என் மலர்
நீங்கள் தேடியது "arunkumar"
- இயக்குனர் அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'சித்தா' படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன் இப்படம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, "வித்தியாசமான தமிழ் படங்களை பார்க்க வேண்டும் எடுக்க வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் உன்னத ரசிகர்களில் ஒருவர் சித்தார். இப்படி சினிமாவை நற்திசையில் நோக்கி நகர்த்தும் பல கலைஞர்களில் முக்கியமான ஒருவர் சித்தார்த். அவர் 'சித்தா' படத்தின் நாயகன். சித்தப்பாவாக இருப்பது மிகவும் கடினம் கூட மிகவும் சந்தோஷமானதும் கூட. இந்த சித்தப்பாவின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். 'சித்தா' திரைப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சித்தா'.
- இப்படத்தை சித்தார்த் தயாரித்திருந்தார்.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சித்தா'. இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.

சித்தா போஸ்டர்
இந்நிலையில், 'சித்தா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 17-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சித்தா திரைப்படத்தை இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.
- சித்தா படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.
நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.

இந்த படத்திற்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், சித்தா படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி சித்தா திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நவம்பர் 28-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
- மூன்று படங்களில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண்.
- எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு. அருண்குமாருடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை இயக்கும் அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர். இது குழந்தைகளின் பாதுகாப்பை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்ட படம்.

விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சேதுபதி (2016), சிந்துபாத் (2019) என்று தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண்.

'சியான் 62' படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியதாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தில் தேசிய விருது வென்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இதே படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- 'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்
- இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.
'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் 'ராயன்' , 'வேட்டையன்' ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது 'சீயான்' விக்ரம் நடிப்பில் தயாராகும் 'சீயான் 62' படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது.
'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சியான் 62' படத்தை ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் டைட்டில் 'ப்ரோமோ' விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17- ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டனர். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் தற்பொழுது 1 டே டூ கோ என்ற புது போஸ்டரை சீயான் விகரம் அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவரின் முகம் முழுவதும் ஒரு துணியால் சுற்றி இருக்கிறது. அவரின் கண் மட்டும் வெளியே தெரிகிறது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிக்ப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மூக்கில் இருந்து ரத்தம் வந்தபோது கூட பயிற்சியை கைவிடாமல் தொடர்ந்தேன்.
- முறையான பயிற்சி, மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் யாரும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டாம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூர் பகுதியை சேர்ந்தவர்கள் பாப்பையா-சுப்புலட்சுமி தம்பதியின் மகன் அருண்குமார். இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
சிறுவயது முதலே ஏதாவது சாதனை படைத்து பலரை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் அருண்குமார்.
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் உன்னால முடியாது என்று சொல்வது இவருக்கு ஏதோ தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏன் இதை கின்னஸ் சாதனையாக செய்ய கூடாது என்ற எண்ணம் அவருக்கு தோன்றி உள்ளது.
இதுதொடர்பாக அருண்குமார் கூறுகையில்,
தினமும் தலைகீழாக நின்று பயிற்சி செய்தேன். அதன்பிறகு ஒரு கையை ஊன்றி தண்ணீர் குடிக்க பயிற்சி எடுத்தேன்.
தண்ணீர் குடித்தால் முதலில் சிரசில் அடித்து விடும். பிரஷர் தாங்காமல் மூக்கில் இருந்து ரத்தம் கூட வந்து இருக்கிறது. ஒரு கையை ஊன்றி தண்ணீர் குடிப்பது சிரமமாக இருந்தது.
தலைகீழாக நின்று கொண்டு 1 டம்ளர் தண்ணீர் குடிக்க பயிற்சி எடுத்தேன். பின்னர் 2 டம்ளர் தண்ணீர், 3 டம்ளர் தண்ணீர் என பயிற்சி எடுத்தேன்.
மூக்கில் இருந்து ரத்தம் வந்தபோது கூட பயிற்சியை கைவிடாமல் தொடர்ந்தேன்.

இந்த பயிற்சிக்குப்பின்னர் தலைகீழாக நின்று 25.01 வினாடியில் ஒரு லிட்டர் தண்ணீரை குடித்து அருண்குமார் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பலர் ஏன் இந்த தேவையில்லாத விஷப்பரீட்சை என்று கூறினாலும் எனது அம்மா, சகோதரர்கள், நண்பர்கள் உன்னால் முடியும் என்று கூறியதால் தான் என்னால் சாதிக்க முடிந்தது.
முறையான பயிற்சி, மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் யாரும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டாம்.
என்னதான் அத்தனை பேரும் ஊக்கப்படுத்தினாலும், 'வலிமை' படத்தில் நடிகர் அஜித்தின் பைக் ஸ்டண்ட் பார்த்து தான் முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கையே வந்ததாக அருண்குமார் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பதே எனது ஆசை என்று அருண்குமார் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையில் உள்ளவர்களை ஊக்குவிப்பது போன்று சாதனை படைத்தவர்களையும் அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
We are happy to inform that TN Theatrical Rights of #Sindhubaadh has been acquired by @ClapBoardPr Sathyaamoorthi.
— VANSAN MOVIES (@VANSANMOVIES) May 28, 2019
Releasing Soon. Stay Surfed.
An #SuArunkumar Film
A @thisisysr Musical
Produced by @KProductionsInd - @VANSANMOVIES@VijaySethuOffl@yoursanjali@Rajarajan7215pic.twitter.com/WUXz4W9whY
#Sindhubaadh dubbing started ✌🏻
— VijaySethupathi (@VijaySethuOffl) January 20, 2019
An #SUArunkumar Film | A @thisisyr musical |
Produced @KProductionsInd & @VANSANMOVIES@yoursanjali@Rajarajan7215@irfanmalik83@mounamravi@Muzik247in@CtcMediaboypic.twitter.com/1bUogXAFPy
#Sindhubaadh#HappyBirthdayVijaysethupathi my best wishes to my @VijaySethuOffl#directorarunpic.twitter.com/MIAYosQ3aJ
— Yuvanshankar raja (@thisisysr) January 16, 2019