என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anand l rai"

    • தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷ் மூன்றாவது முறையாக பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு முன்பு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' படத்தில் நடித்திருந்தார்.



    இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷ்-ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவாகும் படம் காதல் கதையம்சம் கொண்ட படமாகவும் விமானப்படை பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் விமானப்படை பின்னணியில் நடிக்கவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.


    தேரே இஸ்க் மேன் போஸ்டர்

    கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.


    தனுஷ் பதிவு

    இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், "ராஞ்சனாவின் பத்து வருடங்கள், சில திரைப்படங்கள் நம் வாழ்க்கை முழுவதையும் மாற்றிவிடும். ராஞ்சனாவை கிளாசிக்காக மாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். தற்போது ஒரு தசாப்தத்திற்கு பிறகு ராஞ்சனாவின் உலகில் இருந்து ஒரு கதை, "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein). எதுமாதிரியான பயணம் எனக்காக காத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், இது ஒரு சாகசமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கும் எங்களுக்கும் " என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும், "தேரே இஸ்க் மேன்" திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
    • பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.

    தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இதையடுத்து 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.

    கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

    இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தப் படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.
    • இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். இந்திய மொழிகள் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். தமிழில் இவர் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகிற 21-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிக்கும் இந்தி திரைப்படமான "தேரே இஸ்க் மேன்" படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் நடிகர் தனுஷ் கேரவனில் இருந்து வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரவனில் இருந்து வெளியே வரும் போது வீடியோ எடுக்கப்படுவதை உணர்ந்த நடிகர் தனுஷ் கேமராவை நோக்கி கையசைக்கிறார்.

    இதோடு, படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் ஒருத்தரை துரத்திக்கொண்டு ஓடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஆனந்த் எல் ராய் தயாரித்து இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷால் சின்கா மேற்கொள்ள, ஆக்ஷன் இயக்குநராக ஷாம் கௌஷால் பணியாற்றுகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    ‘ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Dhanush #Raanjhanaa
    ‘ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் செல்லாமல் இருந்த தனுஷ், தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

    தனுஷ் - சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், அபய் தியோல் நடிப்பில் வெளியான `ராஞ்சனா’ படத்திற்கு ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில், `ராஞ்சனா’ இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.



    முதல் பாகத்தில் ‘உயிர்த்து எழுவேன்’ எனச் சொல்லி இறந்துபோகும் குந்தன் குமார் பாத்திரம், இரண்டாம் பாகத்தில் உயிர்த்தெழுவது போலவும், காசி நகரில் அரசியல்வாதியாக உருவாவது போலவும் கதை பின்னப்பட்டிருக்கிறதாம். கொடி படத்துக்கு பிறகு ஒரு முழு நீள அரசியல் கதையில் தனுஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. #Dhanush #Raanjhanaa2

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த 4 படங்கள் குறித்து தனுஷ் மனம்திறந்துள்ளார். #Dhanush
    தமிழ் சினி்மாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் முதல் ஹாலிவுட் படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. தமிழில் இந்த படத்திற்கு `வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்று தலைப்பு வைக்கத்திருக்கிறார்கள்.

    கேன்ஸ் விழாவில் ஃபகிர் படத்தை திரையிடுவதற்காக பிரான்ஸ் சென்ற தனுஷ், தற்போது படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாகி இருக்கிறார். புரமோஷன் பணிகளை முடித்த பிறகு இந்தியா திரும்பும் தனுஷ், மாரி-2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். 

    இந்த நிலையில், சமீபத்தில் நடந்த உரையாடலின் போது, தனது அடுத்த 4 படங்கள் பற்றி தனுஷ் தெரிவித்தார். அப்போது, மாரி-2, வடசென்னை ரிலீசுக்கு நடுவே, தனுஷ் இயக்கும் அடுத்த படம் வருகிற ஆகஸ்டில் துவங்க இருக்கிறதாம். மேலும் பாலிவுட்டில் தனுஷை அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிப்பதை தனுஷ் உறுதிப்படுத்தியிருக்கிறார். 



    அதேநேரத்தில் வேலையில்லா பட்டதாரி-3 படம் அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். 

    விரைவில் தனுஷீடன் இணைவேன் என்று அனிருத் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் படம் அல்லது வேலையில்லா பட்டதாரி-3 படத்தில் தனுஷீடன், அனிருத் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது. #Dhanush

    ×