என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arjun kapoor"

    • பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் அர்ஜுன் கபூரும் காதலித்து வருகின்றனர்.
    • மலைக்கா அரோரா திருமணம் செய்து கொள்ளாமல் அர்ஜுன் கபூருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

    பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலின் மூலம் பிரபலமானார். இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்து வரும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.


    மலைக்கா அரோரா - அர்ஜுன் கபூர்

    மலைக்கா அரோரா சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு இவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார். தற்போது நடிகர் அர்ஜூன் கபூரை காதலித்து வரும் மலைக்கா அரோரா அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.


    மலைக்கா அரோரா - அர்ஜுன் கபூர்

    50 வயதை நெருங்கிவிட்ட மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வயதை பொருட்படுத்தாமல் காதலித்து வரும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நடிகை மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் ஒன்று தீயாய் பரவியது. அர்ஜுன் கபூரை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.


    மலைக்கா அரோரா - அர்ஜுன் கபூர்

    இதனால் கோபமடைந்த மலைக்கா அரோரா தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய செய்தி உண்மையில்லை என கூறியதோடு, இதுபோன்ற செய்திகளை பரப்பியவர்களை கடுமையாக சாடி இருந்தார். மேலும், அர்ஜுன் கபூரும் இதுகுறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பிரபல பாலிவுட் செய்தி வெப்சைட் ஒன்றின் செய்தியைக் குறிப்பிட்டு "நீங்கள் மிகவும் தரம் தாழ்ந்து சென்றிருக்கிறீர்கள். குப்பைச் செய்தியை சர்வசாதாரணமாக நேர்மையற்ற முறையில் வெளியிட்டு இருக்கிறீர்கள். இது போன்ற செய்தியை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    அர்ஜுன் கபூர் பதிவு

    இந்நிலையில், இவர் மீண்டும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், " கர்மா எல்லோரையும் பின்தொடர்கிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களை ஏமாற்றி விட்டு அதில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது, நீங்கள் யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. சுற்றி நடப்பதே சுற்றி வருகிறது. விரைவில் நீங்கள் செய்த செயலுக்கானப் பலனைத் திருப்பித் தந்துவிடும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • ’உயிரே’ படத்தின் "தைய தைய தைய்யா" என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் மலைக்கா அரோரா.
    • மலைக்கா அரோராவும், அர்ஜுன் கபூரும் லிவிங்டு கெதராக வாழ்ந்து வருகின்றனர்.

    மணிரத்னம் இயக்கத்தில் இந்தியில் உருவான 'தில்சே' தமிழில் 'உயிரே' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற "தைய தைய தைய்யா" என்ற பாடலுக்கு நடனமாடி மலைக்கா அரோரா தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து வந்தார்.


    மலைக்கா அரோரா- அர்ஜுன் கபூர்

    1998-ம் ஆண்டில் தயாரிப்பாளர் அர்பாஸ்கானை திருமணம் செய்தார். 2017-ம் ஆண்டு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது. பின்பு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூரை காதலித்தார். மலைக்கா அரோா, அர்ஜுன் கபூரை விட 12 வயது மூத்தவர் ஆவார். காதலுக்கு எதிர்ப்பு வந்த நிலையில் காதலிக்க வயதில்லை மனசு தான் காரணம் என்று லிவிங்டு கெதராக வாழ்ந்து வருகின்றனர்.


    குத்தாட்டம் போட்ட மலைக்கா அரோரா

    இந்த நிலையில் அர்ஜுன் கபூரின் 38-வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நண்பர்களுடன் மலைக்காவும் கலந்து கொண்டார். விழாவில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு போதையில் போட்ட குத்தாட்டம் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அர்ஜூன் கபூர் மேரி பட்னி கா படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.
    • இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது.

    பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் மற்றும் நடிகை மலைகா அரோரா காதிலத்து வந்தனர். இருவரும் ஜோடியாக வலம்வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாவது வாடிக்கையான ஒன்று தான். இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்த நிலையில், அர்ஜூன் கபூர் மற்றும் மலைகா அரோரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இருவரும் பிரிவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

    அர்ஜூன் கபூர் தற்போது மேரி பட்னி கா படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அர்ஜூன் கபூருடன் ரகுல் பிரீத் சிங் மற்றும் பூமி பெட்னேகர் நடிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜய் பால் இயக்கத்தில் வெளியானது தி லேடி கில்லர் திரைப்படம்.
    • இப்படத்தின் பொருட் செலவு 45 கோடி ரூபாய் ஆகும்.

     2023 ஆம் ஆண்டு அர்ஜூன் கபூர் மற்றும் பூமி பெத்நேகர் இணைந்து நடித்து அஜய் பால் இயக்கத்தில் வெளியானது தி லேடி கில்லர் திரைப்படமாகும். இப்படத்தின் பொருட் செலவு 45 கோடி ரூபாய் ஆகும்.

    ஒரு ப்ளே பாய்க்கும் ஒரு ஆபத்தான மர்மமான பெண்ணுக்கும் காதல் ஏற்படுகிறது இதனால் என்ன விளைவுகள் ஆகிறது என்பதே படத்தின் கதைக்களமாகும். இப்படம் வெளியான போது முதல் நாள் வசூல் வெறும் 38 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும். இந்தி திரையுலகில் பல ஃபலாப் ஆன திரைப்படங்கள் வெளிவருவதுண்டு ஆனால் இப்படம் அளவுக்கு எந்த திரைப்படமும் தோல்வியடையவில்லை.

    திரைப்படம் இதுவரை மொத்தம் 66 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இவ்வளவு படு தோல்வி அடைந்ததால் இப்படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்க முன்வரவில்லை. இதனால் இப்படத்தை தற்பொழுது யூடியூப் தளத்தில் இலவசமாக பார்க்கும்படி படக்குழு வெளியிட்டுள்ளது. யூடியூபில் இதுவரை 26 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

    99.99% தோல்வியடைந்தது இப்படமே என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளார்.
    • சமந்தா சமீபத்தில் வலைத்தளத்தில் பகிர்ந்த கவிதையை பார்த்து அனைவருக்கும் இந்த கவிதை ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் என்று பாராட்டினார்.

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளார்.

    இந்த நிலையில் சமந்தாவுக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூரின் முதல் மனைவியின் மகனும் இந்தி நடிகருமான அர்ஜுன் கபூருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு, இந்தி இணையதளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தி நடிகை மலைகா அரோராவுடனான காதலை அர்ஜுன் கபூர் முறித்துள்ள நிலையில், சமந்தா சமீபத்தில் வலைத்தளத்தில் பகிர்ந்த கவிதையை பார்த்து அனைவருக்கும் இந்த கவிதை ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் என்று பாராட்டினார்.



    சமந்தாவிடமும் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா அல்லது யாருடனாவது காதலில் இருக்கிறீர்களா? என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியபோது, 'விரைவில் நீங்களே பார்ப்பீர்கள்' என்று பதில் அளித்தார்.

    சமந்தா மும்பை செல்லும் போதெல்லாம் அர்ஜுன்கபூர் வீட்டில் தங்குவதாகவும், விருந்துகளுக்கும் இருவரும் ஜோடியாக செல்வதாகவும் கூறப்படுகிறது. விரைவில் சமந்தாவும், அர்ஜுன் கபூரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கிசுகிசுக்கின்றனர். ஆனாலும் இருவர் தரப்பிலும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×