என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Babri Masjid demolition day"

    • மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. உள்ளிட்டவைகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.
    • மேலப்பாளையத்தில் ஆட்டோ, வேன்கள் உள்ளிட்டவை ஓடவில்லை.

    நெல்லை:

    பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி இஸ்லாமிய அமைப்பு கள் சார்பில் கருப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் இன்று கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

    அதன்படி நெல்லை மாநகர பகுதியான மேலப் பாளையத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

    மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானா, அண்ணா வீதி, அம்பை சாலை, வி.எஸ்.டி சந்திப்பு, கொக்கிர குளம் சாலை, பஜார் வீதிகள் உள்பட பிரதான சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டீக்கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சுமார் 1,500 கடைகள் வரை அடைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் முக்கிய சாலைகள், பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பால் கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஒரு சில இடங்களில் கேன்களில் டீ வைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

    மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. உள்ளிட்டவைகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. பதற்றமான இடமாக கருதப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், ரோந்து வாகனங்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அதேநேரம் மேலப்பாளையத்தில் இன்று ஆட்டோ, வேன்கள் உள்ளிட்டவை ஓடவில்லை. இருப்பினும், அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    • சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவை மாநகரில் 1300 போலீசாரும், புறநகரில் 1000 போலீசாரும் என்று மாவட்டம் முழுவதும் 2300 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    பொதுமக்கள் அதிகம் கூடும் கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    இதேபோல காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், புறநகர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுதவிர கோவை ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை போடப்பட்டு வருகிறது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    சென்னை:

    பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பஸ், ரெயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதே போன்று சென்னை முழுவதும் நேற்றிரவு வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    தனியார் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி, சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்தனர்.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மார்க்கெட்டுகள், மருத்துவமனை, முக்கிய கோவில்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • உவரி கடற்கரையில் கடலோர காவல் படையினர் மற்றும் கடலோர குழுமத்தினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை

    நெல்லை மாநகர பகுதிகளில் போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில் 1,000 போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நகரின் முக்கிய பகுதிகளில் வாகனசோதனையும் நடத்தப்படுகிறது.

    சந்திப்பு ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், டவுன், பாளை மற்றும் மேலப்பாளையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மார்க்கெட்டுகள், மருத்துவமனை, முக்கிய கோவில்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    தீவிர சோதனை

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சப் -இன்ஸ்பெக்டர் சத்தியதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரைட், சோமசேகரன் மற்றும் போலீசார் தண்டவாள பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் அனைத்து உடமைகள் மற்றும் பார்சல்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்படு கிறது.

    ரெயில்வே போலீ சாருடன் ஆயுதப்படை, மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திசையன்விளை அருகே உவரி கடற்கரையில் கடலோர காவல் படையினர் மற்றும் கடலோர குழுமத்தினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கூடுதல் பாதுகாப்பு

    இதேபோல மாவட்ட எல்லைகளில் அனைத்து வாகனங்களும் தீவிர மாக பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

    வள்ளியூர், நாங்குநேரி, திசையன்விளை, மானூர், அம்பை, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, ராதாபுரம், பணகுடி, களக்காடு, ஏர்வாடி உள்பட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கூடன்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ ஆராய்ச்சி மையம் மற்றும் முக்கிய வழிப்பாட்டு தளங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்கிளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணி மற்றும் சோதனையில் ஈடுபடுகின்றனர்.
    • அனைத்து ெரயில்களிலும் தீவிர மோப்ப நாய், மெட்டல் டிடெக்கர் மூலம் சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க மத்திய மாநில போலீசார் கடந்த ஒரு வார காலமாக பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணி மற்றும் சோதனையில் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையிலான 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ெரயில்வே போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருடன் இணைந்து ெரயில் நிலையத்திலும், அனைத்து கோவில்களில் ஆயுதம் ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதேபோல புதிய, பஸ் நிலையம், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்து பணி செய்து வருகின்றனர். 

    இன்று அதிகாலையில் மோப்ப நாயுடன் விரைந்து வந்த வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள், விழுப்புரம் ெரயில் நிலையத்துக்கு வந்த அனைத்து ெரயில்களிலும் தீவிர மோப்ப நாய், மெட்டல் டிடெக்கர் மூலம் சோதனை செய்தனர். ெரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை மெட்டல் டிடெக்டர் மூலம் ேசாதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் விழுப்புரம்ெரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    • வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பஸ் நிலையம் முழுவதும் தீவிர சோதனையும் மேற்கொண்டனர்.
    • ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    கோவை:

    ஆண்டுதோறும் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாளை நாடு முழுவதும் பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில், கோவை மாவட்டத்திலும் பாபர் மசூதி தினத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகரில் 1,200 போலீசார் புறநகரில் 800 போலீசார் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காந்திபுரம் நகர பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உக்கடம், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, அன்னூர், வால்பாறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகளையும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.

    பஸ்களிலும் ஏறி அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பஸ் நிலையம் முழுவதும் தீவிர சோதனையும் மேற்கொண்டனர். மக்கள் வைத்திருந்த பைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இதுதவிர கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதேபோல் மக்கள் அதிக நடமாட்டம் இருக்க கூடிய மார்க்கெட்டுகள், கடைவீதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார் மற்றும் மாநகர போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    ரெயில் நிலையம் மற்றும் ரெயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் ரெயில்வே தண்டவாளங்களிலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டை கண்டறியும் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.

    கோவை பீளமேடு அருகே உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாளை உக்கடம் பகுதியில் போராட்டமும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
    • மேலப்பாளையத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 3 நாட்களாகவே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாநகரில் இன்று பாதுகாப்பு வந்த போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் அதிகாலையில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்பட்டனர். மேலப்பாளையம் பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.

    நெல்லை புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், நெல்லையப்பர் கோவில், டவுன் ரதவீதிகள், முக்கிய வழிப்பாட்டு தலங்கள், மேலப்பாளையம் ரவுண்டானா என முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலப்பாளையத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக மேலப்பாளையம் சந்தை பகுதிகள், பஜார்வீதி, அண்ணா வீதி, அம்பை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் கடைகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் எஸ்.டி.பி.ஐ., தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆகியவை சார்பில் பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இன்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செயலாளர் கனி மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பாளை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முன்பு த.மு.மு.க. சார்பில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் என மொத்தம் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி தலைமையிலும், நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • ரெயில் நிலையம், பார்சல் குடோன்களில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • கோவில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    திருப்பூர்:

    டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இன்று பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடமைகள் சோதனை செய்யப்பட்டது.

     

    ரெயில் நிலையம், பார்சல் குடோன்களில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேப்போல் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் போலீசார் நேற்று இரவு முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 22 ரோந்து வாகனங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வியாழக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. #BabriMasjiddemolition
    கே.கே.நகர்:

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வியாழக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் கூடுதலாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகளை ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். நடைமேடைகளில் கண்காணிப்பு பணியை அதிகப்படுத்தி உள்ளனர். ஓடும் ரெயிலிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

    திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.  #BabriMasjiddemolition
    நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது. இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #BabriMasjid #BabriMasjidDemolitionDay
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட சிவசேனா மற்றும் விசுவ இந்து அமைப்புகள் தீவிரமாக உள்ளன. இதற்காக சமீபத்தில் அயோத்தியில் தர்மசபை கூட்டம் நடத்தப்பட்டது.

    அதில் சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனால் அயோத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் அயோத்தியில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

    இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய துணை நிலை படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    அயோத்தியில் மட்டுமின்றி பைசலாபாத் நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    அயோத்தியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அனைத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  #BabriMasjid #BabriMasjidDemolitionDay
    ×