என் மலர்
நீங்கள் தேடியது "11 personnel injured. ஜார்க்கண்ட்"
ஜார்க்கண்டின் சரைகேலா பகுதியில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம் அடைந்தனர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலாவில் உள்ள குசாய் பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் இணைந்து மாநில போலீசாரும் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த நக்சல்கள் திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள், மாநில போலீசார் என 11 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.