என் மலர்
நீங்கள் தேடியது "Ajay Gnanamuthu"
- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் வெளியானது.
- இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. உலகளவில் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்தனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இரண்டாம் பாகத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்திற்கு லீட் கொடுத்து தான் முடித்திருப்பார்கள். படக்குழுவும் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்தது. படத்தின் ப்ரீ ப்ரொடகஷன் வேலைகள் நடந்துக் கொண்டு இருந்த நிலையில் தற்பொழுது அஜய் ஞானமுத்து அவரது படக்குழுவுடன் யூரோப்பில் இருந்து ஒரு செல்ஃபியை பகிர்ந்துள்ளார்.
இப்படம் ஜப்பான் உள்பட வெளிநாடுகளில் படப்பிடிப்பு மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி'.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி'. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

டிமான்ட்டி காலனி
அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து 'டிமான்ட்டி காலனி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டார்.

டிமான்ட்டி காலனி
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

டிமான்ட்டி காலனி 2 போஸ்டர்
அதன்படி, 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த போஸ்டரில் அஜய் ஞானமுத்து இயக்குவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
#DemonteColony2 shoot begins!#DC2 #VengeanceOfTheUnholy@arulnithitamil @SamCSmusic @priya_Shankar pic.twitter.com/SK9tEkgf6a
— R Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) November 30, 2022
- இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'டிமான்ட்டி காலனி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி'. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

டிமான்ட்டி காலனி
அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து 'டிமான்ட்டி காலனி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

டிமான்ட்டி காலனி -2
சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டிமான்ட்டி காலனி -2'.
- இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டிமான்ட்டி காலனி
இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் 98 சதவீத படப்பிடிப்புப் பணிகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில காட்சிகளே மீதியிருப்பதாகவும், அதுவும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
- இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டிமான்ட்டி காலனி- 2'
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
- இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டிமான்ட்டி காலனி- 2'
- இப்படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- ஏழு ஆண்டுகளுக்கு பிறகு டிமான்ட்டி காலனி- 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

'டிமான்ட்டி காலனி -2' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிமான்ட்டி காலனி -2'.
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

டிமான்ட்டி காலனி 2 போஸ்டர்
இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாரர் டைப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Welcome to the Darkness!
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) August 3, 2023
Presenting the first look of #DemonteColony2 a Pulse-pounding horror thriller on the way to cinemas soon.#VengeanceOfTheUnholy#DarknessWillRule#2023WillBeDark @BTGUniversal #BobbyBalachandran @arulnithitamil @priya_Bshankar @SamCSmusic @ManojBeno… pic.twitter.com/UhpIk93PYL
- இந்த படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
- சமீபத்தில் டிமான்டி காலனி 2 படத்தின் டீரைலரை படக்குழு வெளியிட்டது.
2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியது.
இந்த படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் டிமான்டி காலனி 2 படத்தின் டீரைலரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டிமான்டி காலனி 2 படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்தார்.
இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் வசூல் மற்றும் முன்பதிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,
- திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 3.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் தற்பொழுது உருவாகி 15 ஆம் தேதி வெளியாகியது.
இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 3.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அருள்நிதி நடித்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் பெற்று வருகிறது. இன்று சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
படத்தின் வசூல் மற்றும் புக்கிங்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் படத்தின் அடுத்த பாகத்தை குறித்து இயக்குனர் அஜய் சமீபத்தில் நடந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
படத்தின் தொடர்ச்சியாக அடுத்து இரண்டு பாகங்கள் எடுக்கப்போவதாக கூறியுள்ளார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வேறு ஒரு படம் இயக்கிவிட்டு மீண்டும் டிமான்ட்டி காலனி 3 படத்தை இயக்கப்போவதாகவும். அப்பாகம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டிமான்ட்டி காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அஜய் ஞானமுத்து அறிமுகமானார்.
- டிமான்டி காலனி 3 படத்தின் வேலைகளில் அஜய் ஞானமுத்து ஈடுபட்டு வருகிறார்.
2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அஜய் ஞானமுத்து அறிமுகமானார். இதனையடுத்து அவர் இமைக்கா நொடிகள், கோப்ரா, டிமான்டி காலனி 2 ஆகிய படங்களை இயக்கினார்
தற்போது அவர் டிமான்டி காலனி 3 படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது காதலியை திருமணம் செய்துள்ளார். இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.
பல்வேறு திரை பிரபலங்கள் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்