என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actress Nayanthara"

    • ஃபெமி 9 மெகா கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் பங்கேற்றனர்.
    • நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை.

    ஃபெமி 9 மெகா கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனால் நயன்தாரா குஷியானார். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

    அப்போது நயன்தாரா கூறியதாவது:-

    நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை. யார் என்ன சொன்னாலும், எப்படி நம்மை கீழ்தரமாக பேசினாலும், தப்பாக நடந்தாலும் காலையில் எழுந்தவுடன் நம் வேலையை உண்மையாகவும், உறுதியாகவும் செய்தால் தானாகவே Self Confident வரும். அது நம் வாழ்க்கையை மாற்றிவிடும்.

    என நயன்தாரா கூறினார்.

    • கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் டாக்சிக்.
    • இந்த படத்தில் கதாநாயகனாக யாஷ் நடிக்கிறார்.

    கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் டாக்சிக். இந்த படத்தில் கதாநாயகனாக யாஷ் நடிக்கிறார். படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

    இந்நிலையில் நடிகர் அக்ஷய் ஓபராய் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நான் இப்போது ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் டாக்சிக் படத்தில் நடிக்கிறேன். நயன்தாராவும் படத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார். படக்குழுவினர் படம் பற்றிய தகவல்களை வெளியிடாதால் நான் படம் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

    டாக்சிக் படத்தில் கியாரா அத்வானி, தாரா சுதாரியா, சுருதிஹாசன் நடித்துள்ளனர். போதைப்பொருள் விவகாரத்தை மையமாக கொண்டு அதிக பொருட் செலவில் படம் உருவாகி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம் பெற்று இருந்தது.
    • நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

    நடிகை நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-இல் வெளியானது.

    இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம் பெற்று இருந்தது.

    இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 22-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

    நெட்பிளிக்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து தான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

    இதற்கு தனுஷின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சியில் அனைத்தும் தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். இந்தப் படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும்போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்பந்தமிடப்பட்டு, அதில் அவரும் கையெழுத்திட்டுள்ளார், படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் வொண்டர்பாருக்கு சொந்தமானது என்று வாதிட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தனர். தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரிய நெட்பிளிக்சின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது எனக்கூறி நெட்பிளிக்ஸ் மனுவை நிராகரித்தனர்.

    இதைத்தொடர்ந்து வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஏப்ரல் 9ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

    ×