என் மலர்
நீங்கள் தேடியது "12 rasi"
- அமாவாசை தானம் பல மடங்கு புண்ணியம் தரும்.
- சோமாவதி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதி, வெவ்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதில் ஒரு சில மாதங்களில் வரும் அமாவாசை, தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், ஆவணி மாதம் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானதாக இருக்கிறது.
ஆவணி மாத அமாவாசை, சிம்ம ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றாக சஞ்சரிக்கும் போது ஏற்படுகிறது. இந்த ஆண்டு திங்கட்கிழமையான இன்று அமாவாசை வருவதால், சோமாவதி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.
இன்று காலை 5.21 மணிக்கு அமாவாசை தொடங்கி நாளை காலை (செவ்வாய்க்கிழமை) 7.24 மணி வரை உள்ளது.
பொதுவாக, அமாவாசை நாளன்று சிவ வழிபாடும், பவுர்ணமி நாளன்று அம்மன் வழிபாடும் செய்வது வழக்கம். அதே போல, அமாவாசைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, பித்ரு தோஷம் போக்கும்.
இந்த ஆவணி அமாவாசை, சிவனுக்கு உகந்த நாள், சிவனுக்கு உகந்த திங்கட்கிழமையில் வருவது மிகச் சிறப்பானது.
இன்று அதிகாலை 5 மணிக்கே அமாவாசை தொடங்கி விடுவதால், நண்பகல் நேரத்துக்குள் அமாவாசை திதி கொடுப்பதோ தர்ப்பணம் செய்வதோ செய்து விடலாம்.

சோமாவதி அமாவாசை முடிந்த பிறகு, அவரவர் வசதிக்கு ஏற்ப, தானம் செய்யலாம். அமாவாசை தானம் பல மடங்கு புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.
பித்ருக்களின் சாபம், தோஷம் ஆகியவை நீங்கவும் வாழ்க்கையில் இருக்கும் பலவிதமான கஷ்டங்கள், பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு அமாவாசை மிகவும் ஏற்ற நாளாகும்.
இந்த சோமாவதி அமாவாசை நாளில் பிறருக்கு தானம் தர்மம் செய்தால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். அதுபோல கடந்த கால பாவங்கள் நீங்கும்.
இன்று செய்யப்படும் தானம் முன்னோர்களை மகிழ்ச்சி அடையச் செய்வதாகவும், அவர்களது ஆசிகளை பெறுவதாகவும் கருதப்படுகிறது.
அந்த வகையில் ராசியின் அடிப்படையில் சோமாவதி அமாவாசை நாளில் பிறருக்கு தானம் செய்வது இன்னும் பல நன்மைகளை தரும். அமாவாசை நாளில் எந்தந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை தானம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேஷம்- வெல்லம், கோதுமை மற்றும் பிற உணவுகள்.
ரிஷபம்- நெய் மற்றும் வெள்ளிப் பொருட்கள்.
மிதுனம்- வெண்கலம் மற்றும் பச்சை பயிறு.
கடகம்- வெள்ளை ஆடை மற்றும் பால்.
சிம்மம்- தங்க நகைகள், ஆடைகள் மற்றும் உணவு.
கன்னி- நெய், எண்ணெய் மற்றும் தானியங்கள்.
துலாம்- பால், நெய் மற்றும் தங்கப்பொருட்கள்.
விருச்சகம்- நெய் மற்றும் சிவப்பு ஆடைகள்.
தனுசு- உணவு, தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பொருட்கள்.
மகரம்- தேங்காய்.
கும்பம்- நெய்.
மீனம்- நெய், தங்க பொருட்கள் தானம் செய்து வழிபடலாம்.
- புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்.
- புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் சில கோளாறுகள் ஏற்படும்.
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் நரம்பிற்கு அதிபதி என்பதால் புதன் பலம் பெற்றால் உடலில் நரம்புகள் சிறப்பாக இயங்கி அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள்.
புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். இத்தகைய புதன் தனது சொந்த வீடான கன்னியில் 23. 9.2024 முதல் 10.10.2024 வரை உச்சம் பெற்று கேதுவுடன் இணைகிறார். இதனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு புதன் 3, 6-ம் அதிபதியான புதன், ராசிக்கு 6-ல் உச்சம் பெறுவதால் உத்தி யோக மாற்றம் ஏற்படலாம். வேலை இல்லாத வர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விண்ணப்பித்த வீடு, வாகன, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். முக்கிய ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். ஆரோக்கியத்தை உடல் நலத்தை பேணுவது நல்லது.
பரிகாரம்: புதன்கிழமை சக்ரத்தாழ்வாரை வழிபடவும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு 2, 5-ம் அதிபதியான புதன் ராசிக்கு 5-ல் உச்சம் பெறுவதால் புத்திர பிராப்த்தம் உண்டாகும். பிள்ளைகளால் பூர்வீகத்தால், பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு. மூளையை மூலதனமாகக் கொண்ட ஏஜென்சி, கன்சல்டிங் நிறுவனங்கள், பங்கு வர்த்தகத்தில் மிகுதியாக சம்பாதிப்பார்கள். கவுரவப் பதவி கிடைக்கும். கற்ற கல்வி பயன் தரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.

மிதுனம்
மிதுன ராசிக்கு 1,4-ம் அதிபதியான புதன் உச்சம் பெறுவதால் வாகனம், பூமி லாபம், அரசுவகையில் ஆதாயம், உயர்ந்த பதவி அமையும். செல்வச் செழிப்பு உண்டு. சுய உழைப்பில் சொத்துச் சேர்க்கை உண்டு. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் சாதனை படைப்பார்கள். ஆரோக்கியம் மேம்படும். கல்வி ஆர்வம் கூடும்.
பரிகாரம்: புதன் கிழமை மகா விஷ்ணுவை வழிபடவும்.

கடகம்
கடக ராசிக்கு 3,12-ம் அதிபதியான புதன் உப ஜெய ஸ்தானமான 3-ம்மிடத்தில் உச்சம் பெறுவதால் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். காணாமல் போன ஆவணங்கள், நகைகள், கை மறதியாக வைத்த பொருட்கள் திரும்ப கிடைக்கும். சகோதர ஒற்றுமை மேம்படும். வெளிநாட்டு வேலை, பயணம் உறுதியாகும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அம்மன் வழிபாடு செய்யவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு தன, லாப அதிபதியாகிய புதன் தன ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் சாதகமான பலன் உண்டு. தொட்டது துலங்கும்.வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை போன்ற வற்றில் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும். சாதாரண நிலையில் இருப்ப வர்கள் கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள்.
பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும்.

கன்னி
கன்னி ராசிக்கு 1, 10-ம் அதிபதியாகிய புதன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும்.தொழில் தந்திரம் கூடும்.பல தொழில் துறை பற்றிய அறிவு கூடும். தொழில் ஞானத்தை பயன்படுத்தி பிறருக்கு ஆலோ சனை கூறி சம்பாதிப்பார்கள். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு ஆதாயம் உண்டு.
பரிகாரம்: கன்னி பெண்களுக்கு இயன்ற தானம் வழங்கவும்.

துலாம்
துலாம் ராசிக்கு புதன் 9, 12-ம் அதிபதியாகிய புதன் ராசிக்கு 12ல் உச்சம் பெறுகிறார். தொழில் உத்தியோகம், உயர் கல்வி நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லலாம். முன்னோர்க ளின் நல்லாசி கிடைக்கும். பிறவிக் கடன், பொருள் கடன் தீர்க்க உகந்த காலம்.தந்தை வழி பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். கண் அறுவை சிகிச்சை வெற்றி தரும்.
பரிகாரம்: மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரியால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும். மூத்த சகோதரம், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு. மறுவிவாக முயற்சி நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

தனுசு
தனுசு ராசிக்கு 7, 10-ம் அதிபதியாகிய புதன் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். திருமணத் தடை அகலும். கல்வி, புகழ், அரசியல், லாபங்களும்,பூர்வீக வகையில் நன்மையும் கிட்டும். வாழ்க்கைத் துணையாலும் ஆதாயம் உண்டு.
பரிகாரம்: கோதண்ட ராமரை வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு 6, 9-ம் அதிபதியான புதன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். தொழிலில் மேன்மையும், அரசியல் பதவியும். செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும். பித்ருக்களுக்கான நீத்தர் கடன் செய்ய உகந்த நேரம். சிலர் தந்தையின் கடனை சுமக்க நேரும். அல்லது தந்தைக்கு வைத்திய செலவு அதிகமாகும். விரும்பிய கடன் கிடைக்கும்.
பரிகாரம்: தாய் மாமாவின் நல்லாசி பெறுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்கு 5, 8-ம் அதிபதியான புதன் ராசிக்கு 8ல் உச்சம் பெறுகிறார். சிலருக்கு வம்பு வழக்கான காதல் திருமணம் நடக்கும்.சிலருக்கு காதலால் அவமானம், வம்பு, வழக்கு உருவாகும். ஆரோக்கிய குறைபாடு அறுவை சிகிச்சையில் சீராகும். குழந்தைகளால் மனச் சங்கடம் ஏற்படும். சிலருக்கு பதவியில் நெருக்கடி இருக்கும். அல்லது வேலையில் மெமோ வாங்குவார்கள். சுபமும், அசுபமும் கலந்தே நடக்கும்.
பரிகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
மீனம்
மீன ராசிக்கு 4,7-ம் அதிபதியான புதன் 7-ம்மிடத்தில் உச்சம் பெறுகிறார். திருமணத் தடை அகலும். நல்ல சொத்து சுகத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணைக்கு தாய் வழி சொத்து கிடைக்கும். கூட்டுத் தொழில் ஆர்வம் கூடும். தடைபட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்புகள் உள்ளது. தாயின் நல்லாசிகள் கிடைக்கும். கோட்சார புதன் உச்சமடையும். இந்த காலத்தில் உரிய வழிபாட்டு முறைகளை பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்.
ஆயில்யம், முப்பூரம், கேட்டை
தீதரு விசாகம் ஜோதி
சித்திரை மகம் எராரும்
மாதனம் கொண்டார் தாரார்
வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனில் படுத்தோர் தேரார்
பாம்பின் வாய் தேரைதானே’ என்பது ஒரு பழம் பாடல்.
மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரும்பக் கிடைப்பது அரிது. பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும். வியாதியின் காரணமாக படுக்கையில் படுத்தவர்கள் உடல் நலம் பெறுவது கடினம் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.
1. அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.
2. பரணி: நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.
3. கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.
4. ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.
5. மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.
6. திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.
7. புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.
8. பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.
9. ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.
10. மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.
11. பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.
12. உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.
13. அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.
14. சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

15. சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.
16. விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.
17. அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.
18. கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்.
19. மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.
20. பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர்,வாக்குவாதத்தில்வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.
21. உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.
22. திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.
23. அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.
24. சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.
25. பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.
26. உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.
27. ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.
நட்சத்திர குண நலன்களுடன் நமது குணங்களைப்பொருத்திப் பார்ப்போம். ஏதேனும் நல்ல குணங்கள் குறைந்திருந்தால் அதை நிறைவு செய்து மேம்படுவோம்.
ரிஷபம் - பார்வதிதேவி
மிதுனம் - துர்க்கை, நவக்கிரகங்கள்
கடகம் - விநாயகர்
சிம்மம் - ஸ்ரீகிருஷ்ணர்
கன்னி - சிவபெருமான்
துலாம் - ஸ்ரீராமர்
விருச்சிகம் - மகாலட்சுமி
தனுசு - சனீஸ்வரர்
மகரம் - அனுமன்
கும்பம் - பைரவர்
மீனம் - சிவபெருமான்
ராசி - குலதெய்வம்
மேஷம் - மதுரைவீரன்
ரிஷபம் - ஐயனார்
மிதுனம் - காளியம்மன்
கடகம் - கருப்பன்னசாமி
சிம்மம் - வீரபத்திரன்
கன்னி - அங்காளம்மன்
துலாம் - முனீஸ்வரன்
விருச்சிகம் - பெரியாச்சி
தனுசு - மதுரைவீரன்
மகரம்- - ஐயனார்
கும்பம் - காளியம்மன
மீனம் - மதுரைவீரன்