என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor"

    பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்து வந்தாராம். அதன்பின்னர் மீண்டும் நடிக்க வந்த நடிகை, பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டாராம். அந்த நடிகையின் பிறந்தநாளில் நடிகர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தாராம்.

    அப்போது திடீரென நடிகை ஆண்டி ஆகிவிட்டார் என்றும் அவருக்கு வயது 31 கடந்து விட்டது என்றும் நடிகர் தெரிவித்தாராம். பொதுவெளியில் நடிகையின் வயதை கூறியதால் அவர் கோபத்தில் உள்ளாராம்.

    ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானாராம். எப்படியாவது நடிகையுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பலர் தவம் கிடந்தார்களாம். ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறையவே நடிகை திருமணம் செய்து கொண்டாராம்.

    அதன்பின்னர், வரும் படங்களை தட்டிக்கழிக்காமல் நடித்து வருகிறாராம். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை மீது ஆசைப்பட்ட முன்னணி நடிகர் எதாவது சொல்லி நடிகையின் சுண்டுவிரலையாவது தொட்டுவிட வேண்டும் என இயக்குனருடன் சேர்ந்து பல தில்லாலங்கடி வேலை பார்த்து வந்தாராம். இதை தெரிந்து கொண்ட நடிகை முடியவே முடியாது என ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாரம்.

    வாரிசு நடிகை தன் கவர்ச்சியினால் சினிமாவில் கலக்கி வருகிறாராம். நடிகையின் மீது ஆசைப்பட்ட நடிகர் தன் படத்தில் அந்த நடிகைதான் நடிக்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறாராம். இதனை அறிந்த வாரிசு நடிகையின் அப்பா அந்த நடிகருடன் மட்டும் நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

    இதனை அறிந்த நடிகர் எப்படியாவது அந்த நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு அலைகிறாராம். இதன் முதல் படியாக நடிகர் அந்த கவர்ச்சி நடிகையின் அப்பாவிடம் பேசியுள்ளார். ஆனால் இந்த பிளான் எடுபடாமல் போகவே இயக்குனருடன் சேர்ந்து நடிகையிடம் பேசி வருகிறாராம். இதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

    • மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • திரையரங்குகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் டிக்கெட் கட்ட ணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திரையரங்குகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். திரையரங்குகளை தொடர்ந்து நடத்த ஏதுவாக விதிகளை தளர்த்த கோரி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்களில் நடிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் திரையரங்குகளில் படங்கள் வெளியான 8 வாரத்துக்கு பின்னரே ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என்றும் டிக்கெட் கட்டணத்தில் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. கட்டணமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறாராம். தன் திறமையான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகையை அடைய நினைத்த வாரிசு நடிகரின் மகன் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வருகிறாராம்.

    நடிகையுடன் எப்படியாவது நட்பு கொள்ள வேண்டும் என கடுமையாக முயற்சிக்கும் வாரிசு நடிகரின் மகன் ஒருபடி மேலே சென்று நடிகையை தான் அழைக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்ள வற்புறுத்தி வருகிறாராம். இதனால் கோபமான நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.

    இளம் வயதில் சினிமா துறையில் அறிமுகமான நடிகை தன் கவர்ச்சியாலும், அழகாலும் முன்னணி நாயகர்களுடன் நடித்து பிரபலமானாராம். நடிகையை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்த அக்கட இயக்குனர்கள் நான், நீ என்று போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் படங்களில் அவரை புக் செய்தார்களாம்.

    இதனால் குஷியான நடிகை உச்ச நடிகையாக வலம் வந்தாராம். தற்போது நடிகைக்கு வயதாகிவிடவே இயக்குனர்கள் எல்லாம் நடிகையை கதாநாயகி பதவியிலிருந்து விலக்கி ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் ஆடுங்கள் என்று கேட்டு வருகிறார்களாம். ஆனால், 50 வயதிற்கு மேற்பட்ட நடிகர்களோ நான் நடித்தால் அந்த நடிகையுடன் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார்களாம்.

    தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஏக்கத்தில் இருக்கும் நடிகை சரி படங்களில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை வெப் தொடரிலாவது நடிப்போம் என்று முடிவெடுத்து கவர்ச்சியில் இறங்கிவிட்டாராம்.

    தமிழில் பலான படத்தில் அறிமுகமான நடிகரின் ஒரு சில படம் ஓரளவிற்கு தியேட்டரில் ஓடிவிட்டதாம். இதையடுத்து தானும் ஒரு நடிகர் என்று நினைத்துக் கொண்ட அவருக்கு, உலக புகழ் பெற்றவரின் தயாரிப்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இந்த படத்தில் நடித்ததால் தானும் உலக புகழ் பெற்ற நடிகர் என்ற எண்ணம் அவருக்கு வந்து விட்டதாம். நடிகரின் பேச்சும் நடத்தையும் முன்பு இருந்ததை விட தற்போது அதிகமாக இருக்கிறதாம். நடிகருடன் நன்றாக பேசுபவர்களே, அவரை விட்டு விலகி சென்று வருகிறார்களாம். மேலும் நடிகரின் ஆட்டம் எவ்வளவு தூரம் போகுதுனு பார்ப்போம் என்று நெருங்கியவர்கள் பேசி வருகிறார்கள்.

    முக்கிய இயக்குனர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஒரு கட்டத்தில் பிரபலமானாராம். தொடர்ந்து படங்களில் நடித்தவருக்கு சில நாட்களில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். இதனால் நடிகை கவர்ச்சியில் இறங்கிவிட்டாராம். கவர்ச்சியில் மட்டும் இறங்கினால் போதாது அதற்கான வேலைகளிலும் ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்த நடிகை தன் புகைப்படங்களை தயாரிப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்பு கேட்டு வந்தாராம்.

    தயாரிப்பாளர்களும் நடிகையின் தொல்லை தாங்காமல் அவரை பல மணிநேரம் காக்க வைத்துவிட்டு அனுப்பிவிடுவார்களாம். ஆனால், முயற்சியை கைவிடாத நடிகை விடாது கருப்பு போன்று தயாரிப்பாளர்களை பின் தொடர ஆரம்பித்தாராம். இதனால் பயந்து போன தயாரிப்பாளர்கள் நடிகையை கண்டதும் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.

    பல படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு வயது ஏற ஆரம்பித்தவுடன் மார்க்கெட் குறைய ஆரம்பித்துவிட்டதாம். பிரபலமாகிவிட்டோமே அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என நினைத்த நடிகை சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சம்பாரித்து வந்தாராம். ஆனாலும் அவர் நினைத்த பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை என்றதும் ஆசை வார்த்தைகளை கூறி இயக்குனரை வளைத்துபோட்டு ஜாலியாக சுற்றி வருகிறாராம்.

    ஊருக்கு அறிவுரை சொல்லும் பிரபல நடிகருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம். இவர் அறிவுரை மட்டுமல்லாமல் பலபேருக்கு உதவி செய்தும் வருகிறாராம். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொது கருத்துகளை கூறி வரும் நடிகர் பல படங்களிலும் நடித்து வருகிறாராம்.

    நல்லவர் என பெயர் எடுத்த நடிகர், நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் பிளேபாய் ஆகிவிட்டாராம். இவர் கமிட்டான படங்களிலுள்ள நடிகைகளுடன் ஊர் சுற்றி வருவதால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருகிறார்களாம்.

    பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகையை ஆசை.. ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இருவரும் சில வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திடீரென நடிகை விவாகரத்து கேட்டாராம். நடிகரும் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டாராம். நடிகை மீது தவறு இருப்பதால் தான் நடிகர் எதுவும் சொல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டார் என்று பலரும் பேசி வந்தார்களாம்.

    ஆனால், நடிகர், நடிகை இருக்கும்போதே வேறு ஒரு ஹீரோயினுடன் தொடர்பில் இருந்துள்ளாராம். இது தெரிந்து தான் நடிகை, நடிகரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். நடிகை சென்றதும் இதுதான் வாய்ப்பு என்று நினைத்த நடிகர் காதலியின் வீட்டில் தஞ்சம் புகுந்துவிட்டாராம்.

    அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பல படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறாராம். நடிகையின் மீது ஆசை கொண்ட இயக்குனர்கள் பலர் அட்ஜஸ்ட்மென்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்டு வந்தார்களாம். இதற்கு மறுத்த நடிகை ஒரு நாள் காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் வேறு பக்கமாக திரும்பியதாம். இதனால் பயந்து போன நடிகை என்ன நடக்குமோ என்று நினைக்கும் போது ஒருவர் திடீரென காரின் முன் பாய்ந்து காரை நிறுத்தினாராம். உடனே கீழே இறங்கிய நடிகை அவர்களை பளார் என்று கண்ணத்தில் ஒன்று வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.

    ×