என் மலர்
நீங்கள் தேடியது "Anna"
‘பொங்கல்’, ’தமிழர் திருநாள்’ என்பவற்றை தவிர தை முதல் நாளான இன்றைய தினத்திற்கு தமிழர்களாகிய நாம் நினைத்து, நினைத்து பெருமையும் பூரிப்பும் அடையக்கூடிய மற்றொரு தனிப்பெரும் வரலாற்று சிறப்பும் உள்ளது. #happypongal2019
மொகலாய மன்னர்களிடமும், வெள்ளயரிடமும் நமது தாய்நாடு அடிமைப்பட்டு கிடந்த வேளையில், டெல்லியை தலைமையிடமாக அமைத்துக் கொண்டுதான் ஆட்சியாளர்கள் நம் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர்.
இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய-அன்றைய காலகட்டத்தில் (தற்போதைய) ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து ஆட்சி செய்து வந்த வெள்ளையர்கள், இப்பகுதி முழுவதையும் ‘மெட்ராஸ் பிரெசிடென்சி’ (சென்னை மாகாணம்) என்றே அழைத்து வந்தனர்.
தற்போது, காஷ்மீரில் உள்ளது போல் சென்னை மாகாணத்தின் கோடைக்கால தலைநகரமாக உதகமண்டலமும் (ஊட்டி), குளிர்கால தலைநகரமாக 'மெட்ராஸ்' என்றழைக்கப்பட்ட தற்போதைய சென்னை நகரமும் இருந்து வந்தது.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1944-ம் ஆண்டு பகுத்தறிவு தந்தை பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய ஈ.வே.ரா.பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து திராவிடர் கழகத்தைதை விலக்கிக் கொண்டார்.

1946-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. சென்னை மாகாணத்தின் முதல்வராக த. பிரகாசம் 11 மாதங்கள் பதவியில் இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார்.
15-8-1947-ல் இந்தியா விடுதலையடைந்த பிறகு சென்னை மாகாணம் ‘சென்னை மாநிலம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. 26-1-1950 அன்று இந்தியா குடியரசு நாடான பின்னர் இந்திய குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக சென்னை மாகாணம் மாறியது.
தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய அறிஞர் அண்ணா, 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க.என்ற தனிக்கட்சியை தொடங்கினார். 1967-ல் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் மூன்றாவது சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. 138 இடங்களை வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.
சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக 6-2-1967 அன்று அறிஞர் அண்ணா பொறுப்பேற்றார்.
இதற்கிடையே, ‘தமிழர்களின் கலாச்சார-பண்பாட்டு பெருமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக சென்னை மாகாணம் என்ற பெயரை “தமிழ்நாடு” என மாற்றம் செய்ய வேண்டும்’ என்று தந்தை பெரியார் நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வந்தார்.
இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். ஆனால், அவரது கோரிக்கைக்கும், போராட்டத்துக்கும் அன்றைய ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலமாத்தில் தைத்திங்கள் முதல்நாளன்று (14-1-1969) சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு ‘தமிழ்நாடு’ என்ற தேனினும் இனிய, அழகிய செந்தமிழ் பெயரால் இந்திய மக்களாலும், உலக மக்களாலும் நமது பெருமைக்குரிய மாநிலம் அழைக்கப்பட்டு வருகிறது.
தமிழர்கள் போற்றிப் பெருமைப்படக் கூடிய அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ‘தைப் பொங்கல்’ இன்பத் திருநாளில் தான் நிறைவேற்றபட்டது என்ற பூரிப்பான செய்தியை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு... குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வது இன்றைய பொங்கல் திருநாளின் சிறப்பினை மேலும் இரட்டிப்பாக்கும் என்று ‘மாலை மலர் டாட்.காம்’ உறுதியாக நம்புகிறது.
எங்களது அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த-இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்! வாழ்க.. வளமுடன்!! #historicpride #Pongalday #prideforTamilians #Tamilians #happypongal2019
அண்ணா அறிவாலயத்தின் முன் பகுதியில் பேரறிஞர் அண்ணா சிலையும், கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அமைய உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. #DMK #MKStalin #karunanidhi
சென்னை:
அண்ணா அறிவாலயத்தின் முன் பகுதியில் அண்ணா முழு உருவ சிலை 16.9.87ல் நிறுவப்பட்டது. தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
கருணாநிதி மறைந்து விட்ட நிலையில் அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீஞ்சூர் அருகே தயார் செய்யப்பட்டு வருகிறது.
சிலை உருவாக்கப்படும் பணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2 முறை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது முகவடிவமைப்பில் உள்ள குறைகளை எடுத்து கூறி சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
அதன் அடிப்படையில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படுவதால் அதன் அருகே அண்ணா சிலை பழையதாக காட்சி தரும் என்பதால் அண்ணாவுக்கும் புதிதாக வெண்கல சிலை செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைஞரின் திரு உருவச் சிலையை வருகின்ற டிசம்பர் 16-ந்தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்க இருக்கிறார்கள்.
புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையும்-தலைவர் கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16-ந்தேதி தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா எழுச்சிமிகு விழாவாக நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #karunanidhi
அண்ணா அறிவாலயத்தின் முன் பகுதியில் அண்ணா முழு உருவ சிலை 16.9.87ல் நிறுவப்பட்டது. தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
கருணாநிதி மறைந்து விட்ட நிலையில் அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீஞ்சூர் அருகே தயார் செய்யப்பட்டு வருகிறது.
சிலை உருவாக்கப்படும் பணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2 முறை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது முகவடிவமைப்பில் உள்ள குறைகளை எடுத்து கூறி சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
அதன் அடிப்படையில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படுவதால் அதன் அருகே அண்ணா சிலை பழையதாக காட்சி தரும் என்பதால் அண்ணாவுக்கும் புதிதாக வெண்கல சிலை செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை நேற்றிரவு அகற்றப்பட்டு பத்திரமாக அறையில் வைக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை இருந்த பீடமும் இடிக்கப்பட்டுள்ளது.

அங்கு விரைவில் புதிதாக பீடம் கட்டப்பட்டு அதில் அண்ணா, கருணாநிதிக்கு புதிய சிலை வைக்கப்படுகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.
இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைஞரின் திரு உருவச் சிலையை வருகின்ற டிசம்பர் 16-ந்தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்க இருக்கிறார்கள்.
புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையும்-தலைவர் கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16-ந்தேதி தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா எழுச்சிமிகு விழாவாக நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #karunanidhi
அண்ணா, எம்.ஜி.ஆருக்குப்பின் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக ரஜினிகாந்த் இருக்கிறார் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை:
புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் நேற்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சிறுமலர் கண் பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கினார்.
புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் ராணிசீதை அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதில் இணை பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆர்.முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் பற்றியும், கட்சியின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை கவர்னர் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். நூற்றாண்டு நினைவாக சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவேண்டும். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். புதிய நீதிக்கட்சி தற்போதுவரை பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வரும்போது பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும்.
அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதிக்கு பிறகு சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லை. எல்லோரையும் மதிக்கக்கூடியவர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும். அவர் கட்சி தொடங்கியதும் புதிய நீதிக்கட்சி அவரோடு இணைந்து பயணிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.சி.சண்முகம் பிறந்தநாளையொட்டி அமைச்சர் கே.பாண்டியராஜன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் நேற்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சிறுமலர் கண் பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கினார்.
புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் ராணிசீதை அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதில் இணை பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆர்.முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் பற்றியும், கட்சியின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை கவர்னர் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். நூற்றாண்டு நினைவாக சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவேண்டும். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். புதிய நீதிக்கட்சி தற்போதுவரை பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வரும்போது பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும்.
அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதிக்கு பிறகு சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லை. எல்லோரையும் மதிக்கக்கூடியவர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும். அவர் கட்சி தொடங்கியதும் புதிய நீதிக்கட்சி அவரோடு இணைந்து பயணிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.சி.சண்முகம் பிறந்தநாளையொட்டி அமைச்சர் கே.பாண்டியராஜன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தொண்டருக்கும் தொண்டராக இயங்கி எளிமையின் சின்னமாக திகழ்ந்த பேரறிஞர் அண்ணாவிடம் தான் என்ற செருக்கோ, தன்னலமோ, பகட்டோ காண முடியாது. #PerarignarAnna #Anna
இன்று (செப்டம்பர்15-ந் தேதி)அண்ணா பிறந்தநாள்
பேரறிஞர் அண்ணா பார்வைக்கு மிக மிகச் சாதாரணமாகவே தெரிவார். ஆனால் அவர் தம்முள் அடக்கி வைத்திருந்த பேரறிவுப் பெட்டகம் மிகமிகப் பெரியது. இடுப்பில் ஒரு நான்கு முழ வேட்டி, மேலே கைத்தறி வெள்ளைச் சட்டை, தோளில் ஒரு துண்டு. இவ்வளவுதான் அண்ணாவின் உடைகள்! கையில் ஒரு கடிகாரமோ விரலில் ஒரு மோதிரமோ கூட அணிந்ததில்லை. சீவிய தலை கலைந்திருந்தாலும் அதைச் சிறிதும் சட்டை செய்யமாட்டார். சட்டையிலே சில பொத்தான்களைக் கூடச் சரிவரப் பொருத்திக் கொள்ள மாட்டார்.
பாராளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, முதன் முதலில் அவையினுள் நுழைந்தபோது அங்கு வைத்திருந்த வருகைப் பதிவேட்டில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டார். பாமரர் போலத் தோற்றமளித்த அண்ணாவைப் பார்த்து அருகில் நின்றிருந்த ஓர் உறுப்பினர் ‘உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?’ என்று கேட்டிருக்கிறார். உடனே அண்ணா அளித்த பதில் என்ன தெரியுமா? ‘ஏதோ கொஞ்சம் தெரியும்’ என்பதுதான். ஆங்கிலத்தில் கரை கண்ட அண்ணா அடக்கமாக ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்று சொன்னதை அவரும் நம்பியிருப்பார். ஆனால், அண்ணா அவையில் தமது கன்னிப் பேச்சாக உரையாற்றியபோது அனைவரும் மூக்கில் விரலை வைத்துக் கொண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அவையில் அமர்ந்திருந்த பிரதமர் நேரு அண்ணா பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவைத் தலைவராக அமர்ந்திருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அண்ணா பேச்சை ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.
அண்ணாவுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தும் அண்ணாவின் உரை முடியவில்லை. அண்ணா தொடர்ந்து பேசுவதைத் தடை செய்ய விரும்பாமல் அவையை அரைமணி நேரம் நீடிக்கச் செய்தார் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் அசத்திய அண்ணா தமது வாழ்க்கையின் நடைமுறையில் ஆங்கிலத்தைக் கையாளுவதில்லை. ஒரு தமிழரோடு அவர் எவ்வளவு பெரிய படிப்பாளி என்றாலும் அவரிடம்கூடத் தமிழில்தான் பேசுவார். கடந்த 1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் அண்ணா காஞ்சீபுரம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குப் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்த நேரம் அது. எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் அண்ணாவைப் பற்றித் தரக் குறைவாகச் சுவரில் எழுதி வைத்திருந்தனர். அதனைக் கண்ட கழகத் தோழர்கள் வந்து அண்ணாவிடம் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, அந்தத் தோழர்களிடம்,“அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, அந்தச் சுவர் விளம்பரத்தை அழித்துவிடாதீர்கள். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்றி அந்தச் சுவர் அருகே வையுங்கள். விளக்கு உபயம் அண்ணாத்துரை என்றும் எழுதி வையுங்கள்” என்றார்.

திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்து வேறு புதுக்கட்சி தொடங்கி விட்ட போதிலும் பெரியாரை அண்ணா எதிர்த்தோ, தாழ்த்தியோ பேசியது கிடையாது. ஆனால் பெரியார் அண்ணாவையும், தி.மு.கழகத்தவரையும் மிகவும் தாக்கிப் பேசுவார். தி.மு.க.வினரைக் “கண்ணீர்த்துளிகள்” என்றே குறிப்பிடுவார். பெரியார் என்ன திட்டினாலும் அண்ணா பொறுமை இழப்பதில்லை. மறுத்தோ வெறுத்தோ பேசியதுமில்லை .தோழர்கள் வந்து அண்ணாவிடம், “பெரியார் உங்களைப்பற்றி மிகவும் மோசமாகத் தாக்கிப் பேசுகிறாரே, அவருக்குப் பதில் சொல்ல வேண்டாமா அண்ணா ?” என்று கேட்கிறார்கள்.
அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? “காட்டில் யானை இருக்கிறதே அது என்ன செய்யும் தெரியுமா? தனது குட்டியைப் புரட்டிப் போட்டுத் தாக்கும். தும்பிக்கையால் வளைத்து இழுத்து, மரத்தில் மோதும். ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமா? தன்னை மனிதரோ மிருகங்களோ தாக்க வந்தால், திருப்பித் தாக்கவும், தாக்குதலைத் தாங்கிக் கொள்ளவும் தனது குட்டியைப் பழக்குவதற்குத்தான் தாய் யானை அப்படிச் செய்யும். அதைப்போல், பெரியாருக்கு நம்மீது கோபம் இல்லை. எதிரிகள் நம்மீது தாக்கினால் தாங்குவதற்கும் எதிர்த்துத் தாக்குவதற்கும் நம்மைப் பழக்குகிறார் என்பதுதான் உண்மை . அதனால் நம்மவர் யாரும் பெரியாருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். இது தான் அண்ணாவின் விளக்கம். அண்ணாவிடம் தான் என்ற செருக்கோ, தன்னலமோ, பகட்டோ காண முடியாது.
அவருடைய எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சி. கவிவேந்தர் கா.வேழவேந்தருக்கு அண்ணா தலைமையில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. திருமண நாளும் வந்தது. மணப்பந்தலில் நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. அண்ணா வந்து சேராததே காரணம். மணப்பந்தலை நோக்கி ஒரு லாரி வந்து நிற்கிறது. அதிலிருந்து மெதுவாக இறங்கி வருகிறார் அண்ணா. எல்லோருக்கும் ஒரு பக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் வியப்பு. அண்ணா காஞ்சீபுரத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்னை வரும்போது வழியில் கார் பழுதாகிவிட்டது. அந்த இடத்தில் உடனடியாகப் பழுதுபார்ப்பதற்கான வசதி கிடையாது. எப்படியும் வேழவேந்தன் திருமணத்திற்குச் சென்றாக வேண்டும். என்ன செய்வது? என்று அண்ணா யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக ஒரு லாரி காலியாக வந்து கொண்டிருத்து. அது சென்னைக்குத்தான் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தச் சொல்லி அண்ணா அவர்கள் அதில் ஏறிக் கொண்டார்கள். அண்ணாவின் நிலை அறிந்த லாரி ஓட்டுநர் லாரியை மிக வேகமாகச் செலுத்தியதால் விரைந்து சென்னை வந்தடைந்தது. வேழவேந்தன் திருமணமும் தடையின்றி நடைபெற்றது. இப்படி ஒரு தலைவரைப் பார்க்க முடியுமா?
சா.கணேசன் மேயராக இருந்த போது அவரும் நானும் அண்ணாவைச் சந்திக்கச் சென்றோம். நுங்கம்பாக்கம் வீட்டின் மாடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். எதிரே நான்கு பேர் மட்டுமே அமரக்கூடிய இருக்கை (பெஞ்சு) ஒன்றிருந்தது. நாங்கள் நின்றுகொண்டே அண்ணாவிடம் பேசிக் கொண்டிருந்தோம். அண்ணா அவர்கள் எங்களைப் பார்த்து “உட்காருங்கள்” என்று சொல்லி எதிரே இருந்த இருக்கையைக் காட்டினார். அண்ணாவுக்கு எதிரே சரிக்குச் சமமாக உட்கார நாங்கள் விரும்பவில்லை. “பரவாயில்லை அண்ணா, நின்று கொண்டே பேசிவிட்டுச் செல்கிறோம்” என்று சொன்னோம். பிடிவாதமாக உட்காரச் சொல்லியும் நாங்கள் உட்காரவில்லை. அந்த நேரத்தில் மாடிப்படியில் ஏறி ஒருவர் மாடிக்கு வந்தார். அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திண்டிவனம் ஆ. தங்கவேலு. அவர் பின்னால் சில தோழர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் அண்ணா “குடுகுடு” என்று பக்கத்தில் இருந்த அறையில் நுழைந்து ஒரு பெரிய சமக்காளத்தை எடுத்து வந்து விரிக்க முனைந்தார். உடனே நான் “என்னிடம் கொடுங்கள் அண்ணா நான் விரிக்கிறேன்” என்றேன். கொடுக்க மறுத்துவிட்டுத் தாமே விரித்து, “இதில் எல்லாருமா உட்காருங்கள்” என்றார். தொண்டருக்கும் தொண்டராய் இப்படி எந்தத் தலைவராவது இயங்கியது உண்டா?
- கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேரறிஞர் அண்ணா பார்வைக்கு மிக மிகச் சாதாரணமாகவே தெரிவார். ஆனால் அவர் தம்முள் அடக்கி வைத்திருந்த பேரறிவுப் பெட்டகம் மிகமிகப் பெரியது. இடுப்பில் ஒரு நான்கு முழ வேட்டி, மேலே கைத்தறி வெள்ளைச் சட்டை, தோளில் ஒரு துண்டு. இவ்வளவுதான் அண்ணாவின் உடைகள்! கையில் ஒரு கடிகாரமோ விரலில் ஒரு மோதிரமோ கூட அணிந்ததில்லை. சீவிய தலை கலைந்திருந்தாலும் அதைச் சிறிதும் சட்டை செய்யமாட்டார். சட்டையிலே சில பொத்தான்களைக் கூடச் சரிவரப் பொருத்திக் கொள்ள மாட்டார்.
பாராளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, முதன் முதலில் அவையினுள் நுழைந்தபோது அங்கு வைத்திருந்த வருகைப் பதிவேட்டில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டார். பாமரர் போலத் தோற்றமளித்த அண்ணாவைப் பார்த்து அருகில் நின்றிருந்த ஓர் உறுப்பினர் ‘உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?’ என்று கேட்டிருக்கிறார். உடனே அண்ணா அளித்த பதில் என்ன தெரியுமா? ‘ஏதோ கொஞ்சம் தெரியும்’ என்பதுதான். ஆங்கிலத்தில் கரை கண்ட அண்ணா அடக்கமாக ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்று சொன்னதை அவரும் நம்பியிருப்பார். ஆனால், அண்ணா அவையில் தமது கன்னிப் பேச்சாக உரையாற்றியபோது அனைவரும் மூக்கில் விரலை வைத்துக் கொண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அவையில் அமர்ந்திருந்த பிரதமர் நேரு அண்ணா பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவைத் தலைவராக அமர்ந்திருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அண்ணா பேச்சை ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.
அண்ணாவுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தும் அண்ணாவின் உரை முடியவில்லை. அண்ணா தொடர்ந்து பேசுவதைத் தடை செய்ய விரும்பாமல் அவையை அரைமணி நேரம் நீடிக்கச் செய்தார் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் அசத்திய அண்ணா தமது வாழ்க்கையின் நடைமுறையில் ஆங்கிலத்தைக் கையாளுவதில்லை. ஒரு தமிழரோடு அவர் எவ்வளவு பெரிய படிப்பாளி என்றாலும் அவரிடம்கூடத் தமிழில்தான் பேசுவார். கடந்த 1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் அண்ணா காஞ்சீபுரம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குப் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்த நேரம் அது. எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் அண்ணாவைப் பற்றித் தரக் குறைவாகச் சுவரில் எழுதி வைத்திருந்தனர். அதனைக் கண்ட கழகத் தோழர்கள் வந்து அண்ணாவிடம் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, அந்தத் தோழர்களிடம்,“அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, அந்தச் சுவர் விளம்பரத்தை அழித்துவிடாதீர்கள். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்றி அந்தச் சுவர் அருகே வையுங்கள். விளக்கு உபயம் அண்ணாத்துரை என்றும் எழுதி வையுங்கள்” என்றார்.

அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? “காட்டில் யானை இருக்கிறதே அது என்ன செய்யும் தெரியுமா? தனது குட்டியைப் புரட்டிப் போட்டுத் தாக்கும். தும்பிக்கையால் வளைத்து இழுத்து, மரத்தில் மோதும். ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமா? தன்னை மனிதரோ மிருகங்களோ தாக்க வந்தால், திருப்பித் தாக்கவும், தாக்குதலைத் தாங்கிக் கொள்ளவும் தனது குட்டியைப் பழக்குவதற்குத்தான் தாய் யானை அப்படிச் செய்யும். அதைப்போல், பெரியாருக்கு நம்மீது கோபம் இல்லை. எதிரிகள் நம்மீது தாக்கினால் தாங்குவதற்கும் எதிர்த்துத் தாக்குவதற்கும் நம்மைப் பழக்குகிறார் என்பதுதான் உண்மை . அதனால் நம்மவர் யாரும் பெரியாருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். இது தான் அண்ணாவின் விளக்கம். அண்ணாவிடம் தான் என்ற செருக்கோ, தன்னலமோ, பகட்டோ காண முடியாது.
அவருடைய எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சி. கவிவேந்தர் கா.வேழவேந்தருக்கு அண்ணா தலைமையில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. திருமண நாளும் வந்தது. மணப்பந்தலில் நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. அண்ணா வந்து சேராததே காரணம். மணப்பந்தலை நோக்கி ஒரு லாரி வந்து நிற்கிறது. அதிலிருந்து மெதுவாக இறங்கி வருகிறார் அண்ணா. எல்லோருக்கும் ஒரு பக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் வியப்பு. அண்ணா காஞ்சீபுரத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்னை வரும்போது வழியில் கார் பழுதாகிவிட்டது. அந்த இடத்தில் உடனடியாகப் பழுதுபார்ப்பதற்கான வசதி கிடையாது. எப்படியும் வேழவேந்தன் திருமணத்திற்குச் சென்றாக வேண்டும். என்ன செய்வது? என்று அண்ணா யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக ஒரு லாரி காலியாக வந்து கொண்டிருத்து. அது சென்னைக்குத்தான் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தச் சொல்லி அண்ணா அவர்கள் அதில் ஏறிக் கொண்டார்கள். அண்ணாவின் நிலை அறிந்த லாரி ஓட்டுநர் லாரியை மிக வேகமாகச் செலுத்தியதால் விரைந்து சென்னை வந்தடைந்தது. வேழவேந்தன் திருமணமும் தடையின்றி நடைபெற்றது. இப்படி ஒரு தலைவரைப் பார்க்க முடியுமா?
சா.கணேசன் மேயராக இருந்த போது அவரும் நானும் அண்ணாவைச் சந்திக்கச் சென்றோம். நுங்கம்பாக்கம் வீட்டின் மாடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். எதிரே நான்கு பேர் மட்டுமே அமரக்கூடிய இருக்கை (பெஞ்சு) ஒன்றிருந்தது. நாங்கள் நின்றுகொண்டே அண்ணாவிடம் பேசிக் கொண்டிருந்தோம். அண்ணா அவர்கள் எங்களைப் பார்த்து “உட்காருங்கள்” என்று சொல்லி எதிரே இருந்த இருக்கையைக் காட்டினார். அண்ணாவுக்கு எதிரே சரிக்குச் சமமாக உட்கார நாங்கள் விரும்பவில்லை. “பரவாயில்லை அண்ணா, நின்று கொண்டே பேசிவிட்டுச் செல்கிறோம்” என்று சொன்னோம். பிடிவாதமாக உட்காரச் சொல்லியும் நாங்கள் உட்காரவில்லை. அந்த நேரத்தில் மாடிப்படியில் ஏறி ஒருவர் மாடிக்கு வந்தார். அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திண்டிவனம் ஆ. தங்கவேலு. அவர் பின்னால் சில தோழர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் அண்ணா “குடுகுடு” என்று பக்கத்தில் இருந்த அறையில் நுழைந்து ஒரு பெரிய சமக்காளத்தை எடுத்து வந்து விரிக்க முனைந்தார். உடனே நான் “என்னிடம் கொடுங்கள் அண்ணா நான் விரிக்கிறேன்” என்றேன். கொடுக்க மறுத்துவிட்டுத் தாமே விரித்து, “இதில் எல்லாருமா உட்காருங்கள்” என்றார். தொண்டருக்கும் தொண்டராய் இப்படி எந்தத் தலைவராவது இயங்கியது உண்டா?
- கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #AIADMK
சென்னை:
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்ட பின்னடைவு குறித்தும், புதிதாக கட்சி பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் செயல்பாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. மாலை 4.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 8 மணிக்கு முடிந்தது.
கூட்டத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளா மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த இருக்கும் தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறது.
* பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைவருக்கும் இந்த கூட்டம் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.
* புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதமாக முடித்த அனைவருக்கும் நன்றி.
* சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜனவரி மாதம் நடத்த முயற்சி மேற்கொண்டிருப்பதற்கும், கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.10 கோடி நிவாரண நிதி மற்றும் பல கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கும், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருவதற்கும் தமிழக அரசுக்கு நன்றி.
* ரூ.328 கோடி செலவில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீராதாரத்தை பெருக்கிய தமிழக அரசுக்கு நன்றி.
* குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க பல திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி, பாராட்டு.
* இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் புனிதப்பயணம் மேற்கொள்ள நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு பாராட்டு.
* பெண்களுக்காக தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி.
* தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு விரைந்து வழங்க இந்த கூட்டம் வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்ட பின்னடைவு குறித்தும், புதிதாக கட்சி பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் செயல்பாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. மாலை 4.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 8 மணிக்கு முடிந்தது.
கூட்டத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளா மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த இருக்கும் தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறது.
* பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைவருக்கும் இந்த கூட்டம் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.
* புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதமாக முடித்த அனைவருக்கும் நன்றி.
* சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜனவரி மாதம் நடத்த முயற்சி மேற்கொண்டிருப்பதற்கும், கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.10 கோடி நிவாரண நிதி மற்றும் பல கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கும், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருவதற்கும் தமிழக அரசுக்கு நன்றி.
* ரூ.328 கோடி செலவில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீராதாரத்தை பெருக்கிய தமிழக அரசுக்கு நன்றி.
* குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க பல திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி, பாராட்டு.
* இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் புனிதப்பயணம் மேற்கொள்ள நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு பாராட்டு.
* பெண்களுக்காக தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி.
* தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு விரைந்து வழங்க இந்த கூட்டம் வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.