

அலெப்போ - ஹாமா ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில் தாரா நகரை உள்ளூர் ஆயுதக்குழு ஒன்று கைப்பற்றி உள்ளதாக சிரிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.
தாரா நகரின் 90 சதேவீதம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்ற நிலையில் ராணுவம் அங்கிருந்து வெளியேறி வருகிறது. ஜோர்டான் நகரில் எல்லையில் தாரா மாகாண பகுதிகள் அமைந்துள்ளதால் நிலைமை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த உள்நாட்டு போரின் போது நாடு முழுவதும் 500,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- டமாஸ்கஸ் - இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் அலெப்போ
- ஹோம்ஸ் நகரை கைப்பற்றினால் டமாஸ்கஸ் நோக்கி எளிதில் முன்னேற முடியும்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் ஆசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.
ஆசாத்தை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் ஆசாத் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் முதல் ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.
அல் கொய்தாவுடான் நெருங்கிய தொடர்பில் இருந்த இவ்வமைப்பு ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ளது. கடந்த வாரம் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் படையினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்தது. அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை கைப்பற்றிய நிலையில் ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.

சிரியாவுக்கு ஆதரவாக மீண்டும் ரஷியா ராணுவ விமானங்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தலைநகர் டமாஸ்கஸ் - இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கட்டுபாட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து நேற்றைய தினம் ஹமா நகரையும் கைப்பற்றி உள்ளனர்.

ஹமா[hama] நகரம் தலைநகர் டமாஸ்கஸ் - அலெப்போ இடையிலான நேரடி இணைப்புப் பாதை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நகர் பகுதியில் தாக்குதல் தொடர்ந்தால் மக்களும் பாதிக்கப்படுவர் என்பதால் ஹமா நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனால் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் ஹமா நகரம் சென்றுள்ளது. கிழக்கில் உள்ள இரண்டு நகர்களை தொடர்ந்து தற்போது மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் [homs] நகரைக் கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தாக்குதலுக்கு அஞ்சி ஆயிரக்கணக்கானோர் ஹோம்ஸ் நகரை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஹோம்ஸ், கிழக்கு பகுதி நகரங்களுடன் டமாஸ்கஸ் ஐ இணைக்கிறது. இந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றும் பட்சத்தில் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சிப் படைகள் முன்னேறுவது எளிதாக அமையும்.
- அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பு பேணி வந்துள்ளது.
- அலெப்போ நகர் வரலாற்றுக் காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.
பஷரை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். போராட்டக்காரர்களை ஒடுக்க ரஷியா பஷருக்கு பேருதவி செய்தது.
2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷியா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் அதிபர் பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு ஆங்காங்கே போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.
முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் ராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமரிக்கா மற்றும் ஐநா சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது
இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ரஷிய ராணுவம் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்றுக் காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது.
- தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் அலெப்போ உள்ளது.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.
பஷரை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். போராட்டக்காரர்களை ஒடுக்க ரஷியா பஷருக்கு பேருதவி செய்தது.
2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷியா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் அதிபர் பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு அங்கங்கே போராட்டங்கலகள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.

முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் ராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமரிக்கா மற்றும் ஐநா சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் அலெப்போ நகரில் இருந்து ராணுவம் தாற்காலிகமாக பின்வாங்கி உள்ளது.

மேலும் அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இன்று [சனிக்கிழமை] அலெப்போ புறநகர்ப் பகுதியில் ரஷிய மற்றும் சிரிய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்று காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நீடிப்பு.
- சிரியா, ஈராக், ஈரான் ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
ஈரான் மண்ணில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் உடனடியாக தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. கடந்த 1-ந்தேதி திடீரென சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அனைத்து ஏவுகணைகளையும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தால் தடுத்து முறியடித்தது.
அதில் இருந்து ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 25 நாட்கள் கழித்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனால் ஈரான் எப்போது வேண்டுமென்றாலும் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரான், ஈரான் மற்றும் சிரியா ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக தங்களது வான் எல்லைகளை மூடியுள்ளது. விமான சேவையை ரத்து செய்துள்ளது.
ஆனால் ஈரான் விரைவில் விமான சேவையை தொடங்குவோம் எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஈரான் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஈரான் வான் எல்லையில் சுதந்திரமாக பறக்கும் வகையில் வான் எல்லைகள் திறக்கப்படடுள்ளன இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட குளோபன் ஹைட்ஸ் பகுதியில் இருந்தும், லெபனானில் இருந்து தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது வான் பாதுகாப்பை ஏற்படுத்தும் தேவையை அதிரிக்க வைத்துள்ளது என சிரியா தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஷியா மற்றும் அரசியல் குழுக்கள் ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
- ஹிஸ்புல்லா கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலியப் படைகளுடன் மோதி வருகிறது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 13 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் கூட்டாளியான ஹிஸ்புல்லா கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலியப் படைகளுடன் மோதி வருகிறது.
லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை அனுப்ப ஈரானுக்கு சிரியா ஒரு முக்கிய வழி என்பதால், சிரியாவில் ஈரானிய ஆதரவு குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
- சிரியாவின் மத்திய நகர் ஹமாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- சிரியாவில் நில அதிர்வை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருக்கிறது. இது 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சிரியா நாட்டின் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
ஹமா மட்டுமின்றி சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11:56 மணியளவில் நலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் 3.7 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னோடியாக இது இருக்கலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- குட்ஸ் படைப்பிரிவினர் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
- இவர்கள் அரசுக்கு ஆதரவாகவும், சிரியாவில் ரஷியாவின் ஆதரவு பெற்றவர்களும் ஆவார்கள்.
சிரியாவில் குட்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 22 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது சுக்னா பகுதியாகும். இது ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகும்.
குட்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த இவர்கள் அரசுக்கு ஆதரவாகவும், சிரியாவில் ரஷியா ஆதரவு பெற்ற பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சண்டையிடுபவர்களும் ஆவார்கள்.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்கவில்லை. ஆனால் மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் இந்த தாக்குதலுக்குப்பின் ஐஎஸ் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
13 வருட உள்நாட்டு சண்டையில் குட்ஸ் படைப்பிரிவினர் சிரியா அரசாங்கத்திற்கு ஆதரவாக சண்டையிட்டு வருகிறது. இந்த உள்நாட்டு சண்டையில் சுமார் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உள்நாட்டு சண்டைக்கு முன்னதாக இருந்த 23 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
குட்ஸ் படைப்பிரிவு பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிஹாத் குரூப்பில் உள்ளது. அதில் இருந்து சிரியாவில் செயல்பட்டு வரும் குட்ஸ் படைப்பரிவு மாறுபட்டது.
2019-ல் ஐஎஸ் படைகள் தோற்கப்பட்ட போதிலும், ஐஎஸ் ஸ்லீப்பர் செல்கள் சிரிய அரசாங்க படைகள், அமெரிக்க ஆதரவு படைகள், குர்திஷ் தலைமையிலான சிரியா ஜனநாயக படைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டுப்பட்டு வருகிறது.
- ஈரான் விமானப்படை தளம் மற்றும் அணுசக்தி தளம் அருகே போர் விமானங்கள் பறந்ததாக கூறப்படுகிறது.
- சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு சிஸ்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் சேதம் அடைந்தது. இரண்டு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்த ஈரான், கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நோக்கி தாக்குதல் நடத்தியது. ஆனால் அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அனைத்து தாக்குதலையும் முறியடித்தது.
இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இஸ்ரேல் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் சிரியாவில் உள்ள வான்பாதுகாப்பு சிஸ்டத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சேதம் அடைந்ததாக சிரியாவின் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக ஈரானின் முக்கியமான விமானப்படை தளம் மற்றும் அணுசக்தி தளம் அருகே அதிக சத்தத்துடன் போர் விமானங்கள் அதிக சத்தத்துடன் காணப்பட்டதாகவும், டிரோன்கள் பறந்ததாகவும் தகவல் வெளியானது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இடம் கிழக்கு ஈரானில் இருந்து சிரியாவிற்கு வடக்குப் பகுதியில் 1500 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் இஸ்பஹான் இடமாகும்.
வெள்ளிக்கிழமை காலையில் ஈரான் வான் பாதுகாப்பு பேட்டரிகளை ஏவியது. போர் விமானங்கள் பறந்தது எனக் கூறப்பட்டதால் சில விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சில விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
இந்த பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் கருத்து கூற மறுத்துவிட்டார்.






