என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arun vijay"

    • இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
    • எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

    நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'பவர் பாண்டி', 'ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்து இவரது இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.

    இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.



    இந்த நிலையில், 'இட்லி கடை' ஏப்ரல் 10-ந்தேதி வெளியாகவதில் இருந்து தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இன்னும் 10 முதல் 20சதவீத படப்பிடிப்பு மீதமுள்ளது. நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் போன்ற நடிகர்கள் ஒரே காட்சியில் நடிக்க வேண்டி உள்ளதால், அவர்களின் நேரத்தை ஒருங்கிணைப்பது சிரமமாக இருந்தது. படம் நன்றாக வந்திருப்பதால், அவசரப்படாமல் சிறப்பாக முடிக்க விரும்புகிறோம். இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. புதிய வெளியீட்டுத் தேதியை 10 நாட்களுக்குள் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

    இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவுள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'.
    • இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    காயங்களுடன் அருண் விஜய்

    இப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், நடிகர் அருண் விஜய் 'அச்சம் என்பது இல்லையே' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நீங்கள் திரையில் பார்க்கும் என்னுடைய அனைத்து கடினமான செயல்களுக்கு பின்னாலும் இது போன்ற ஏராளமான காயங்கள் உள்ளன. ஆனால், இப்போதும் ஸ்டன்ட் செய்ய விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் உங்களை முதலில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.




    • தமிழில் மிகவும் பிரபலமான நடிகர் விஜயகுமார்.
    • இவர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் பரவி வந்தது.

    தமிழில் பிரபல நடிகரான விஜயகுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகன், குணசித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். 'நாட்டாமை' படத்தில் இவரின் கதாபாத்திரம் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.


    விஜயகுமார் - அருண் விஜய்

    இந்நிலையில், நடிகர் விஜயகுமாருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளதாக வதந்திகள் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அப்பா வீட்டில் நலமுடன் இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களின் அன்பு மற்றும் அக்கறைக்கு நன்றி" என்று பதிவிட்டு தனது அப்பா விஜயகுமாருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.



    • அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் பார்டர்.
    • இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளார்.

    இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.


    பார்டர் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. இதையடுத்து இப்படம் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வெளியாகவில்லை. இந்நிலையில், 'பார்டர்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.



    • இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'.
    • இந்த படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார்.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    அச்சம் என்பது இல்லையே

    இப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எமி ஜாக்சன் மற்றும் இயக்குனர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் கவனம் பெற்று வருகிறது.


    • நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவுள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'.
    • இப்படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    முட்டிற்கு சிகிச்சை எடுக்கும் அருண்விஜய்

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இவர் கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அருண் விஜய் "காயம் ஏற்பட்ட என் முட்டிற்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்.. இது என்னுடைய நான்காவது நாள் சிகிச்சை.. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • சமீபத்தில் படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டது.
    • இதையடுத்து இவர் கேரளாவில் ஆயுர்வேத முறையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவர் கேரளாவில் ஆயுர்வேத முறையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். மேலும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


    அருண் விஜய் பதிவு

    இந்நிலையில், இவர் தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 படத்தில் நடிக்கிறார்.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.


    அஜித் - விக்னேஷ் சிவன்

    இதையடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் ஏகே62 படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக 'தடம்', 'மீகாமன்', 'கலகத்தலைவன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது.


    அஜித் - அருண் விஜய்

    இந்நிலையில், ஏகே62 படம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி, ஏகே62 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2015-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பார்டர்’.
    • இப்படம் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

    இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.


    பார்டர்

    இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. இதையடுத்து இப்படம் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வெளியாகவில்லை. இதையடுத்து இப்படம் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    பார்டர் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் படக்குழு தள்ளி வைத்துள்ளது. இது குறித்து 'பார்டர்' படக்குழு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், " அருண் விஜய்யின் 'பார்டர்' திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் தற்போதைய நிச்சயமற்ற சூழ்நிலைகளால் வெளியிட முடியவில்லை. இந்த திரைப்படம் உங்கள் பொறுமைக்கு தகுதியானதாக இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளனர்.

    மேலும், இப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் எனவும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.


    • சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பில் துணை நடிகை ஒருவர் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அதன்பின்னர் இப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படம் அருண் விஜய் மற்றும் ரோஷினி நடிப்பில் பாலா இயக்கி வருகிறார்.

    வணங்கான் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து, துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார்.

     

    துணை நடிகை லிண்டா

    துணை நடிகை லிண்டா

    இப்படத்தின் படப்பிடிப்பு 3 நாட்கள் முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை துணை நடிகை லிண்டா என்பவர், ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    • இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    ரோஷினி பிரகாஷ் - அருண் விஜய்

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’.
    • இப்படத்தின் டைட்டிலை தற்போது படக்குழு மாற்றியுள்ளது.

    இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.


    மிஷன் சாப்டர் 1 படக்குழு

    இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் டைட்டிலை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'மிஷன் சாப்டர் 1 : ஃபியர்லஸ் ஜார்னி' (mission chapter 1 : fearless journey) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    ×