என் மலர்
நீங்கள் தேடியது "Astrology"
- 27-ந்தேதி வியாழக்கிழமை பிரதோஷம்.
- 29-ந்தேதி சனிக்கிழமை அமாவாசை.
25-ந்தேதி (செவ்வாய்)
* சர்வ ஏகாதசி.
* திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
மேல்நோக்கு நாள்.
26-ந்தேதி (புதன்)
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
27-ந்தேதி (வியாழன்)
* பிரதோஷம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி தங்க சூரிய பிரபையில் வேணுகோபாலன் திருக்கோலக் காட்சி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் விடையாற்று உற்சவம், இரவு சுவாமி, அம்பாள் புஷ்பக விமானத்தில் பவனி.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
28-ந்தேதி (வெள்ளி)
* திருப்புவனம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
29-ந்தேதி (சனி)
* அமாவாசை.
* தாயமங்கலம் முத்து மாரியம்மன் விழா தொடக்கம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி வைரமுடி சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் வைகுண்டநாதன் காட்சி.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
30-ந்தேதி (ஞாயிறு)
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி காலை காளிங்க நர்த்தனம், மதியம் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமன் வாகனத்தில் ராமர் திருக்கோலம்.
* தாயமங்கலம் முத்து மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
31-ந்தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
* திருப்புவனம் கோதண்ட ராம சுவாமி பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் கோவிலில் கருடாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
- 20-ந்தேதி சஷ்டி விரதம்.
- இன்று திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருக்கல்யாணம்.
18-ந்தேதி (செவ்வாய்)
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருக்கல்யாணம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி உற்சவம் ஆரம்பம்.
* காங்கேயம் முருகப்பெருமான் லட்சதீபக் காட்சி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி பிரபையிலும் தாயாருடன் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
19-ந்தேதி (புதன்)
* நத்தம் மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்,
20-ந்தேதி (வியாழன்)
* சஷ்டி விரதம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.
* திருவாரூர் தியாகராஜர் பவனி.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.
21-ந்தேதி (வெள்ளி)
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
22-ந்தேதி (சனி)
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவரங்கம் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்,
* கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (ஞாயிறு)
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கண்ட பேரண்ட பட்சி ராஜ அலங்காரம்.
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு சுவாமி புன்னை மரம், தாயார் அலங்காரப்படி சட்டத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (திங்கள்)
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலையில் வெண்ணெய்த்தாழி சேவை.
* மேல்நோக்கு நாள்.
- இன்று மாலை 5:32 மணி முதல் 6:18 வரை சந்திர கிரகணம் நடைபெறவிருக்கிறது.
- ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.
அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம், இந்த நட்சத்திரக்காரர்கள் கிரகண நேரம் முடிந்தவுடன் தலைக்கு குளித்துவிட்டு வீட்டை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று ராகு பகவானுக்கு உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சந்திர பகவானுக்கும் உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். நவகிரகங்களில் உள்ள ராகு சந்திரன் இருவருக்கும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வெள்ளை நிற வஸ்திரம், நெல், வெற்றிலை பாக்கு வைத்து யாருக்கேனும் தானம் கொடுக்க வேண்டும். அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகருக்கு கூட இந்த தானத்தை செய்யலாம். இதை சந்திர ப்ரீத்தி பரிகாரம் என்று சொல்லுவார்கள்.
கிரகண நேரத்தின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்: மேஷ ராசியில் உள்ள பெண்கள் கிரகண நேரத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். அதே சமயம் கிரகண நேரத்தின் போது உங்களுடைய மனதிற்குள் ஏதாவது உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை ஜெபமாக சொல்லுங்கள். சிம்ம ராசிக்காரர்கள், தனுசு ராசிக்காரர்கள், மீன ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள், கவனமாக இருக்க வேண்டும்.
வெளியில் செல்ல கூடாத ராசி: குறிப்பாக மகர ராசிக்காரர்கள் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. கூடுமானவரை வெளியிடங்களுக்கு பிரயாணம் செய்யாமல் இருப்பது நல்லது. அப்படியே உங்களுக்கு வெளியில் பிரயாணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ராமஜபம் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் நாராயணனின் பேரை உச்சரிக்கலாம். அல்லது 'ஓம் நமசிவாய' மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.
கிரகண நேரத்தின்போது கூடுமானவரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பாதீங்க. வெளியிடங்களில் பெரியவர்கள் இருப்பதை கூட தவிர்ப்பது நல்லது. கிரகண நேரத்தில் எந்த பிரச்சனையிலும் போய் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அனைவருமே அவரவர் வீட்டில் இருந்தபடி அவரவருக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருப்பதன் மூலம் வரக்கூடிய பிரச்சனைகளின் பாதிப்பு குறையும்.
- புதனுடன் தொடர்புடைய கடனானது வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கும்.
- குருவுடன் தொடர்புடைய கடனானது கந்து வட்டியில் சிக்க வைக்கிறது.
குடும்ப கடன்
1, 2, 6-ம் பாவகங்கள் ஒன்றோடொன்று இணைவு பெறும் போது ஜாதகரின் நடவடிக்கையாலும், குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்காகவும் நோயினாலும் கடன் ஏற்படுகிறது. 1,3,6,8,12-ம் பாவக இணைவால் போலீஸ், கோர்ட், கேஸ், கட்டப்பஞ்சாயத்து, நஷ்டம் அவமானமும், தற்கொலை எண்ணம், சிறை தண்டனையும் உண்டாகும் இவர்களில் பெரும்பான்மையானோர், ஷேர், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள் மூலம் பணத்தை தொலைத்து கடனாளியானவர்கள். 6, 7-ம் பாவக இணைவால் தொழில் கூட்டாளியாலும், களத்திரத்தின் மூலமும் கடன் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு 6, 7-ம் பாவகம் தொடர்பு இருக்கக் கூடாது. 6, 7, 8-ம் பாவக தொடர்பு பெற்ற தம்பதியினர் மற்றும் தொழில் கூட்டாளிகள், போலீஸ் கோர்ட், கேஸ், விவாகரத்து என்று அலைந்தே பாதி வாழ் நாளை தொலைத்து எஞ்சிய வாழ்நாளில் விரக்தியின் உச்ச கட்டத்திற்கு சென்று தவறான முடிவு எடுக்கிறார்கள். பல சந்தர்பங்களில் கணவனால், மனைவியும், மனைவியால் கணவனும் கடன் தொல்லையால் பிரிகிறார்கள். 5,6,9-ம் பாவக இணைவால் பூர்வீக சொத்தைக் காப்பாற்ற கடன், பூர்வீகச் சொத்து வழக்கு, தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மூலமும் உருவாகும்.
தொழில் கடன்
6, 10-ம் பாவக இணைவால் தொழில் இழப்பு, தொழில் நட்டமும் ஏற்படுகிறது. இத்துடன் சூரியன், சுக்கிரன் இணைவு பெற்றவர்கள் தொழில் நிர்வாகத்திற்கும், ஆடம்பரத்திற்கும் செலவு செய்தே கடனாளியாகிறார்கள். 6,7,10-ம் பாவகம் தொடர்பு பெற்றவர்கள் கூட்டுத் தொழிலால் கடனாளியாகிறார்கள்.
நம்பிக்கைத் துரோக கடன்
3, 11-ம் பாவகம் 6-ம் பாவகத்தோடு இணைவு பெறும் போது உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாலும், இளைய மனைவியாலும், காதலர்கள் அதீத அன்பால் ஒருவர் பிரச்சினையை அடுத்தவர் சுமப்பது போன்றவைகளாலும் ஏற்படுகிறது. 6-ம், 6-ம் இணைவு பெற்றால் பரிவு மிகுதியால் ஜாமின் போட்டு கடனையும் சத்ருவையும் உருவாக்கி வட்டிக்கு வட்டிகட்டி சொல்ல முடியாத துயரம் ஏற்படும்.
சுப கடன்
4 மற்றும் 6-ம் பாவக இணைவால் வீடு, வாகனம், நிலம், விவசாயம், தாய் மற்றும் தாய் வழி உறவினர் மூலமும் கடன் உருவாகும். சுகஸ்தானத்தில் கோச்சார அஷ்டமாதிபதி அல்லது பாதகாதிபதி பயணம் செய்யும் போது நகை அடமானத்திற்கு சென்று விடுகிறது. 5, 6-ம் பாவகம் இணைவால் குழந்தைகளின் கல்வி, திருமணம், நோயினால் கடன் ஏற்படும்.
பேராசை கடன்
6-ம் அதிபதி 11-ம் அதிபதியுடன் சம்மந்தப்பட்டால் மூத்த சகோதரிகளால் நஷ்டம், கடன் உருவாகும். சிலர் பேராசை மிகுதியால் உத்தியோகத்தில் இருக்கும் காலத்தில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அல்லது சேர்மார்க்கெட், சூதாட்டத்தால் கடன்படுகிறார்கள். சிலர் ஆடம்பரச் செலவினால் கடனை விலை கொடுத்து வாங்குகிறார்கள். சிலர் இளைய தாரம் எனும் வைப்பாட்டி கொடுமையால் உடம்பில் உயிரைத் தவிர மீதி அனைத்தையும் கடனுக்காக இழக்கிறார்கள். தங்களுடைய வரவிற்கு அதிகமாக கடன் வாங்கிய பலர் கடன் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் பணக்காரனாக வாழ முடியாவிட்டாலும் பரவாயில்லை கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்ற மன நிலைக்கு வந்து விடுகிறார்கள். 6-ம் அதிபதியுடன் புதன், குரு, ராகு, கேதுக்கள் இணைவு பெறும் போதும் தசா நடக்கும் போதும் 80 சதவீதம் பேர் தங்களின் தகுதிக்கு மீறிய கடனை சுமக்கிறார்கள். புதனுடன் தொடர்புடைய கடனானது வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையையும், குருவுடன் தொடர்புடைய கடனானது கந்து வட்டியிலும் சிக்க வைக்கிறது. ஜனன கால ஜாதகத்தில் குரு, ராகு கேதுவுடன் உள்ள தொடர்பே கடன் ஏற்படும் காலத்தையும் நிவாரணம் ஏற்படும் காலத்தையும் உணர்த்தும்.
- ஒருவரின் ஜனன ஜாதகத்தின் படி தான் கடன் வாழ்க்கை அமைகிறது.
- உறவே ஒருவரை கடனில் இருந்து மீட்கும் வலிமை படைத்தவர்.
ஒருவரின் சுய ஜாதக ரீதியாக 5-ம் இடத்துடன் சம்பந்தம் பெற்ற கிரக காரக உறவே ஒருவரை கடனில் இருந்து மீட்கும் வலிமை படைத்தவர்.
சூரியன்
5-ம் இடத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு தந்தை, மாமனார், அரசியல்வாதிகள் அல்லது சூரியனின் ஆதிக்கம் நிறைந்த பெயர் கொண்டவர்கள், சிவனின் பெயர் கொண்டவர்கள் மூலம் கடனை தீர்க்க உதவி கிடைக்கும்.
சந்திரன்
5-ம் இடத்திற்கு சந்திரன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு தாயார், மாமியார் அல்லது வயதான உறவுப் பெண்கள், சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த பெயர்கள் கொண்டவர்கள், அம்மன் பெயர் கொண்டவர்கள் கடன் தீர்க்க உதவுவார்கள்.
செவ்வாய்
5-ம் இடத்திற்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள், மைத்துனர்கள், முருகனின் பெயர் கொண்டவர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு வீடு, நிலம் போன்ற சொத்துகளை விற்பதன் மூலம் கடன் அடையும்.
புதன்
5-ம் இடத்திற்கு புதன் சம்பந்தம் பெற்றால் தாய் மாமன், நண்பர்கள், காதலன், காதலி, மகா விஷ்ணுவின் பெயரில் உள்ளவர்கள், வங்கி கடன், நிலம் விற்பனை மூலம் கடன் தீரும்.
குரு
5-ம் இடத்திற்கு குரு சம்பந்தம் பெற்றால் பிள்ளைகள், பாட்டனார் சித்தர்களின் பெயரை கொண்டவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
சுக்ரன்
5-ம் இடத்திற்கு சுக்ரன் சம்பந்தம் இருந்தால் அத்தை, பெரியம்மா, மனைவி, மகாலட்சுமியின் பெயர் உள்ளவர்கள் மூலம் கடன் தீரும்.
சனி
5-ம் இடத்திற்கு சனி சம்பந்தம் பெற்றால் ரத்த பந்த உறவுகளான சித்தப்பா, பங்காளிகள், சின்ன மாமனார், வேலையாட்கள் , நம்பிக்கையான விசுவாசிகள், காவல் தெய்வத்தின் பெயரைக் கொண்டவர்கள் மூலம் உதவி கிடைக்கும். பலர் சுயமாக உழைத்து கடன் தீர்க்கிறார்கள்
ராகு/கேது
5-ம் இடத்துடன் ராகு/கேது சம்பந்தம் பெறுபவர்கள் குல தெய்வ வழிபாட்டால் கடனில் இருந்து விடுபட முடியும். மேலே குறிப்பிட்டது போல் 6-ம் பாவக அதிபதியோடு தொடர்பு பெறும் கிரகம் கடனையும், 5-ம் பாவகத்தோடு தொடர்பு பெறும் கிரகம் கடனிலிருந்து விடுபடும் காலத்தையும் உணர்த்தும். கடன் வாங்கும் முன்பே சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் , ருண ஸ்தானம் , பாக்கிய ஸ்தானம், அஷ்டம ஸ்தானங்களையும் தசா, புத்திகளை ஆய்வு செய்து கடன் வாங்குவதை முடிவு செய்தல் சிறப்பு. எவர் ருணம், ரோக சத்ரு ஸ்தானத்தை பரிபூரணமாக அனுபவித்து அவதியுறுகிறார்களோ அவர்களுக்கு தான் ஞானம் பிறக்கும். ஞானம் பிறந்தவன் தான் முக்திக்கு வழி தேடுகிறான். சென்ற பிறவியில் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.
- பூர்வ ஜென்ம பந்த ரத்த உறவுகளை உதறித் தள்ள முடியாது.
- வாழும் காலத்தில் அனுசரித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லது.
பல குடும்பங்களில் தந்தையும் மகனும் பங்காளிகளாகவே வாழ்கிறார்கள். பல குடும்பங்களில் தந்தையும் மகனும் ஒரே வீட்டில் இருந்தும் பல வருடங்களாக பேசாமல் வாழ்கிறார்கள். ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் - நல்ல நிலையில் இருந்தால், ஜாதகன் தன் தந்தை, மகன் அன்பு சிறக்கும்.
ஜனன கால ஜாதகத்தில் எந்த கிரக நிலவரம் எப்படி இருந்தாலும் தந்தை மகன் கருத்து ஒற்றுமை மிக அவசியம். இதற்கு தீர்வு கிடைக்குமா? உண்டா? என்பதே பலரின் ஆதங்கம். உளவியல் ரீதியாக எந்த பிரச்சினைக்கும் தீர்வு அவரவர் கையில் தான் இருக்கிறது. ஒருவருடைய உணர்வை புரிந்து கொள்ளாமை, சிறிய பிரச்சினையை பெரிது படுத்துவது, சகிப்பு தன்மை இன்மையும், கருத்து வேறுபாட்டிற்கு பிரதானமான காரணமாக திகழ்கிறது.
ஆனால் தாய், தந்தை, முன்னோர்கள், உடன் பிறந்தவர்கள், நமக்கு பிறக்கும் குழந்தைகள், உற்றார் உறவினர்களை தேர்வு செய்யும் உரிமையை பிரபஞ்சம் யாருக்கும் வழங்கவில்லை. எத்தனை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் இந்த பூர்வ ஜென்ம பந்த ரத்த உறவுகளை உதறித் தள்ள முடியாது, உறவுகளே வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும் நம்முன்னோர்கள் தாய், தந்தை வழியாக நமக்குள் புகுந்த மரபணுக்களே நம்மை இயக்கும். எனவே வாழும் காலத்தில் அனுசரித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லது.
பரிகாரம்
வாரிசுகளால் மன உளைச்சலை சந்திப்பவர்கள் பிரதோசத்தன்று சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யவும்.
தந்தையுடன் கருத்து வேறுபாடு இருப்பவர்கள் சனிக்கிழமை தோறும் ஸ்ரீ மத் ராமாயணத்தில் சுந்தர காண்டம் பாராயணம் செய்து வர வேண்டும்.
தந்தை-மகன் ஒற்றுமையை அதிகரிக்க கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சுவாமிமலை சென்று வர நல்ல மாற்றம் தெரியும்.
- நூற்றுக்கும் மேலான ஜாதக யோகங்கள் இருக்கின்றன.
- அனைவரது ஜாதகத்திலும் ஒரு சுப யோகமாவது இருந்தே தீரும்.
உலகில் பிறக்கும் அனைவரது ஜாதகத்திலும் ஒரு சுப யோகமாவது இருந்தே தீரும் என்று நமது ஜோதிட மகரிஷிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜோதிட ரீதியாக, தர்ம-கர்மாதிபதி யோகம், பஞ்ச மகா புருஷ யோகங்கள், குரு-மங்கள யோகம், சந்திர-மங்கள யோகம், குரு-சந்திர யோகம், கஜகேசரி யோகம், விபரீத ராஜயோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம் உள்ளிட்ட பல்வேறு சுப யோகங்களும், பந்தன யோகம், சகட யோகம், சூல யோகம், பாப-கர்த்தாரி யோகம் உள்ளிட்ட பல்வேறு அசுப யோகங்களும் சேர்ந்து நூற்றுக்கும் மேலான ஜாதக யோகங்கள் இருக்கின்றன.
மேற்குறிப்பிட்டவை தவிர, பஞ்சாங்கத்தின் நான்காவது அமைப்பான நித்திய நாம யோகமும் கணக்கில் கொள்ளப்படுகிறது. விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான், சவுபாக்யம், சோபனம் உள்ளிட்ட 27 நாம யோகங்கள் உள்ளன. நல்ல காரியங்கள் செய்வதற்கான முகூர்த்த நாள் தேர்வில் வாரம், திதி, நட்சத்திரம், கரணம் என்ற வரிசையில் யோகமானது நான்காவதாக அமைந்து முக்கியத்துவம் பெறுகிறது.
- ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்க்கை இருந்தால் முதல் தாரத்துடன் பிரிவினையை ஏற்படுத்துகிறது.
- பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் சம்பந்தம் இருந்தால் முதல் தாரத்துடன் பிரிவினையை ஏற்படுத்துகிறது.
ஒரு திருமணம் கூட நடக்காமல் திருமண வாழ்க்கைக்காக பலர் ஏங்கிக் கொண்டு இருக்கும் காலத்தில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்து விடுகிறது.
ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் இரண்டாம் இடம் எனும் குடும்ப ஸ்தானத்தின் மூலம் ஏழாமிடம் ஆணின் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும் பெண்கள் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும் அறியலாம்.
ஆண்கள் ஜாதகத்தில் சுக்ரன் கேது சேர்க்கை, பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் சம்பந்தம் இருந்தால் முதல் தாரத்துடன் தேவையற்ற வம்பு வழக்கு அல்லது பிரிவினையை ஏற்படுத்துகிறது.
திருமணப் பொருத்தம் பார்க்கும் போது ரஜ்ஜு, யோனி பொருத்தம் இல்லாத ஜாதகம் தம்பதியினரை பிரிக்கும்.11-ம் பாவகத்திற்கு திரிகோணதிகள் சம்பந்தம் பெறும் போது சட்டப்படியான மறுமணமும், அசுப மற்றும் லக்ன பாவிகள் சம்பந்தம் பெறும் போது சட்டத்திற்கு புறம்பான உறவும் ஏற்படும்.
11-ல் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்தல், 1, 11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறும்போது இரு தாரம் ஏற்படும். 7-ம் அதிபதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகம் சம்பந்தம் பெறுவது இரண்டுக்கும் மேற்பட்ட திருமணத்தை கூட தரும். ஜென்ம லக்ன அடிப்படையில் இருதார அமைப்புகள் ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், மீனம் ஆகிய 5 லக்னத்திற்கு இயல்பாகவே இருப்பதால் இரு தார யோகம் உண்டு.
ரிஷபம் : கால புருஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்ரனின் ஆட்சி வீடு ரிஷபத்தில் உச்சம் பெறும். ராகு ஏழாம் இடமான விருச்சிகத்தில் நீசம் பெறும். விருச்சிகம் கால புருஷ ஸ்தானத்தில் எட்டாம் இடம். எட்டாம் இடம் மறைவு ஸ்தானம் என்பதால் வெளியுலகத்திற்கு தெரிவிக்க முடியாத மறைவு வாழ்க்கை நிச்சயம் உண்டு.
மிதுனம் : இந்த லக்னம் கால புருஷ ஸ்தானத்தில் மூன்றாம் இடம் என்பதால் அடிக்கடி வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். லக்னாதிபதி புதன் இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம். புதனும், சுக்ரனும் நட்பு கிரகம். மேலும் சுக்ரன் மிதுனத்திற்கு 5, 12-ம் அதிபதி என்பதால் தக்க நேரத்தில் துணையாக இருந்து இரண்டு தார யோகத்தை செய்து காட்டுவார். இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கும் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கும் புதன், சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் இரண்டு திருமணம் உண்டு.
கடகம் : கடக லக்னத்தினருக்கு சுக்ரன் 11-ம் அதிபதி. சுக்ரன் ஆட்சி, உச்சம் சுயசாரம் பெற்றால் இருதார யோகம் உண்டாகும்.
துலாம் : கால புருஷ ஸ்தானம் ஏழாம் இடம். இதன் அதிபதி சுக்ரன். சுக்ரனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் சனி தசை சுக்ர புத்தி அல்லது சுக்ர தசை, சனி புத்தியால் இரண்டாம் திருமணம் நடக்கிறது.
மீனம் : இயல்பாகவே இரட்டை தன்மை நிறைந்த லக்னம். மீனத்தில் சுக்ரன் உச்சம் பெறும்போதுஏழாம் வீடான கன்னியில் சுக்ரன் நீசம்பெறும் என்பதால் அழகான பெண் அல்லது வெகுளியான பெண்களின் அன்புக்கு அடிமையாகி தனக்காக ஒரு வாழ்க்கையும் ஊருக்காக ஒரு வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.
பொதுவாக எந்த தசை நடந்தாலும் தசைஅல்லது புத்தி நாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு.
- ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு.
- இன்று மாலை மாலை 6.04 மணிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்.
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச் சகம் வாழ இன்னருள் தா தா
நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3-ம் நாள் 17.1.2023 செவ்வாய் கிழமை இன்று மாலை 6.04 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி நவகிரகங்களில் நீதிமானாக போற்றப்படும் சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில்(காலபுருஷ10ம் ராசி) அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து மற்றொரு சொந்த வீடான கும்ப ராசி (காலபுருஷ11ம் ராசி) அவிட்டம் 3ம் பாதம் சென்று ஆட்சி பலம் பெறப்போகிறார்.
சனி பகவான் தனது 3ம் பார்வையால் காலபுருஷ முதல் ராசியான மேஷத்தில் உள்ள ராகுவையும் ஏழாம் பார்வையால் காலபுருஷ ஐந்தாம் ராசியான சிம்மத்தையும் பத்தாம் பார்வையால் காலபுருஷ அஷ்டம ஸ்தானமான விருச்சிகத்தையும் பார்வையிடு கிறார்.
சனிப் பெயர்ச்சி அனைவருக்கும் கெடுபலன் தராது. அவரவரின் சுய ஜாதகத்தில் நடப்பில் உள்ள தசை புத்திக்கு ஏற்ற சுப, அசுப விளைவுகளே நடக்கும். எனவே பரிகார ராசியினர் சுய ஜாதகரீதியான நடப்பு திசை மற்றும் புத்தி அறிந்து அதற்கேற்ப பரிகாரங்கள் மற்றும் இறைவழிபாடுகளை கடைபிடிக்க நல்ல விதமான முன்னேற்றங்கள் உண்டாகும்.
பரிகார ராசிகள்:
கடகம் - அஷ்டமச் சனி
சிம்மம் - கண்டகச் சனி
விருச்சிகம் - அர்தாஷ்டமச் சனி
மகரம் - பாதச் சனி
கும்பம் - ஜென்மச் சனி
மீனம் - ஏழரைச் சனி ஆரம்பம்
கடக ராசியினர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் சென்று வழிபடவும்.பிற 5 பாரிகார ராசியினர் குச்சனூர் அல்லது திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வழிபட வேண்டும்.
மேஷம் - லாபச் சனி
ரிஷபம் - தொழில் சனி
மிதுனம் - பாக்கியச் சனி
கன்னி - ரோக ஸ்தான சனி
துலாம் - பஞ்சம சனி
தனுசு - சகாய ஸ்தான சனி
இந்த ராசியினர் சனிக்கிழமை சிவன் கோவிவில் உள்ள கால பைரவரை வழிபட நன்மைகள் இரட்டிப்பாகும்.
அதே போல் சனிப் பெயர்ச்சி என்றவுடன் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.ஏப்ரல் 22, 2023ல் ஏற்படப் போகும் குருப்பெயர்ச்சியால் உலகிற்கு பல்வேறு சுப பலன்களும் உண்டாகும். சில மாதங்கள் ராகு குருவை கிரகணப் படுத்தினாலும் மீதமுள்ள மாதங்களில் நல்ல மாற்றங்கள் நிச்சயம் உண்டு.
மகர ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த இரண்டேகால் வருடத்தில் சுமார் ஒன்பது மாத காலம் சனி பகவான் வக்ர கதியில் இருப்பதால் குருவின் உதவியுடன் எளிமையாக சனி பகவானின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது ஆறுதலான விசயம்.
அனைவரும் தமது கடமையையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வரை நமது செயல்பாடுகளால் பிறரை காயப்படுத்தாமல் வாழும் வரை துன்பம் யாரையும் நெருங்காது. அத்துடன் வாக்கிய பஞ்சாங்கம் சரியா? திருக்கணித பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதமும் அவசியமற்றது. அவரவரின் சுய அனுபவத்தில் எந்த பஞ்சாங்க முறை ஒத்து வருகிறதோ அதை பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது.
நடப்பது கலியுகம். ஆக்கமும் அழிவும் தருவது இயற்கை. கிரகங்கள் தன் கடமையை செய்யும் போது நமக்குள் இருக்கும் உயிரே இறைவன் என்பதை உறுதியாக உணரும் போது, ஆத்மா புனிதமடையும்.
ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. சனி பகவான் காற்று ராசியான கும்பத்தில் சஞ்சாரம் செய்வதால் பரிகாரங்கள் பாரயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். வீடும் நாடும் நலம் பெற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர பிரபஞ்ச சக்தி அளவிட முடியாத நன்மைகளை வழங்கும்.
ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனது ஸஹ வீர்யம்
கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி
இந்த சனிப்பெயர்ச்சி அனைவரின் வாழ்விலும் தித்திப்பான மாற்றமும், மகிழ்ச்சியும் ஆனந்தமும், நிறைந்த செல்வமும், நோயற்ற வாழ்வும் நிரந்தரமாக வழங்க பிரபஞ்ச தாயின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாக கிடைக்க வேண்டுகிறேன்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரகத்தின் ஓரை நடைபெறும்.
- ஓரைகளையும், அவற்றிக்கான பலன்களையும் இங்கே பார்க்கலாம்.
அறிவியல் கணக்குப்படி இரவு 12 மணி முதல் மறு நாள் இரவு 11.59 மணி வரையான நேரத்தை, ஒரு நாள் என்கிறோம். அதே நேரம் ஜோதிட கணக்குப்படி சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்துதான் நாள் தொடங்குகிறது. அதன்படி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 5.59 மணி வரை, ஒரு நாள் ஆகும். ராகு, கேது தவிர மற்ற 7 கிரகங்களும், நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் தங்களின் கதிர்களை, ராசிக்காரர்கள் மீது வீசி அதற்கேற்ப பலன்களைக் கொடுக்கின்றன. இந்த கதிர்வீச்சு நேரத்தை 'ஓரை' என்கிறோம்.
ஜோதிடக் கணக்குப்படி சூரியன், சுக்ரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற ரீதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரகத்தின் ஓரை நடைபெறும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ஓரை உரிமையானது. அந்த நாளில் அந்த ஓரையைக் கொண்டுதான் நாள் தொடங்கும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரியது. அந்த நாளில் சூரிய ஓரையுடன் தான் நாள் தொடங்கும். அதன்பிறகு சுக்ரன், புதன், சந்திரன், குரு, செவ்வாய் ஓரைகள் தொடர்ந்து வரும். அதன்பிறகு மீண்டும் சூரியன், சுக்ரன் என்று இந்த வட்டம் சுழலும். இப்படி ஒவ்வொரு நாளும், அந்தந்த கிழமைக்குரிய கிரகத்தின் ஓரையுடன்தான் நாள் தொடங்கும்.
ஓரைகளையும், அவற்றிக்கான பலன்களையும் இங்கே பார்க்கலாம்.
சூரிய ஓரை: எல்லாவற்றுக்கும் முதன்மையானது சூரியன். அந்தக் கோள் 'ராஜகிரகம்' என்று அழைக்கப்படுவதால், அரசு சார்ந்த செயல்களைச் செய்ய இந்த நேரம் ஏற்றது. வழக்கு தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வது, உயர் பொறுப்பில் உள்ளவர்களை சந்திப்பது, சொத்துக்கள் தொடர்பான முடிவு எடுப்பது என முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்த ஓரை மிகச்சிறப்பானது. அதே நேரம் சூரிய ஓரையில், புதிய முயற்சி களுக்கான ஒப்பந்தங்களை முடிவு செய்யக்கூடாது. நல்ல செயல்களை மேற்கொள்ள இந்த ஓரை சிறந்தது அல்ல. குறிப்பாக புதிய வீட்டிற்கு குடிபோகக் கூடாது.
சந்திர ஓரை: திங்கட்கிழமை, சந்திர ஓரையை தொடக்கமாக கொண்டு செயல்படும் நாள். வளர்பிறை காலத்தில் வரும் சந்திர ஓரைகள் நற்பலன்களை வழங்கும். இந்த ஓரையில் திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்குதல், கல்வி, கலைகளை கற்கத் தொடங்குதல், நெடுந்தொலைவு பயணம் புறப்படுதல், கால்நடைகள் வாங்குதல் போன்றவற்றைச் செய்யலாம். பொதுவாக இந்த ஓரையில், அனைத்து வகையான நற்காரியங்களையும் செய்யலாம். தேய்பிறை காலத்தில் வரும் ஓரையில் செய்யும் காரியங்கள் அவ்வளவு பலன்களைக் கொடுக்காது.
சுக்ர ஓரை: வெள்ளிக்கிழமையில் இந்த ஓரையில்தான் நாள் தொடங்கும். ஆண் - பெண் உறவு, அழகு, கவர்ச்சி, தூய்மை, பொருளாதாரம் ஆகியவற்றை சுக்ரன் வழிநடத்துகிறார். எனவே இந்த ஓரை நேரத்தில் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஆண்- பெண் உறவிற்கு, மருந்து சாப்பிட, கடனை மீட்டெடுக்க, புதிய ஆடை, அணிகலன் வாங்க ஏற்ற நேரம் இது. குறிப்பாக பெண்கள் தொடர்பான காரியங்களை மேற்கொள்ள சிறப்பான ஓரையாக, சுக்ர ஓரை பார்க்கப்படுகிறது. நிலத்தை உழவு செய்வதற்கும் இந்த ஓரையை தேர்வு செய்யலாம்.
சனி ஓரை: சனிக்கிழமையை முதன்மையான கொண்ட ஓரை இது. சனி பகவான், ஆயுள், தொழில், முற்பிறப்பு பலன் ஆகியவற்றின் வழிகாட்டி. தீயவற்றில் எல்லாம் தீயது, கொடிய நேரத்தைத் தரும் ஓரை இது. ஆனாலும் இந்த ஓரையில், நிலம், சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். நிலத்தை உழுதல், இரும்பு, மின்சாரப் பொருட்களை வாங்குதல், தோப்பு, கிணறு அமைத்தல் போன்ற காரியங்களை சனி ஓரையில் செய்யலாம்.
குரு ஓரை: வியாழக்கிழமையில் முதல் ஓரையாக இது தொடங்கும். அனைத்துவிதமான காரியங்களைச் செய்யவும், சிறந்ததாக இந்த குரு ஓரை திகழ்கிறது. அதே போல் தீய செயல்களை இந்த நேரத்தில் செய்தால், கொடிய கேடான பலன் வந்து சேரும். குரு ஓரை நேரத்தில் திருமணத்திற்கான தாலி செய்ய தங்கம் வாங்கலாம். சுப காரியங்களுக்கான ஆடை, அணிகலன்களை வாங்குவதும் நல்லது. தங்கம் தொடர்பான வேலைகள் மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கு இந்த ஓரை நேரம் ஏற்றதாகும்.
முதலிரவு, விதை நடுதல், நாற்று நடுதல், சேமிப்பு கணக்கு தொடங்குதல், தொழில் தொடங்க பொருள் கொள்முதல் செய்தல் போன்ற காரியங்களையும் இந்த ஓரையில் செய்யலாம்.
செவ்வாய் ஓரை: செவ்வாய்க்கிழமையில் முதல் ஓரையாக இந்த ஓரை வரும். ரத்தம், மருத்துவம், புவி, நெருப்பு மற்றும் அதிகாரம் போன்றவற்றிக்கு உரியவராக செவ்வாய் திகழ்கிறார். எனவே இந்த ஓரையில் நற்காரியங்களை செய்தல் கூடாது. எந்த ஒரு புதிய செயலையும் தொடங்க வேண்டாம். இந்த ஓரையில் போர் தொடுத்தல், போர்க்கருவிகள் செய்தல், வண்டிகளை பழுது நீக்குதல், வீடு மனை நிலம் வாங்குதல் மற்றும் விற்றல், மருந்து சாப்பிடுதல், ஏரிக்கரை மேம்படுத்துதல் மற்றும் அணை கட்டுதல் போன்ற பணிகளைச் செய்யலாம்.
புதன் ஓரை: புதன்கிழமையானது, இந்த ஓரையில்தான் தொடங்கும். புதன் என்பதற்கு அறிவன் என்றும் பொருள் உண்டு. எனவே இந்த ஓரையில் அறிவுசார்ந்த செயல்களை செய்வது சிறப்பான பலன்களைத் தரும். அறிவியல் ஆராய்ச்சி களை மேற்கொள்வது, ஜோதிடம் கணிக்கத் தொடங்குவது, தேர்வு எழுதுவதற்கான வேலைகளைச் செய்வது, போட்டிகளில் பங்கேற்பது, கடிதத் தொடர்பு மேற்கொள்வது, தொழில்நுட்பம் சார்ந்த புதிய பொருட்களை வாங்குவது, புதிய கணக்கு தொடங்குவது போன்ற செயல்களை இந்த ஓரையில் செய்யலாம். நற்செயல்களைச் செய்ய சிறந்த ஓரை இது.
- அந்த காலத்தில் ஜாதகங்கள் ஓலைச்சுவடியில் குறித்து வைக்கப்பட்டிருந்தன.
- அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் என்றாலே வயதானவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.
ஜாதகம் பார்க்க செல்பவர்கள் நல்ல நேரத்தில் ஜாதகம் பார்க்க விரும்புவதுண்டு. சிலர் ராகு காலம், எம கண்டம் போன்றவற்றை தவிர்ப்பார்கள். சிலர் மாலை 6 மணிக்கு மேல் ஜாதகம் பார்க்க விரும்புவதில்லை.
குறிப்பாக பலருக்கும் மாலை 6 மணிக்கு மேல் ஜாதகம் பார்க்கலாமா? என்ற சந்தேகம் இருக்கும். அது பற்றிய விளக்கத்தை இங்கே காண்போம்.
அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் என்றாலே வயதானவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறோம். மேலும் அக்காலத்தில் பல கிராமங்களில் மின் இணைப்புகளே கிடையாது. மின் விளக்கு இல்லாத வீடுகள் பல இருந்தன. அதோடு பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் தான் ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள். மாலை நேரத்தில் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு வீட்டில் மின் விளக்கு இல்லாமல், மண்ணெண்ணெய் விளக்கோ அல்லது நல்லெண்ணெய் விளக்குகளின் ஒளிகளைக் கொண்டுதான் ஜாதகம் கணித்துச் சொல்வார்கள்.
இருட்டில் சாதாரணமாக நாம் எந்த வேலைகளையும் செய்ய மாட்டோம் அல்லவா? மின் விளக்கு வரும் வரை நாம் காத்திருக்கின்றோம். அப்படி இருக்கும் போது, நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகத்தை, சும்மா ஏனோ தானோ என்று பார்த்து விட முடியுமா?.
மேலும் அந்த காலத்தில் ஜாதகங்கள் ஓலைச்சுவடியில் குறித்து வைக்கப்பட்டிருந்தன. அதனை வயதான ஜோதிடர்கள் விளக்கொளியில் பார்க்கும்போது, தெளிவாக கணிக்க முடியாத சூழல் உருவாக வாய்ப்புள்ளது. அதாவது நம் எதிர்காலப் பலன்கள் சொல்லும் போதோ அல்லது திருமணப் பொருத்தம் பார்க்கும் போதோ, அது தவறாக போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எப்படி என்றால் ஓலைச்சுவடியில், புள்ளி இல்லாத எழுத்துக்களைக் கொண்டுதான் ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள். (எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடியில் புள்ளிவைத்தால் அது கிழிந்து விடும்). அதனால் இரவு நேரம் என்றால் சரியாக பார்த்து படிக்க இயலாது.
உதாரணமாக ஒரு ஜாதகத்தில் சுக்ரன் என்று இருப்பதை ஜோதிடர்கள் அந்த இருள் ஒளியில் சுக்ரனை, சூரியன் என்று படித்துவிட்டு பலன்களை மாற்றி கூறி ஜாதகர்களின் எதிர்காலத்தை மாற்றி பலன் உரைக்க வேண்டி வரும். அதுவே பகல் வேளை என்றால் தெளிவாக பார்த்து பலன்களை சொல்லிவிடலாம். இதன் காரணமாகத்தான் அந்த காலத்தில் இரவு பொழுதில் ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று ஒரு விதியை வழக்கத்தில் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் தற்காலத்தில் அதுபோன்ற எந்த பிரச்சினையும் கிடையாது. ஏனெனில் இப்போது மின் வசதிகள் இருக்கிறது. மேலும் ஓலைச்சுவடிகளைப் போல் அல்லாமல், தற்போது கம்ப்யூட்டர், கைகளால் எழுதுவது என்று எதுவாக இருந்தாலும் புள்ளி வைத்து எழுகிறோம். இதனால் எழுத்துக்கள் தெளிவாகத்தெரியும். அந்த காலகட்டம்போல் இந்தக் காலத்தில் எந்த பிரச்சினைகளும் இல்லாததால் நாம் எளிதாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கூட ஜோதிடரிடம் அணுகி ஜாதகம் பார்க்க இயலும். எனவே, மாலை மற்றும் இரவு நேரங்களில் ஜாதகம் பார்க்கக் கூடாது என்ற மூட நம்பிக்கைகளை நாம் களைவது மிக முக்கியமானதாகும்.
இதே போன்று செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளின் போது ஜாதகம் பார்க்கக் கூடாது என்ற கருத்துக்களும் தவறானதாகும். திருமண சுப முகூர்த்தம், தொழில் தொடங்கும் நாள் மற்றும் நேரம், கல்வி கற்க ஆரம்பிக்கும் நாள், சாந்தி முகூர்த்தம் குறிப்பதற்காகத்தான் நாம் நல்ல நேரம் பார்க்க வேண்டுமே தவிர, இதுபோன்ற ஜாதகம் பார்ப்பதற்கெல்லாம் அது தேவையில்லை. ஆகவே இது போன்ற மூட நம்பிக்கைகளை நீக்கி விடுவது மிகவும் நல்லது.
'ஜோதிடச்சுடர்' ந.ஞானரதம்,
சென்னை.
- ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை நிர்ணயிக்கும் இடம்.
- ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை நிர்ணயிக்கும் இடம். ஐந்தாமிடம் காதலைக் குறிக்குமிடம். ஒன்பதாமிடம் மதம் மற்றும் இனத்தைப் பற்றிக் கூறுமிடம்.இந்த இடங்களும் இந்த இடத்தின் அதிபதிகளும் பலம் பெறுவதும் நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம்.
இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை ஆசை விருப்பம் காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஒருவரின் ஜாதகத்தில் 2,5,7,11-ம் பாவகங்கள் சம்பந்தம் பெற்றால் நிச்சயம் காதல் திருமணம் நடைபெறும். ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் செவ்வாய் சனி இணைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியை சுக்கிரன் செவ்வாய் சனி பார்த்தாலோ காதல் திருமணம் நடைபெறும்.
ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி, குரு பலம் குறைந்தால் கலப்பு திருமணம் நடைபெறும். ராகு கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஐந்து, ஏழு அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது இணைவது சுக்கிரனுடன் ராகு கேது இணைவது வேறு மதத்தினருடன் திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.