என் மலர்
சிரியா
- ஹிஸ்புல்லாவினர் சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தினர்.
- மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவினர் கடந்த சனிக்கிழமை சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தி லெபனான் எல்லையில் அவர்களைக் கொன்றதாக சிரிய இடைக்கால அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால் ஹிஸ்புல்லா தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையே இந்த சம்பவத்தால் லெபனான் - சிரியா இல்லையில் தற்போது மோதல் வெடித்தது.
எல்லையில் சிரிய வீரர்களைக் கொன்ற ஹிஸ்புல்லா கூட்டங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக சிரிய ராணுவம் வட்டாரங்ககள் தெரிவிக்கின்றன.

எல்லையில் உள்ள சிரிய கிராமமான ஹெர்மல் மீது பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இருந்து மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
பதிலாக வடகிழக்கு லெபனானில் உள்ள எல்லை நகரமான அல்-காசர் மீது சிரியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லெபனானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூத்த ஹிஸ்புல்லா சட்டமன்ற உறுப்பினர் ஹுசைன் ஹாஜ் ஹசன் பேட்டி ஒன்றில், சிரியாவை சேர்ந்த போராளிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள எல்லை கிராமங்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
லெபனானின் அல்-காசர் எல்லைக் கிராமத்தில் நிலைகொண்டுள்ள, சிரிய இராணுவத்திற்கும், முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்துடைய ஆதரவு குழுக்களுக்கும், ஆயுதமேந்திய லெபனான் ஷியா குழுக்களுக்கும் இடையேய சமீப காலமாக வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிரியாவும், லெபனானும் எல்லையில் தங்கள் படையினரை அதிகம் நிலைநிறுத்தி வருகின்றன.
இதற்கிடைய சிரியாவின் லடாகியாவில் உள்ள ஒரு ஆயுதப் பிரிவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் சிவில் பாதுகாப்புத் துறை அறிவித்தது. நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உலோகத் துகள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிப்புவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்திலும், உயர் பதவிகளிலும் இருந்து வந்தார்கள்.
- பெண்கள் நிர்வாணமாகத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) இன் இடைக்கால அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளுக்கும் முன்னாள் அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
கடந்த வியாழன் முதல் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அந்நாட்டின் சிறுபான்மையினரான அலாவைட் பிரிவை பின்பற்றுபவர்கள் பலரை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்திலும், உயர் பதவிகளிலும் இருந்து வந்தார்கள்.
எனவே மூன்று மாதங்களுக்கு ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அலாவைட்டுகள் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சிரியாவின் அலாவைட்கள் அதிகம் இருக்கும் கடலோர மாகாணமான லடாகியாவில் தற்போது வன்முறை வெறியாட்டங்கள் வருகின்றன.

பிரிட்டனைச் சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பொது மக்களில் 745 பேரும், அரசு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 125 பேர் மற்றும் முன்னாள் ஆசாத்-இன் ஆதரவு கொண்ட ஆயுதப் படையைச் சேர்ந்த 148 பேரும் இந்த உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் அலாவைட் சிறுபான்மையினர் என்று கூறப்படுகிறது.
வன்முறையைக் கட்டுப்படுத்த, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளைப் பாதுகாப்புப் படையினர் மூடிவிட்டனர். கண்ணில் படுபவர்களை அரசு படைகள் மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக்கொல்வதாகத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

எங்கும் சடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகிறது என்றும் வன்முறையின் போது நடந்த கொடூரமான சம்பவங்கள் குறித்தும் அங்கிருந்தவர்கள் அசோசியேட்டட் பிரஸ் (AP) ஊடகத்திடம் விவரித்துள்ளனர்.
அங்கு பெண்கள் நிர்வாணமாகத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதாக அசோசியேட் பிரஸ் பேட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று பனியாஸ். இங்கு சாலைகளிலும் கட்டிடங்களின் கூரைகளிலும் இறந்த உடல்கள் கிடந்தன. துப்பாக்கி ஏந்தியவர்கள் அங்கிருந்தவர்களை உடலை புதைப்பதைத் தடுத்தனர் என்று பேட்டியளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அலாவைட் கிராமங்களில் வசிப்பவர்கள், தங்கள் சமூகத்தில் பலரின் வீடுகள் சூறையாடப்பட்டு, பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அசோசியேட் பிரஸ் அறிக்கை தெரிவிகிறது.

மக்கள் தங்கள் வீடுகளும் கார்களும் எரிவதைக் கண்டதும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் சிலர் உயிர் பிழைக்க முடிந்தது, பலர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர் என்று பேட்டியளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
- இதுவரை மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- 148 பயங்கரவாதிகள் இந்த உள்நாட்டு பேரில் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் சிரிய அதிபர் பஷர் ஆசாத்-க்கு ஆதரவானோர், பாதுகாப்பு படையினர் மற்றும் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட கொலைகளில் இதுவரை மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 750 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.
பிரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பொது மக்களில் 745 பேரும், அரசு பாதுகாப்பு படையை சேர்ந்த 125 பேர் மற்றும் முன்னாள் அதிபர் பஷார் ஆசாத்-இன் ஆதரவு கொண்ட ஆயுத படையை சேர்ந்த 148 பயங்கரவாதிகள் இந்த உள்நாட்டு பேரில் உயிரிழந்துள்ளனர்.
கடலோர பகுதிகளான லடாகியா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் சிறிய ரக உணவகங்களும் மூடப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
சிரியாவில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு சவால் விடும் வகையில், கடந்த வியாழன் கிழமை தொடங்கிய தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளது. முன்னாள் அதிபர் பஷார் ஆசாத் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அவரது ஆயுதப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
- அவர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் உள்ள அலவைட் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள்.
- ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வலுத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் மோதல் தீவிரமடைந்துள்ளது. சிரியாவின் கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ஜப்லே நகரில் நேற்று வன்முறை வெடித்தது. அங்குள்ள மூன்று கிராமங்களில் ஆயுதமேந்திய ஆசாத் ஆதரவு குழுவினரை அரசு ஆதரவு படைகள் வெளியேற்ற முயன்றனர். அப்போது நடந்த மோதலில் 70 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் சிரிய அரசு ஆதரவு படையினரும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் கடந்த இரண்டு நாட்களில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றனர் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் உள்ள அலவைட் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பக அதிகாரி ராமி அப்துல் ரஹ்மான் இன்று (சனிக்கிழமை) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
- இறந்தவர்களில் 16 பாதுகாப்புப் படையினரும் 28 அசாத் ஆதரவுப் போராளிகளும் அடங்குவர்.
- ஆசாத்தின் ஆட்சியில் ராணுவ தளபதியாக இருந்த சுஹைல் அல்-ஹசனுடன் தொடர்புடைய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள்.
சிரியாவில் கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தேதி அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். தப்பியோடிய ஆசாத் ரஷியாவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபர் ஆசாத் தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.
சிரியாவின் கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ஜப்லே நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) வன்முறை வெடித்துள்ளது. அங்கு மலைப்பாங்கான கடலோர கிராம பகுதியில் துப்பாக்கிகளுடன் கூடியிருந்த அசாத் விசுவாசிகளை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் முயன்றனர்.
அப்போது நடந்த மோதல்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) இதை உறுதிப்படுத்தி உள்ளது.
இறந்தவர்களில் 16 பாதுகாப்புப் படையினரும் 28 அசாத் ஆதரவுப் போராளிகளும் அடங்குவர். படுகாயமடிந்த கிளர்ச்சியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசுவாசிகள், ஆசாத்தின் ஆட்சியில் ராணுவ தளபதியாக இருந்த சுஹைல் அல்-ஹசனுடன் தொடர்புடைய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
- பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
- அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் இனத்தவர் தலைமையிலான படைகளுடன் மோதலில் ஈடுபடுகின்றன.
வடக்கு சிரியா நகரத்தின் புறநகர் பகுதியில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரின் புறநகர் பகுதியில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரில் குண்டு வெடித்தது.
இதில் 1 ஆண் மற்றும் 14 பெண்கள் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் சிரிய சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் 15 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
கடந்த டிசம்பரில் அதிபர் ஆசாத் ஆட்சி கிளர்ச்சிக் குழுக்களால் கவிழ்க்கப்பட்டது முதலே இப்பகுதிகளில் வன்முறை நிலவி வருகிறது.
சிரிய தேசிய இராணுவம் என்று அழைக்கப்படும் துருக்கிய ஆதரவு பிரிவுகள், அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் இனத்தவர் தலைமையிலான படைகளுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த புதனன்று நாட்டின் இடைக்கால அதிபாராக அல்- நுஸ்ரத் என்ற முக்கிய கிளர்ச்சிப் படையின் தலைவரான அஹ்மத் அல்-ஷாரா நியமிக்கப்பட்டார்.
நேற்றைய தினம் சவுதி அரேபிய இளவரசரை அந்நாட்டுக்கு சென்று அஹ்மத் அல்-ஷாரா சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று கூறினார்.
சிரியா நாட்டின் இடைக்கால அதிபராக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஷரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இடைக்கால அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கை துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ஹசன் அப்துல் கானி அறிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள ஆயுதமேந்திய பிரிவுகள் கலைக்கப்படுவதையும் அவர் அறிவித்தார். அவை அரசு நிறுவனங்களில் ஒருங்கிணைக்கப்படும் என்றும், புதிய அரசியலமைப்பு வரைவு செய்யப்படும் வரை தற்காலிக சட்டமன்ற குழுவை அமைக்க அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அகமது அல் ஷரா கடந்த மாதம் அசாத்தை வீழ்த்திய தாக்குதலுக்கு தலைமை தாங்கிய இஸ்லாமிய முன்னாள் கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் தலைவர் ஆவார். அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆளும் கட்சியாக மாறியுள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தில் முன்னர் அது நடத்திய உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளது.
அசாத்தின் வீழ்ச்சியுடன் முன்னாள் சிரிய ராணுவம் சரிந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த தேசிய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளை உருவாக்க அல் ஷரா அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இடைக்கால நிர்வாகம் எவ்வாறு முன்னாள் கிளர்ச்சிக் குழுக்களை ஒன்றிணைக்க முடியும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
- சிரியா அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- இஸ்ரேலின் தாக்குதலின்போது சிரியாவில் ரிக்டர் அளவுகோலில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சிரியா மீது இஸ்ரேல் நிலநடுக்க வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது சிரியாவில் ரிக்டர் அளவுகோலில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை பிடித்துள்ளதால் அதிபர் ரஷியாவுக்கு தப்பி ஓட்டம்.
- டமாஸ்கஸ் அருகில் உள்ள கிராமம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சீரியாவில் அதிபருக்கு எதிராக போராடிய கிளர்ச்சிக்குழு டாமஸ்கஸை பிடித்தது. இதனால் தலைநகரில் இருந்து அதிபர் பஷர் ஆசாத் தப்பியோடினார். ரஷியா அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் டமாஸ்கஸ் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கொள்ளையர்கள் புகுந்து சூறையாடி வருகின்றனர். பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் கண்ணில் பட்டதையெல்லாம் சுருட்டிக்கொண்டு ஓடுகிறார்கள். இதனால் கிளர்ச்சிக்குழு அந்த கிராமத்தில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
டமாஸ்கஸ் அருகில் உள்ள ஹுசைனியா கிராமம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் பறிகொடுத்த நபர் ஒருவர் கூறுகையில் "எங்களுடைய பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்படடன. என்னுடைய 25 வருட வீடு கொள்ளைக்கு உள்ளானது. அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை என்றால், வீட்டை தீ வைத்து கொளுத்துகின்றனர். வீட்டில் உள்ள எல்லாவற்றையும் கொள்ளையடித்து விடுகிறார்கள்" என்றார்.
மற்றொரு நபர் (பள்ளி முதல்வர்) "என்னுடைய வீடு கொள்ளைடிக்கப்பட்டது. என்னால் தடுக்க முடியவில்லை. செக் பாயிண்ட் அமைத்து கொள்ளையர்களை தடுப்போம் என கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள கிராமத்தில் இருந்து அதிக அளவில் கொள்ளை அடிக்க இங்கே வருகிறார்கள்" என்றார்.
கொள்ளையடிக்கும் நபர்கள் வெடிகுண்டுகளை வீசி குடியிருப்புகளை தீ வைத்து கொளுத்தி வருவதாகவம் தெரிவித்துள்னர். இந்த குடியிறுப்புகள் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்கிய இடமாகும்.
கொள்ளையடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பல கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். பலர் கொள்ளையடித்த பொருட்களை கையில் வைத்துக் கொண்டு மறைந்து இருந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
- அனைவரும் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர்.
- பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
மீட்கப்பட்டவர்களில் ஜம்மு காஷ்ரீரை சேர்ந்த 44 ஜைரீன்கள் அடங்குவர். இவர்கள் சைதா ஜைனாபில் சிக்கியிருந்தனர். சிரியாவில் சிக்கித் தவித்த இந்தியர்கள் கோரிக்கையை ஏற்கும் வகையில், அங்குள்ள பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களை மீட்கும் பணிகளை டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டன. முதற்கட்டமாக 75 பேர் மீட்கப்பட்டுள்ள போதிலும், சில இந்தியர்கள் சிரியாவில் உள்ளனர்.
சிரியாவில் உள்ள இந்தியர்கள் டமாஸ்கஸில் உள்ள தூதரகத்துடன் +963 993385973 என்ற உதவி எண்ணிலும், வாட்ஸ்அப்பிலும், மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பில் இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
- சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர்.
டமாஸ்கஸ்:
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்கள் மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்காமல் இருக்க வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் அரசு படைகள் வெளியேறிய பகுதிகளில் இஸ்ரேல் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை கைப்பற்றியுள்ளது.
வடக்கு சிரியாவில், அமெரிக்காவின் ஆதரவுடன் குர்திஷ் தலைமையிலான படைகளிடமிருந்து மன்பிஜ் நகரத்தை எதிர்க்கட்சி படைகள் கைப்பற்றியதாக துருக்கி கூறியது. கடந்த காலத்தில் சண்டையிட்ட ஆயுதக் குழுக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதை இது காட்டுகிறது.
ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
சிரியாவில் அரசாங்கம் இன்னும் செயல்பட்டு வருவதாகவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் பிரதமர் முகமது காஜி ஜலாலி கூறி உள்ளார்.
"அதிகார மாற்றம் சுமுகமாக இருக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம். பாதுகாப்பு நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் அரசாங்கம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. கிளர்ச்சிக் குழு தலைவர் அபு முகமது அல்-கோலானி என்று அழைக்கப்படும் அஹ்மத் அல்-ஷாராவை சந்திக்க தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
- மேற்கு நாடுகள் ரஷியா மீது பல தடைகள் விதித்திருந்தும் ஆசாத்தின் விஸ்வாசம் ரஷியா பக்கமே உள்ளது.
- துருக்கி HTS ஐ விரும்பாத போதிலும் சிரியாவில் உருவான கிளர்ச்சியை ஆதரித்து வருகிறது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் 2011 முதல் 13 ஆண்டுகளாக பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிட்டனர். ஆனால் அவரை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை.
திடீரென கடந்த வாரத்தில் ஒரு சாதராண நாளில் தொடங்கி 13 நாட்களுக்கும் குறைவாக நீடித்த ஒரு தாக்குதலில், அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது. அதிபர் ஆசாத் நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இடம் பொருள் ஏவல் என்றால் அது மிகையாகாது.
இடம் பொருள் ஏவல்
'ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்' என்ற திருக்குறளே இங்கேயும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
கடந்த 2011 தொடங்கிய உள்நாட்டுப் போரில் அதிபர் ஆசாத்துக்கு பக்கபலமாக ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் கிளர்ச்சியை ஒடுக்க பேருதவியாக இருந்தது. கடைசியாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த சொற்ப அலெப்போ நகர் பகுதிகளையும் ரஷியா கைப்பற்றி 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஆசாத்துக்கு பரிசளித்தது ரஷியா. தற்போது மேற்கு நாடுகள் ரஷியா மீது பல தடைகள் விதித்திருந்தும் ஆசாத்தின் விஸ்வாசம் ரஷியா பக்கமே உள்ளது.

ஆசாத்
இருப்பினும் ரஷியா தற்போது உக்ரைன் போரில் ஈடுபட்டு வருவதால் சிரியாவில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஈரான் இஸ்ரேலுடன் மோதிக்கொண்டு உள்ளது. ஆசாத்தின் இரண்டு கூட்டாளிகளும் திசைதிருப்பட்டிருக்கும் நிலையில் சிரியா எடுப்பார் கை பிள்ளையாக இருப்பது காத்திருந்த கிளர்ச்சியர்களுக்கு உறைத்துள்ளது
மேலும் முந்திய கிளர்ச்சியில் போராட்டக்காரர்களை ஒடுக்க ஆசாத்துக்கு முக்கிய உதவியாக இருந்த மற்றொரு அமைப்பு அண்டை நாடான லெபனானில் இயங்கி வந்த ஹசன் நஸ்ரல்லா தலைமையிலான ஹிஸ்புல்லா. ஆனால் தற்போது இஸ்ரேலுடனான மோதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டு பெரும் படைகளையும் ஹிஸ்புல்லா இழந்துள்ளது.
நவம்பர் 27 அன்று லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் தங்களை சேதங்களில் இருந்து மீட்டுருவாக்கம் செய்து வரும் ஹிஸ்புல்லா இந்த முறை ஆசாத்துக்கு உதவி செய்யாமல் கை விரிந்துள்ளது.
ஊழல் - கொள்ளை
இதற்கிடையே சிரியாவிலும் உள்நாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரிய அளவிலான ஊழல் மற்றும் அதிகாரிகளே கொள்ளையடித்த காரணத்தால் ராணுவ பீரங்கிகள் மற்றும் விமானங்களில் எரிபொருள் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் வந்துள்ளது.
மேலும் பல சிரியர்கள் தங்கள் நாட்டு மக்களுடன் சண்டையிட விரும்பாததால் லெபனானுக்கு தப்பிச் சென்றதால் ராணுவ வீரர்கள் கையில் ஆயுதங்கள் இருந்தாலும் எந்த திசையிலும் இருந்து உதவி இல்லாமல் மன உறுதியை இழந்திருந்தது கிளர்ச்சியாளர்களுக்குச் சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
அல்-கோலானி
கிளர்ச்சிக் கூட்டணியின் முக்கிய தலைமையாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்பு செயல்பட்டது. முந்தைய காலங்களில் அல்-கொய்தாவுடனான தொடர்பை பேணி வந்த அமைப்பே இந்த HTS .

அல்-கோலானி
இந்த அமைப்பின் தற்போதைய தலைவரான அபு முகமது அல்-கோலானி திட்டத்தின் பேரிலேயே கடந்த வாரம் இந்த முழு அளவிலான தாக்குதல் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் கோலானி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

HTS
துருக்கியின் கை
துருக்கி HTS ஐ விரும்பாத போதிலும் சிரியாவில் உருவான கிளர்ச்சியை ஆதரித்து வருகிறது. எனவே தற்போதைய நடவடிக்கையில் துருக்கியின் பங்கு உள்ளதாகவும் அரசியல் அரங்கில் அனுமானங்கள் எழுந்துள்ளன. ஆனால் துருக்கி வெளியுறவு துணை அமைச்சர் நுஹ் யில்மாஸ் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

குஷியில் இஸ்ரேல்
பஷர் அல் அசாத் ஆட்சியின் வீழ்ச்சியில் மற்றொரு வெற்றியாளர் இஸ்ரேல். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஈரான், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை வழங்கிய பாதையைத் தடுத்துள்ளது.
ஏற்கனவே பலவீனமான ஹிஸ்புல்லாவை இப்போது இஸ்ரேல் அதிக பலத்துடன் அழிக்க முடியும். கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் சிரியா முழுவதும் அபாயகர ஆயுதங்கள் இருக்கும் இலக்குகளை அழித்து அவை கிளர்ச்சியாளர்கள் வசம் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மற்றொரு புறம் ரஷிய ஆதரவு ஆசாத்தை ஒழித்துக்கட்ட மேற்கு நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஊக்கமளித்து உதவியதாகவும் அரசியல் அரங்கில் கருத்து நிலவுகிறது.