search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admission free"

    • முத்தமிழ் முருகன் மாநாடு 2 தினங்கள் நடைபெறவுள்ளது.
    • அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    திண்டுக்கல்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது. வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட அனுமதி அளித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் 2 தினங்கள் நடைபெற உள்ளது.

    ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும், உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். ஆகையால் தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

    மாநாட்டிற்கு வருகை தரும் அனைத்து பொதுமக்களும் எளிதாக வந்து செல்லும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அனுமதி இலவசம். எனவே பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் மாநாட்டை சிறப்பிக்க வேண்டும்.

    மேலும் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள பங்கேற்பவர்கள் மற்றும் மாநாட்டினை காண வரும் பொதுமக்கள், மாநாடு தொடர்பான விவரங்கள், ஏதேனும் சந்தேகங்கள் உள்ளிட்ட விபரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475 மற்றும் இலவச தொடர்பு எண்-1800 425 9925 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் இன்று முதல் ரோபோட்டிக் கண்காட்சி நடக்கிறது.
    • இந்த அரிய சலுகையை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்று பயன் பெற வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டைன்மெண்ட் சார்பில் ரோபோட்டிக் பொருட்காட்சி இன்று முதல் நடைபெறுகிறது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. பொருட்காட்சியில் குழந்தை களை மகிழ்விக்க மாபெரும் பறவைகளின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாடி மகிழ வித, விதமான ராட்டினங்கள், ஜம்பிங் பலுான், யானை கார், பைக், படகு சவாரி, டி ஷோ, திகிலூட்டும் பேய் வீடு போன்ற எண்ணற்ற பொழுது போக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாவிற்கு ருசியாக வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏராளமான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் கூறியதாவது:-

    குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகை யாக பொருட்காட்சியில் மாணவ, மாணவிகளுக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் நுழைவு கட்டணம் முற்றிலும் இலவசம். பொருட்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு கூப்பன் வழங்கி தினந்தோறும் 50 நபர்களுக்கு அழகிய சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். மேலும் பொருட்காட்சி வளாகத்தில் உள்ள வித விதமான 20 வகையான ராட்டினங்களில் விளையாட கட்டணங்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய சலுகையை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்று பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×