search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi Month Birth"

    • ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம்.
    • ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஆடிமாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபடவேண்டிய முறைகளையும் காணலாம்.

    * ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

    * ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    * ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    * ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

    * ஆடி மாதத்தை "பீடை மாதம்" என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், "பீட மாதம்" என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    * ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

    * ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    * ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    * பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

    * ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    * ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    • ஆடி மாதம் வரும் ஜூலை 17-ந் தேதி பிறக்கிறது.
    • மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே ஆடி மாதம் அமைகிறது.

    தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த வகையில் ஆடி மாதம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே ஆடி மாதம் அமைகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, புதன் என ஒவ்வொரு தினங்களும் கொண்டாட்ட தினமாக வருகிறது.

    நடப்பாண்டிற்கான ஆடி மாதம் வரும் ஜூலை 17ம் தேதி பிறக்கிறது. 17ம் தேதியானது புதன்கிழமையில் வருவது இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாத பிறப்பிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தற்போது முதலே கோயில்கள் களைகட்டத் தொடங்கிவிட்டது.

    ஆடி மாதம் வரும் ஜூலை 17-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி வரை வருகிறது. ஆடி மாதம் வந்துவிட்டாலே தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் திருவிழா கோலாகலமாக கொண்டாப்படுவது வழக்கம். மிகப்பெரிய அம்மன் கோயில்கள் மட்டுமின்றி ஒவ்வொரு ஊரிலும் உள்ள அம்மன் கோயில்களிலும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    ஆடிக் கொண்டாட்டம்:

    ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி தபசு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை என பல விசேஷங்கள் கொண்டாடப்பட உள்ளது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். ஆடி மாதத்தில் கோயில்களில் கூழ் ஊற்றுதல், அன்னதானம் உள்ளிட்ட பல விசேஷங்கள் தொடர்ந்து அரங்கேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களை காட்டிலும் வட மாவட்டங்களில் ஆடி மாதம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம், ஆடியின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூழ் ஊற்றுதல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்வுகளை பக்தர்கள் மேற்கொள்வார்கள்.

    ஆடி மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×