என் மலர்
நீங்கள் தேடியது "பிக்பாஸ் 5"
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புத்தம் புதிய எக்ஸ்5 எஸ்.யு.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BMWX5
சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 12 கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் முதலாவது காராக பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எஸ்.யு.வி. அறிமுகமாக இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த கார் மே மாதம் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் டீசல்
என்ஜின் மாடலையும் பின்னர் பெட்ரோல் மாடலையும் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 காரில் 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய மாடல் கார் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்5 வரிசையில் ஐந்தாவது தலைமுறை மாடலாகும்.
காரில் இது மிகவும் நீளமானது. இதன் அகலமும், உயரமும் முந்தைய மாடலைக் காட்டிலும் அதிகம். விரிவுபடுத்தப்பட்ட இந்த இடவசதி பயணிகள் சவுகரியமாக பயணிக்க ஏதுவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 4,921 மி.மீ., அகலம் 1,970 மி.மீ., உயரம் 1,737 மி.மீ. ஆகும்.
இதன் சக்கரங்கள் 2,975 மி.மீ. அளவில் இருக்கிறது. குடும்பத்துடன் வெளியூர் பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. முன்புற மற்றும் பின்புற விளக்குகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. சொகுசாக நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Samsung
சாம்சங் நிறுவனம் இரண்டு புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய டேப்லெட்கள் கேலக்ஸி டேப் ஏ 10.1 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்5இ என அழைக்கப்படுகின்றன. சாம்சங் தயாரிப்புகளில் மிக மெல்லிய டேப்லெட் மாடலாக கேலக்ஸி டேப் எஸ்5இ உருவாகியிருக்கிறது.
மெல்லிய பெசல்களுடன் மெட்டாலிக் பாடி கொண்டிருக்கும் கேலக்ஸி டேப் எஸ்5இ வெறும் 5.5 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. கேலக்ஸி டேப் எஸ்5இ டேப்லெட் AMOLED டிஸ்ப்ளே, எல்.டி.இ. கனெக்டிவிட்டி மற்றும் இன்டகிரேட்டெட் டெக்ஸ் வசதி உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் துவங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 மாடல் தற்சமயம் ஜெர்மனியில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மற்ற சந்தைகளில் அறிமுகமாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

கேலக்ஸி டேப் எஸ்5இ சிறப்பம்சங்கள்:
- 10.5 இன்ச் WQXGA 2560x1600 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர்
- அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
- யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
- ஆண்ட்ராய்டு 9 பை
- பிக்ஸ்பி 2.0
- 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ மாடல் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித மாடல்களில் கிடைக்கிறது. இதன் விலை வைபை மாடல் விலை 399.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.28,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் எல்.டி.இ. வெர்ஷன் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

கேலக்ஸி டேப் ஏ 10.1 சிறப்பம்சங்கள்:
- 10.1 இன்ச் 1920x1200 பிக்சல் டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 7904 பிராசஸர்
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 8 எம்.பி. பிரைமரி கேமரா
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
- 6150 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட் வைபை மற்றும் எல்.டி.இ. மாடல்களில் கிடைக்கிறது. இதன் வைபை மாடல் விலை 210 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.17,000) என்றும் எல்.டி.இ. வேரியண்ட் விலை 270 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மினி 5 டேப்லெட் சிறப்பம்சங்களும் அதன் அறிமுக விவரங்களும் வெளியாகியுள்ளது. #Apple #iPadMini
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மாடல்களை 2019 ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஐபேட்களில் ஒன்று ஐபேட் மினி 5 என அழைக்கப்படும் என்றும் இதன் வடிவமைப்பு பார்க்க ஐபேட் மினி 4 என அழைக்கப்படுகிறது.
ஐபேட் மினி 5 மாடல் 6.1 எம்.எம். அளவு தடிமனாகவும், 7.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் லைட்னிங் கனெக்டர், டச் ஐ.டி. மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட்களில் பின்புற மைக்ரோபோன் மேல்பக்கத்தின் மத்தியில் பொருத்தப்படுகிறது.
புதிய ஐபேட் மினி 5 மாடலில் ஏ10 ஃபியூஷன் சிப் வழங்கப்படுமா அல்லது ஏ10எக்ஸ் ஃபியூஷன் சிப் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. மேலும் இந்த ஐபட் ஆப்பிள் பென்சில் வசதியை சப்போர்ட் செய்யுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களில் 9.7 இன்ச் ஐபேட் (2018) மாடலின் மேம்பட்ட மாடல் 10 இன்ச் அளவில் அறிமுகமாகும் என்றும் இத்துடன் குறைந்த விலையில் ஐபேட் மாடல் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய ஐபேட் அறிமுகம் செய்வது பற்றி ஆப்பிள் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், வரும் மாதங்களில் ஐபேட் மினி 5 மற்றும் குறைந்த விலை ஐபேட் மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாகலாம்.
இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க தயாராகி வருகிறது. #RelianceJio #Jio5G
இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்கும் முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கும் என தெரிகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் 5ஜி தொழில்நுட்ப வசதி கொண்ட மொபைல் போன்களுடன் 5ஜி சேவைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5ஜி சேவைகளுடன் அதற்கான சாதனங்களை வழங்குவது பற்றிய விவாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மொபைல் போன் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா மற்றும் சீனாவில் 5ஜி சேவைகள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை அடுத்த ஆண்டு துவக்கத்தில் வழங்கலாம் என கூறப்படுகிறது.
5ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் ஜூலை மாதத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிகாம் நிறுவனங்கள் தரப்பில் உபகரணங்களை சோதனை செய்யும் பணிகளும் ஏற்கனவே நிறைவுற்றுவிட்டது. 5ஜி சேவை அறிமுகமானதும் அவற்றுக்கான சாதனங்கள் மற்றும் மொபைல் டெலிபோன் சேவை விரிவடையும்.

முதற்கட்டமாக 5ஜி சேவைகள் ஃபிளாக்ஷிப் சாதனங்களில் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ பட்ஜெட் விலை சாதனங்களிலும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் போதுமான சாதனங்கள் இதுவரை வெளியாகாததால் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தன. மத்திய அரசு சார்பில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவைகளுடன் புதிய தொழில்நுட்பத்தை இயக்கும் திறன் கொண்ட சாதனங்களையும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுதவிர சியோமி நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று சாம்சங், ஹூவாய், எல்.ஜி. போன்ற நிறுவனங்களும் தங்களது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு முன் புதிய ஐபேட் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #iPad #Apple
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ஐபேட் மினி 5 மற்றும் புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபேட் மினி 4 மாடலின் மேம்படுத்தப்பட்ட டேப்லெட் சாதனம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஐபேட் மினி 4 செப்டம்பர் 2015 இல் அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஐபேட் மினி டேப்லெட் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இவற்றில் ஐபேட் மினி 5 மற்றும் என்ட்ரி-லெவல் ஐபேட் உள்ளிட்டவை இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
புதிய ஐபேட் மாடல்களின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களில் ஐபேட் மினி 5 மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா செட்டப் மற்றும் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ கடந்த ஆண்டு வெளியிட்ட தகவல்களில் புதிய ஐபேட் மினி 5 டேப்லெட் 2019 கோடை காலத்தில் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த டேப்லெட்டில் முந்தைய ஐபேட் மினி மாடலை விட மேம்பட்ட பிராசஸர் மற்றும் சற்றே குறைந்த விலையிலான டிஸ்ப்ளே பேனல் வழங்கப்படலாம்.
முன்னதாக 2015 செப்டம்பரில் ஆப்பிள் வெளியிட்ட ஐபேட் மினி் மாடலில் 7.9 இன்ச் 2048x1536 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் இரண்டாம் தலைமுறை ஏ8 சிப்செட் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான தகவல்களில் 9.7 இன்ச் ஐபேட் (2018) மாடலின் மேம்பட்ட மாடல் 10 இன்ச் அளவில் அறிமுகமாகும் என்றும் இத்துடன் குறைந்த விலையில் ஐபேட் மாடல் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய ஐபேட் அறிமுகம் செய்வது பற்றி ஆப்பிள் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், வரும் மாதங்களில் ஐபேட் மினி 5 மற்றும் குறைந்த விலை ஐபேட் மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாகலாம்.
கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் மெகா சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. #Smartphones
கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மூன்று ஸ்மார்ட்போன்கள்: கூல்பேட் மெகா 5, மெகா 5எம் மற்றும் மெகா 5சி என அழைக்கப்படுகிறது.
மலிவு விலை ஸ்மார்ட்போன்களுக்கான சந்தையில் நிலையான இடத்தை பிடிக்கும் நோக்கில் கூல்பேட் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. கூல்பேட் மெகா 5 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூல்பேட் மெகா 5 சிறப்பம்சங்கள்:
- 5.7 இன்ச 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
- பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 0.3 எம்.பி. வி.ஜி.ஏ. இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

கூல்பேட் மெகா 5சி சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் 18:9 டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 1 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம்
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

கூல்பேட் மெகா 5எம் சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் டிஸ்ப்ளே
- 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 1 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம்
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
புதிய கூல்பேட் மெகா 5 ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் டார்க் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூல்பேட் மெகா 5சி ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,499 என்றும் கூல்பேட் மெகா 5எம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று புதிய ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
லெனோவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பட்ஜெட் விலையில் புதிய லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #LenovoZ5s #smartphone
லெனோவோ நிறுவனம் இசட்5எஸ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. சீனாவில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் ZUI 10 கொண்டிருக்கிறது.
16 எம்.பி. பிரைமரி கேமரா, டெலிஃபோட்டோ லென்ஸ், 2x சூம் வசதி கொண்ட 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் கேமரா சென்சார் என மூன்று பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இதனுடன் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போனில் P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் கோட்டிங் கொண்டுள்ளது.
3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

லெனோவோ இசட்5எஸ் சிறப்பம்சங்கள்:
- 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 LTPS டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ZUI 10
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, PDAF, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 5 எம்.பி. கேமரா, f/2.4
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஆடியோ
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (P2i)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்.பி. டைப்-சி
- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போன் ஹனி ஆரஞ்சு, கிரே மற்றும் டைட்டானியம் கிரஸ்டல் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1398 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,410), 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1598 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.16,475) என்றும் டாப்-என்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1898 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,565) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. #AgniV #AbdulKalamisland
புவனேஸ்வர்:
இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்றுகட்ட உந்துதல் செயல்பாட்டுடன் 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5’ ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் (பழைய பெயர் வீலர் தீவு) இருந்து இன்று பிற்பகல் ‘அக்னி–5’ ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் ‘அக்னி–5’ பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஆறுமுறை நடத்தப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாகவே அமைந்தது நினைவிருக்கலாம். #AgniV #AbdulKalamisland
இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்றுகட்ட உந்துதல் செயல்பாட்டுடன் 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5’ ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த ‘அக்னி–5’ ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் ‘அக்னி–5’ பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஆறுமுறை நடத்தப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாகவே அமைந்தது நினைவிருக்கலாம். #AgniV #AbdulKalamisland
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ. 5-ம் தேதி அரசு விடுமுறை என அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதால் அரசு பணியாளர்களுக்கு 4 நாள் விடுமுறை கிடைத்துள்ளது. #Diwali #GovernmentHoliday
சென்னை:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நவம்பர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால் அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் திங்கட்கிழமை விடுமுறை எடுத்து தீபாவளியை கொண்டாட முடிவு செய்திருந்தனர்.
எனவே, நவம்பர் 5-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி அன்று அரசு விடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இரண்டாவது சனிக்கிழமையான நவம்பர் 10-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சனி ஞாயிறு விடுமுறை என்பதால் மேலும் இரு நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. #Diwali #GovernmentHoliday
லெனோவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #LenovoK9
லெனோவோ நிறுவனம் கே சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. லெனோவோ கே9 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக் கொண்டிருக்கும் லெனோவோ கே9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

லெனோவோ கே9 சிறப்பம்சங்கள்:
- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
- பவர் வி.ஆர். GE8320 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
லெனோவோ கே9 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் லெனோவோ கே9 விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லெனோவோ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
லெனோவோ கே9 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து குறைந்த விலையில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை லெனோவோ அறிமுகம் செய்துள்ளது. லெனோவோ ஏ5 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6739 பிராசஸர், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் பின்புற கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

லெனோவோ ஏ5 சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
- பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.5,999 என்றும் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.6,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி இந்தியா நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்து இருக்கிறது. #Xiaomi
சியோமி நிறுவனம் இந்தியாவில் ஒரு கோடி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகமாகி 9 மாதங்களில் இந்த மைல்கல் சாதனையை சியோமி படைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் விற்பனை டிசம்பர் மாதத்தில் துவங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் 50 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது.

விற்பனை துவங்கிய குறுகிய காலக்கட்டத்தில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ஸ்மார்ட்போன் ரெட்மி 5ஏ தான் என சியோமி அறிவித்துள்ளது.
மேலும் இந்திய சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ஒரே ஸ்மார்ட்போனாக ரெட்மி 5ஏ இருப்பதாகவும், தொடர்ந்து 9 மாதங்களாக இந்த நிலையை சியோமி தக்கவைத்துக் கொண்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ரெட்மி 5ஏ சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் ஹெச்.டி. 1280x720 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் சிப்செட்
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ்
- ஆன்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9
சியோமி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லெனோவோ அக்டோபர் 16-ம் தேதி புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Lenovo #smartphone
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லெனோவோ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
அக்டோபர் 16-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் லெனோவோ தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. லெனோவோ வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் தி கில்லர் ரிட்டன்ஸ் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் கே சீரிஸ் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஆகஸ்டு 2017-இல் லெனோவோ கே8 நோட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் கே சீரிஸ் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகிறது. எனினும் இசட்5 ஸ்மார்ட்போனின் ரீ-பிரானட் வெர்ஷனை லெனோவோ அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகமானது.

லெனோவோ இசட்5 சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ZUI 3.9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF
- 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3300 எம்ஏஹெச் பேட்டபி ஃபாஸ்ட் சார்ஜிங்
லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் அரோரா புளு, பிளாக் மற்றும் இன்டிகோ புளு நிறங்களில் கிடைக்கிறது. லெனோவோ இசட்5 பிளாக் 64 ஜிபி விலை 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,625), அரோரா மற்றும் இன்டிகோ புளு நிறம் கொண்ட 64 ஜிபி மாடல் 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,670) என்றும் 128 ஜிபி மாடல் 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,870) என நிர்ணயம் செய்யப்பட்டது.