என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக"

    • அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எதிர்காலம் அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட வலிமையான இயக்கத்தை என்ஜின் இல்லாத கார் என்றும் அதை பா.ஜ.க. என்ற லாரி கட்டி இழுக்க முயன்று வருகிறது என்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி உறுதியான கூட்டணி. இந்த கூட்டணியால் தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கலங்கி போய் ஒரு நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி உள்ளார்.

    இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு தடையாக இருப்பது அ.தி.மு.க. தான்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை கண்டு நடுங்கிப் போயிருக்கும் உதயநிதி ஸ்டாலின் வரம்பு மீறி 54 ஆண்டு பொது வாழ்வில் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வந்த அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    வாரிசு அரசியலில் டெல்லியில் முடிவுரை எழுதப்பட்டு தற்போது பீகாரிலும் வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுதி மக்கள் தந்த தீர்ப்பை கண்டு தான் ஸ்டாலினும், உதயநிதியும் அரண்டு போய் உள்ளார்கள்.

    அந்த காரில் சென்றார், இந்த காரில் சென்றார் என காரின் மீது கவனம் செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும். வகுப்பு அறையில் மாணவிகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். சக மாணவர்களால் மாணவன் அடித்து கொலை.

    இப்படி எங்கே செல்கிறது இளைய சமுதாயம்? அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், இளைஞரணி என்ற பெயரில் அ.தி.மு.க.வை பற்றியும் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் வசை பாடி தான் கலங்கி நிற்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

    இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி என்ற சாமானியர் முடிவுரை எழுதும் வகையில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். அ.தி.மு.க.வை வெற்றிப்பாதை அழைத்துச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எத்தனை கோடி விமர்சனங்கள் வைத்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்கொள்வார்கள். தமிழக மக்கள் உங்கள் விமர்சனத்தை புறம் தள்ளுவார்கள்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்வார். தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் அநாகரீகம் இன்றி எத்தனை விமர்சனம் செய்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள், எள் முனையளவும் பின் வாங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 

    • திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • பா.ஜ.க. நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனை தமிழக அரசும் கோவில் நிர்வாகமும் நடைமுறைப்படுத்தாமல் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்பினரும் தீபம் ஏற்ற வேண்டும் என போராடி வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி கார்மேகம் என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் தூத்துக்குடி எம்.பி கனிமொழியை தவறாக பேசியும், சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பியதாக புகார் எழுந்தது. இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கனிமொழி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த கார்மேகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் என்பவர் திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி பா.ஜ.க. நிர்வாகி கார்மேகம் மீது அசிங்கமாக திட்டுதல் (பிரிவு 79), அவதூறு பரப்புதல் 196(1), பொய்யான கருத்தை சொல்லி இரு தரப்புக்கு மோதலைத் தூண்டுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் கார்மேகத்தை கைது செய்தனர்.

    • கடலூர் கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகியாக இருப்பவர் ரங்கன்
    • விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் திமுக நிர்வாகி ரங்கன் என்பவரை சீமான் தாக்கியதால் பெரும் பரபரப்பு நிலவியது. சீமானுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில், 20 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு மாநில மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாநாடு முடிந்து காரில் ஏறி சீமான் வெளியே சென்றபோது, வழியில் நின்று கொண்டிருந்த கடலூர் கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகி ரங்கன், காரை வழிமறுத்து சீமானை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் சீமானின் ஆதரவாளர்கள் திமுக நிர்வாகியை சராமாரியாக தாக்கியுள்ளனர். சீமானும் காரில் இருந்து இறங்கி ரங்கனை தாக்கியுள்ளார். தொடர்ந்து நாதகவினர், திமுக நிர்வாகியை கைது செய்யவேண்டும் எனக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

    • இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக
    • வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு இன்று நடைப்பெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 

    "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நமக்கெல்லாம் ஒரு சவால் விடுத்துள்ளார். அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று. நான் அமித்ஷாவிற்கும், அவரது அடிமைக் கூட்டத்திற்கும் ஒன்று சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு எங்களது கருப்பு, சிவப்பு படை, இளைஞரணி படை களத்தில் இருக்கும். டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் நாங்கள் வருகிறோம் என்று சொல்லித்தான் கருப்பு, சிவப்பு கொடியை ஏற்றினார் அண்ணா. அன்றிலிருந்து தமிழ்நாட்டை காப்பதற்கான போர்வரிசையில் என்றுமே திமுக முன் நின்றுள்ளது. இந்த போர்களத்தில் எதிரிகள்தான் மாறியுள்ளனர். திமுக அப்படியேத்தான் இருக்கிறது.

    ஏனெனில் முதலமைச்சர் சொன்னவாறு 'தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்'. அப்படிப்பட்ட நம்மை பார்த்து தயாராக இருங்கள், தமிழ்நாட்டிற்கு வருகிறோம் என மிரட்டப் பார்க்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல திமுக. தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. மிசா என்ற நெறிபாட்டில் நீந்தி வந்த இயக்கம். உலக வரலாற்றிலேயே ஈடு, இணை இல்லாத மொழிப்போரை நடத்தி அதிலும் வெற்றிப் பெற்ற இயக்கம். தமிழ்மொழிக்காக தண்டவாளத்தில் தலை வைத்த இயக்கம் திராவிட இயக்கம். பல துரோகங்களை, அடக்குமுறைகளை வீழ்த்தியது. இப்படிப்பட்ட எங்களை குஜராத்தில் இருந்து மிரட்டி, அடிபணிய வைக்க நினைத்தால், நிச்சயம் அது உங்கள் கனவில் கூட நடக்காது. கடைசி உடன்பிறப்பு இருக்கும்வரையில் தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்கமுடியாது. வடமாநிலங்களில் நீங்கள் எளிதாக நுழைந்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் என தப்பு கணக்கு போடூகிறீர்கள். ஏனெனில் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது.


    நிகழ்ச்சியில்

     பெரியார் எனும் கொள்கை நெருப்பு தமிழ்நாட்டை சுற்றிநின்று காப்பாற்றி கொண்டிருக்கிறது. 23 வயதிலேயே மிசா கொடுமையை கண்ட கட்சித் தலைவர் இன்று நம்மை வழிநடத்த இங்கு உள்ளார். பாஜக மதம்பிடித்து ஓடும் யானை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அந்த யானையை அடக்கக்கூடிய அங்குசம் இங்கு இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இது மோடிக்கும் தெரியும், அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால்தான் நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என, பழைய அடிமைகளையும், புது புதுசா புது அடிமைகளையும் அழைச்சிக்கிட்டு நம்மோடு மோத பார்க்கிறார்கள்.

    இன்று சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் துறை, தேர்தல் ஆணையம் என எல்லோருடனும் கூட்டு வைத்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கிறது பாஜக. இப்படிப்பட்ட பாஜகவை நம்பிதான் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். ஆனால் நாம் தொண்டர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நம்பி களத்திற்கு வந்துள்ளோம். நாம் தொடர்ந்து மக்களோடு உள்ளோம். அவர்களும் தொடர்ந்து நம்முடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். 2026-ல் எடப்பாடியை முதலமைச்சராக்குவோம் என அடிமைகள் தீர்மானம் போட்டுள்ளனர். காரில் பேட்டரி போனால் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாம். காரில் இன்ஜினே இல்லை என்றால் எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக. எடப்பாடி எதை எதையோ காப்பாற்ற வேண்டும் எனக்கூறுகிறார். முதலில் அவர் அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

    அதிமுகவிலிருந்து நிறைய பேர் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர், யார் வேண்டுமானாலும் போகலாம், யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நான்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என சொல்கிறார். அது அவருக்கும் மட்டும் தேவை இல்லை. நமக்கும் அதுதான் தேவை என்பதை நீங்கள் உணரவேண்டும். அடிமையாய் இருந்து சுகமாய் வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழவேண்டும். பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கும் சக்தி திமுகவிற்கும் மட்டும்தான் உண்டு என தமிழ்நாட்டு மக்கள் நம்புகின்றனர். வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும், போகட்டும். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. வானவில்லை பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால் அது நிரந்தரம் கிடையாது. உதய சூரியன் மட்டும்தான் நிரந்தரம்." எனப் பேசினார். 

    • இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை.
    • திமுகவில் மட்டும்தான் உடன்பிறப்பே என அன்புடன் அழைக்கும் கூட்டம் இருக்கிறது

    திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு இன்று(டிச. 14) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நிர்வாகிகளுக்கு மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 

    "இன்று பல கட்சிகளில் மாநாடு என்றால் இளைஞர்களை திரட்டுவது மிக கஷ்டம். ஆனால் திமுகவில் மட்டும்தான் இளைஞரணி நிர்வாகிகளையே மாநாடு போல இங்கு கூட்டியிருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செய்யாத சாதனையை நாம் செய்து காட்டியுள்ளோம். இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை. நம் எதிரிகளை சுக்குநூறாக்க கூட்டப்பட்ட கூட்டம், நம் இளைஞரணி கூட்டம், கொள்கை கூட்டம். இளைஞர்கள் அதிகம் கூடினால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் தற்போது உருவாகி உள்ளது. ஆனால் நம் கட்சியினர் அப்படி கிடையாது. அவர்கள் மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு இங்கு கூடியுள்ள கூட்டம் சாட்சி.

    கட்டுப்பாடு இல்லாமல் 1 லட்சம் இல்லை, 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும், எதையும் சாதிக்க முடியாது. ஆனால் உங்களைப் போன்ற இந்த கொள்கை கூட்டம் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஒரு பலம் என என்னால் உறுதியாக கூறமுடியும். மற்ற கட்சிகளில் தொண்டர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் இருப்பர். ஆனால் திமுகவில் மட்டும்தான் உடன்பிறப்பே என அன்புடன் அழைக்கும் கூட்டம் இருக்கிறது." என தெரிவித்தார். 

    • நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
    • முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.

    நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • எவ்வளவோ சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
    • தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் தி.மு.க.வின் ஆட்சி தொடர வேண்டும்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் முத்தரசன், திருமாவளவன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    திருமண விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    * விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    * எவ்வளவோ சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.

    * வாக்குரிமையை காப்பாற்ற SIR பணிகளில் தி.மு.க.வினர் சுழன்று சுழன்று பணியாற்றினோம்.

    * தேர்தல் முடியும் வரை தி.மு.க.வினரின் பணிகள் முடிவடையவில்லை.

    * சாதனைகளை வீடு வீடாக கொண்டு சேர்த்து அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும்.

    * அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சட்டசபையில் ஒருபோதும் முறையாக பதில் அளித்தது இல்லை.

    * தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் தி.மு.க.வின் ஆட்சி தொடர வேண்டும்.

    * தமிழ்நாட்டில் 7-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
    • தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று மாலை 4 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார்.

    இந்நிலையில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மலை நகரில் மாலை சந்திப்போம்!

    Young Dravidians! Prepare for Glory!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
    • முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    நிகழ்ச்சியையொட்டி மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் கட்சி கொடிகளால் அலங்காரங்களும், மின்னொளி அலங்காரங்களும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அளவில் மேடை அலங்காரம் செய்யப்பட்டு இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சி திடலுக்கு செல்லும் வழியில் பிரமாண்டமாக வரவேற்பு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மண்டலங்கள் வாரியாக நடைபெறும் இந்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மண்டலத்தில் இருந்து தொடங்கப்பட்டு அதுவும் திருவண்ணாமலையில் முதலில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை தொடுவதாக உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஒரு கோடி மகளிர்க்கு உரிமை தொகை வழங்கி வந்ததாகவும், தற்போது 36 லட்சம் பேரை கூடுதலாக இணைத்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?

    60 வருடங்களாக இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தினமும் ரூ.30 சம்பாதிக்க முடியாத ஒரு நிலையைத் தான் இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது தானே உண்மை. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வருகிறது. ஆகவே தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    செய்தி மற்றும் விளம்பர அரசியலைத் தாண்டி இவர்கள், சேவை மற்றும் மக்கள் அரசியலுக்கு வரவில்லை, வரமாட்டார்கள். மக்கள் அரசியல் வந்தால் இந்த மக்கள் உழைத்து சம்பாதிப்பதற்கு வசதியை ஏற்படுத்தி இருப்பார்கள். இந்தக் கூடுதல் பேருக்கு மகளிர் உரிமை தொகையை ஏன் கடந்த ஆண்டு கொடுக்கவில்லை?

    அதேபோன்று மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியையும் பிப்ரவரி மாதத்தில் கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். இந்த மக்கள் எப்போது விழிக்க போகிறார்கள் என தெரியவில்லை. பத்து லட்சம் கோடி கடனை ஏற்படுத்தியிருக்கும் தி.மு.க. அரசாங்கம், ஒரு நலத்திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி இருக்கிறது என சொல்லுங்கள்.

    பஸ்சில் மகளிருக்கு இலவச கட்டணம், அந்த பணத்தை அவரது தந்தை, சகோதரனிடம் வாங்கிக் கொள்கிறார்கள். தன்மானம் மிக்க தமிழன் தனது தாய் ரூ.ஆயிரத்துக்கு கையேந்தி நிற்பதை ஏற்கமாட்டான்.

    இவர்களுக்கு தேர்தலுக்கு முன்பாக ஏன் அக்கறை வரமாட்டேன் என்கிறது. தமிழகத்தில் எந்த அமைச்சர் துறையில் ஊழல் நடக்கவில்லை? இடி வந்தால் டாடி, மோடியை பார்க்க ஓடுகிறார். மூன்று நிதி ஆயோக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத முதல்வர் ஏன் ஓடிச் சென்றார்.

    நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திப்பவர்கள் ஜாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க மாட்டார்கள். இதுவரை முருகன் மீது வராத பாசம் ஏன் இப்போது அவர்களுக்கு வருகிறது. காவிரி நீர் பிரச்சனைக்காக இவர்கள் போராட்டம் நடத்தினார்களா?

    அயோத்தி பிரச்சனையை வைத்து அரசியல் செய்தார்கள். இப்போது அங்கு ராமர் கோவில் கட்டி விட்டதால் சர்ச்சை நீங்கி அந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் முருகனை கையில் எடுத்திருக்கிறார்கள். அதன் மூலம் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சனையாக்க முயற்சி நடக்கிறது.

    இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது பா.ஜ.க. என கருணாநிதி பாராட்டி பேசி உள்ளார். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம்.

    பா.ஜ.க.வுக்கு சதி திட்டம் தீட்டி கொடுப்பது தி.மு.க. தான். அவர்கள் வந்து விடுவார்கள் வந்து விடுவார்கள் என பயமுறுத்தி சிறுபான்மை வாக்குகளை தக்க வைக்க தி.மு.க. அரசியல் செய்கிறது.

    இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது. ஆர்எஸ்எஸ் நடத்திய நிகழ்வில் பாரதி குறித்து நான் பேசினேன். தி.மு.க. மேடையிலும் பாரதி குறித்து பேச சொன்னால் பேசுவேன்.

    தமிழ் என் தாய். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பான். திராவிட மேடைகளில் 12 ஆண்டுகள் நான் பேசியது அப்போது இனித்ததா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவண்ணாமலையில் நாளை மாலை தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.
    • நாளை திருவண்ணாமலைக்கு வரும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome!

    திருவண்ணாமலையில் நாளை மாலை தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    தமிழ்நாட்டின் தலைமகன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது, "I belong to the Dravidian Stock" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்.

    நாளை திருவண்ணாமலைக்கு வரும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
    • தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது.

    மதுரை:

    மதுரையில் நடந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் ஊழல் நடைபெற்றுள்ளது, நகரமைப்பு பிரிவின் ஊழலுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க உள்ளோம். அனுமதி பெற்று குடியிருப்புகள் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டப்படுகிறது.

    மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மோசமாக நடைபெறுகிறது. மக்களின் பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை, மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் நியமிக்க வேண்டும். தி.மு.க. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    தி.மு.க. அரசு நான்கே முக்கால் வருடத்தில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது?, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. திறந்து வைக்கிறது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 2 மாதங்களில் முடிவடையும் என சொன்னார்கள்.

    ஆனால், கனிமொழி எம்.பி.யாக இருப்பதால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் செயல்பட தொடங்கி உள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அ.தி.மு.க. மட்டுமே, அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது. ஆனால் அ.தி.மு.க.வை அடிமை கட்சி என விமர்சனம் செய்கிறது. ஒரு அடிமை தான் இன்னொரு வரை அடிமை என சொல்லுவார்கள். அதனால் தான் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எங்களை அடிமை என விமர்சனம் செய்கிறது. அரிதாரம் பூசியவனால் ஆட்சி நடத்த முடியுமா? என எம்.ஜி.ஆரை தி.மு.க. விமர்சனம் செய்தது.

    ஆனால், தி.மு.க.வை 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல செய்தவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர் மறைந்தும் தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். எம்.ஜி.ஆரின் புகழை பாடாதோர் எவருமுண்டா?, முதலமைச்சர் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என கூறினார். முதலமைச்சரின் பெரியப்பாவை கேலி, கிண்டல் செய்யும் தி.மு.க.வினரை முதல்வர் கண்டிக்க வேண்டாமா? என்றார். 

    ×