என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aryan"

    • சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்பது முழு பாரதத்தையும் தழுவிய வேத நாகரிகம்.
    • சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் வரலாற்று ரீதியிலான சரியான தகவல்களை பங்கேற்பாளர்கள் பரப்ப வேண்டும்.

    சென்னை டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் சிந்து நாகரிகம் குறித்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வேதங்களின் மூலம் சிந்து நாகரிகம் பெற்ற ஞானம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதம் மற்றும் அதன் கலாசாரத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும், படைப்பின் ஒற்றுமை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் தொடர்ந்து நம்மை ஈர்த்து, நமது தோற்றத்தை தனிப்பட்ட அளவிலும் உலகளவிலும் எவ்வாறு வரையறுத்து வருகின்றன.

    ஆரிய படையெடுப்பு மற்றும் ஆரிய இனம் பற்றிய கோட்பாடுகளை பொய்யாகப் பரப்பிய மார்க்சிஸ்ட் மற்றும் திராவிட சித்தாந்தங்களைத் தழுவியவர்கள் உள்பட ஐரோப்பிய காலனியவாதிகள், நீண்ட கால அறிவுசார் மற்றும் அரசியல் வன்முறை துணையுடன் மேற்கொள்ளும் வரலாற்றுத்திரிபுகள் மற்றும் தவறான உள்அர்த்தம் கற்பிக்கும் செயல்பாடுகளில் இருந்து இந்த நாகரிகத்தை பங்கேற்பாளர்கள் மீட்க வேண்டும்.

    செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அணு இயற்பியல் உள்ளிட்ட நவீன அறிவியல், சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்பது முழு பாரதத்தையும் தழுவிய வேத நாகரிகம் என்ற வரலாற்று உண்மையை அறிவியல்பூர்வமாக நிறுவியுள்ளது.

    நமது விரிவான தேசிய மறுமலர்ச்சி காலத்தில், சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் வரலாற்று ரீதியிலான சரியான தகவல்களை பங்கேற்பாளர்கள் பரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் சட்டப்பூர்வமாக தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். #VishnuVishal #Divorce
    ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ராட்சசன் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இவர், நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் உள்ளார்.



    இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தனர். இப்போது அவர்களுக்கு கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. இதுகுறித்து விஷ்ணு விஷால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “நானும், ரஜினியும் ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கிறோம். இப்போது எங்களுக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு நல்ல பெற்றோர்களாக இருப்பது எங்களின் முக்கிய கடமையாகும். அவனுக்கு நல்லதை செய்வோம். நாங்கள் சில சந்தோஷமான ஆண்டுகளை ஒன்றாக கழித்து இருக்கிறோம். இனிமேலும் நல்ல நண்பர்களாக இருப்போம். ஒருவரையொருவர் மதிப்போம். எங்கள் மகன் மற்றும் இரு குடும்பங்களின் நலன் கருதி எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். #VishnuVishal #RajiniNatraj #Divorce

    ×