என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood"

    இரத்த தானம் செய்வீர். உயிர் காப்பீர் என்ற வாசகம் சந்து பொந்துகள் வரை பளிச்சிடுகிறது. இதில் சிறு கவனக்குறைவு ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    இரத்தத்தை உறைய வைக்கும் இரத்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. இரத்த தானம் செய்வீர். உயிர் காப்பீர் என்ற வாசகம் சந்து பொந்துகள் வரை பளிச்சிடுகிறது. சிறு கவனகுறைவு ஏற்பட்டால் கூட அந்த இரத்தம் உயிரையும் எடுக்கும் என்பதற்கு எச்.ஐ.வி. தொற்று இரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்திய விவகாரம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது வயற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாக்க மருத்துவ உலகம் போராடுகிறது. இரத்ததானம் செய்த வாலிபரோ ஏற்கனவே 2016-லும் இரத்ததானம் செய்து இருக்கிறார். அப்போதே அவரது இரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்கி இருப்பதை கண்டறிந்து இருக்கிறார்கள். இதுபற்றி அவருக்கு ஆலோசனைகள் வழங்க ஊழியர்கள் தொடர்பு கொண்டதாகவும், அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    நோய் தொற்று இருப்பது தெரியாமல் தற்போது அவரது அண்ணிக்கு இரத்தம் கொடுக்க வந்த போதும் அவரது இரத்தத்தை எடுத்து இருக்கிறார்கள். எச்.ஐ.வி. கிருமி இருப்பது தெரியாமலே அந்த இரத்தத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செலுத்தி இருக்கிறார்கள். இரத்தத்தை ஆய்வு செய்வதில் கவனக்குறைவு ஒரு பக்கம் இருந்தாலும், எச்.ஐ.வி. தாக்கியவர் என்று ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவரிடம் இரத்தம் எடுத்தது எப்படி?

    சம்பந்தப்பட்ட வாலிபர் தனக்கு எச்.ஐ.வி. இருப்பதை அறிந்து நேரடியாக வந்து விபரத்தை சொல்லி தனது இரத்தத்தை யாருக்கும் செலுத்தி விடாதீர்கள் என்று சொல்லி இருக்காவிட்டால்...? இரத்தம் கொடுப்பதும், ஏற்றுவதும் வண்டிக்கு பெட்ரோல் போடுவதுபோல் ஒருவரது உடலில் இருந்து அப்படியே மற்றொருவர் உடலுக்கு செலுத்திவிட முடியாது.

    உயிர்காக்கும் இரத்தம் எடுப்பது, சேமிப்பது, பகுப்பாய்வு செய்வது எல்லாம் அவ்வளவு சுலபமானதா என்று கேட்டால் இல்லவே இல்லை என்று அடித்து சொல்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறையினர். அரசோ, தனியாரோ இரத்த பரிசோதனை நிலையம், இரத்த வங்கி தொடங்க அனுமதி பெறுவது கூட சாதாரண விஷயமல்ல. அதற்கு பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன.

    தகுதி பெற்ற மருத்துவர், செவிலியர், லேப் டெக்னிஷியன், நவீன ஆய்வு கருவிகள், பரிசோதனை கூடம், குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல வசதிகள் இருக்க வேண்டும். இந்த வசதிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவே முடியும். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் நேரடியாக ஆய்வு செய்து திருப்தி ஏற்பட்டால் மருந்து கட்டுப்பாட்டு கழகத்துக்கு பரிந்துரைப்பார்கள்.

    இதையடுத்து மருந்து கட்டுப்பாட்டு கழகம் சோதனையை தொடங்கும். அவர்களும் முழு திருப்தி அடைந்தால் மத்திய அரசுக்கு அனுப்புவார்கள். இதையடுத்து மத்திய அரசு துறையும் ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகே லைசென்சு வழங்கப்படும். அறையின் அளவு குறைந்தாலோ அல்லது ஏ.சி.யின் அளவு குறைந்தால்கூட அனுமதி கொடுக்க மாட்டார்கள். அந்த அளவு நுணுக்கமாகவும், கண்டிப்பாகவும் விதிமுறைகள் பின்பற்றப்படும்.

    சரி, ஆய்வகம், இரத்த வங்கி தொடங்கியாச்சு. இஷ்டம் போல் இரத்தம் எடுத்துவிட முடியுமா? அதற்கும் கட்டுப்பாடுகள் அதிகம்! இரத்தம் கொடுப்பதால் எந்த ஆபத்தும் வராது. அப்படியிருந்தும் இரத்தம் கொடுக்க பலர் முன்வருவதில்லை. எனவே இரத்த தானம் செய்ய வருபவர்களை வரவேற்று எல்லோரிடமும் 350 மி.லி. இரத்தம் எடுத்து விடுவார்கள். இரத்தம் எடுக்கும் போது இரத்தத்தின் எச்.பி. அளவு மற்றும் இரத்ததானம் செய்பவரின் உடல் எடையை மட்டும் பார்த்து எடுப்பார்கள்.

    பின்னர் அந்த இரத்தத்தின் மாதிரிகள் ஆய்வு கூடத்திற்கு கொண்டு சென்று அதில் எச்.ஐ.வி., மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய், எச்.பி.வி. ஆகிய 5 நோய் தொற்றுக்கான அறிகுறி இருக்கிறதா? என்பது பகுப்பாய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகு மருத்துவரின் ஒப்புதல் பெறவேண்டும். அதன் பிறகு தான் அந்த இரத்தபை இரத்த வங்கியில் சேமிப்பு செய்யப்படும். இப்படித்தான் ஒவ்வொரு பை இரத்தமும் தீவிர பரிசோதனைக்கு பிறகே ஸ்டோரேஜ் செய்ய வேண்டும்.



    இந்த பரிசோதனையின் போது ஏதாவது இரத்தத்தில் எச்.ஐ.வி. நோய் தொற்று இருப்பது தெரிய வந்தால் உடனே அந்த இரத்தம் அழிக்கப்படும். அதோடு அந்த இரத்தத்தை கொடுத்தவர் பற்றிய விபரம் நம்பிக்கை மையத்துக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் அந்த நபரை உடனே அணுக வேண்டும். அவரை வரவழைத்து நம்பிக்கை மையத்தினர் அவரிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்வார்கள். அது மிகவும் துல்லியமான பரிசோதனை. அந்த பரிசோதனையில் தான் எச்.ஐ.வி. இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்.

    உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு கவுன்சிலிங், விழிப்புணர்வு, கூட்டு மருந்து சிகிச்சை ஆகியவை வழங்கப்படுவதோடு அவர் நம்பிக்கை மையத்தின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சில நேரங்களில் நம்பிக்கை மையத்தின் பரிசோதனையில் எச்.ஐ.வி. இல்லை என்றும் வருவதுண்டு. பொதுவாக சேமிக்கப்படும் இரத்தத்தை விட அழிக்கப்படும் இரத்தம் அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.

    100 பேரிடம் இரத்தம் எடுத்தால் குறைந்தது 10 பேருக்காவது எச்.ஐ.வி. இருப்பதற்கான அறிகுறி தென்படுவதுண்டு. ஆனால் நம்பிக்கை மையத்தின் துல்லிய ஆய்வில் அதில் பலருக்கு இல்லாமல் கூட இருக்கும் என்கிறார்கள். இரத்தம் 36 நாட்கள் வரை மட்டுமே கெடாமல் இருக்கும். அதற்குள் வரிசைப்படி இரத்தத்தை பயன்படுத்துவார்கள்.

    இரத்த வங்கியில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதற்காக இரத்தம் தேவைப்படுவோருக்கு உடனே செலுத்திவிட முடியாது. இரத்தம் தேவைப்படுபவரின் இரத்தமும் செலுத்த வேண்டிய இரத்தமும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இரு இரத்தமும் ஒரே பிரிவு இரத்தம் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானால் மட்டுமே பயன்படுத்தப்படும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் இரத்த சோதனை மற்றும் இரத்த வங்கிகள் கண்காணிப்புக்காக நோடல் அதிகாரியாக ஒரு மருத்துவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வளவும் இருந்தும் தான் இப்படி....! எப்படி இருக்கு?

    அடையாளம் காணவேண்டும்

    ஒருவருக்கு இரத்தத்தில் எச்.ஐ.வி. இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நம்பிக்கை மையத்தினர் தொடர்பு கொண்டு அழைக்கிறார்கள். அதில் சிலர் சிகிச்சை பெறாமல் எங்காவது சென்று விடுவதுண்டு. அப்படிப்பட்டவர்களை கண்டு பிடிப்பதும், அவர்களால் எய்ட்ஸ் பரவுவதை தடுக்கவும் வழியில்லை என்பது பலரது கருத்து.

    இதை தடுக்க குருதி கொடையாளர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவது பற்றியும் பரிசீலித்து வருகிறார்கள். இந்த முறையை அமல்படுத்தினால் அவர்கள் இரத்ததானம் செய்வதையாவது தடுக்கலாம் என்கிறார்கள்.
    இரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.
    சாத்தூரைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ள நபரின் ரத்தத்தைச் செலுத்தியதால் அந்த அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான சம்பவம் தமிழகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    எச்.ஐ.வி. என்ற வைரஸ் தொற்றுநோய் அமெரிக்காவில் 1981-ம் ஆண்டிலும், இந்தியாவில் அதுவும் சென்னையில் 1986-ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்படாத ரத்தம், சுத்தம் செய்யப்படாத ஊசி, பாதுகாப்பற்ற உடலுறவு, கவனிக்கப்படாத கருவுற்ற தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தை ஆகிய நான்கு வழிகளில் எச்.ஐ.வி. தொற்று பரவும்.

    பொதுவாக ரத்தம் கொடுக்க தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து மட்டும்தான் ரத்தம் எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் எடுக்கப்படும் அனைத்து ரத்ததான பைகளை மற்றவர்களுக்கு ஏற்றுவதற்கு முன்பு கட்டாயமான பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

    பரிசோதிக்கப்பட்ட ரத்தத்தில் பாதிப்பு இல்லை என்று அச்சிடப்பட்ட சான்றிதழ் ரத்தம் சேகரிக்கப்பட்ட பையில் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பயன்படுத்துவதால் விளையக்கூடிய தொற்றை உடனடியாக தடுக்க முடியும்.

    சாத்தூர் பெண்ணுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வு ரத்த வங்கி ஊழியர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்க வேண்டும். ரத்ததானம் அளித்த அந்த இளம் நபர் சமீபத்தில் எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆட்பட்டு, ரத்தக்கூறு மாற்று கண்டுபிடிக்கக்கூடிய கால அவகாசத்திற்கு முன்னரே தனது உறவினருக்காக ரத்ததானம் அளித்திருக்கக்கூடும்.

    பாதுகாப்பற்ற உடல் உறவினால் சிறுதுளியில் வரக்கூடிய எய்ட்ஸ் தொற்றை எலிசா முறையில் கண்டுபிடிக்க மூன்று வாரம் முதல் மூன்று மாதம் வரை ஆகலாம்.

    250 மில்லி லிட்டர் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட, ரத்தத்தை பெறும் மற்றவருக்கு ஒருசில நாட்களிலேயே எச்.ஐ.வி. முதல் நிலையான குறுகிய கால ரத்தக்கூறு மாற்று நிலை ஏற்படக்கூடும். சாத்தூர் பெண்ணுக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் ஏற்றப்பட்டு உள்ளது. வீட்டுக்குச் சென்ற சில நாட்களிலேயே அவர் கடுமையான காய்ச்சலுடன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காய்ச்சல் எச்.ஐ.வி.யின் அறிகுறி. பரிசோதனையின் போது எச்.ஐ.வி. தொற்று இந்த பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவனமான உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ரத்தம்தான் பாலாக சுரக்கிறது. எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆளாகி இருக்கும் அந்தப் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.

    அந்த பெண்ணுக்கு நிச்சயமாக தொற்றுக்கு பின் தர வேண்டிய தடுப்புபடி எச்.ஐ.வி. கூட்டு மருந்து ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். பொதுவாக இது நான்கு வாரங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ஆபத்தான நிகழ்வுக்கு பின் மூன்று நாட்களுக்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே இந்த பெண்ணுக்கு மற்ற எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பிரவச காலம் வரை நீடிக்கப்பட வேண்டும்.



    இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் பிறக்க இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. தொற்று முழுவதுமாக தடுக்கப்படுவது சாத்தியமாகும். அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் பார்க்கப்பட வேண்டும். பிறந்த உடனே குழந்தைக்கு நிவரம்பின் சிரப் அளிப்பதன் மூலம் எஞ்சிய வாய்ப்பும் முற்றிலுமாக தடுக்கப்படும்.

    என்றாலும் தொடர்ந்து தாய்பாலின் மூலம் எச்.ஐ.வி. தொற்று வரும் வாய்ப்பு 10 சதவீதம் இருப்பதால், இதனைக் கருத்தில் கொண்டு தாய்க்கு வைரஸ் எண்ணிக்கை செய்யப்பட்டு ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். தாயும், குழந்தையும் தொடர்ந்து ஆறு மாதம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியதிருக்கும். எச்.ஐ.வி. நோய் தொடக்க காலத்தில் மருந்து எதுவும் இல்லாததால் கொடிய உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டது. தற்போது ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்று எச்.ஐ.வி.யையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எச்.ஐ.வி. தொற்றுக் கிருமிகள் பாதிக்கப்பட்டவர்கள் முறையான கூட்டு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்க முடியும்

    மன உளைச்சலுடன் இருக்கும் சாத்தூர் பெண்ணுக்கு நம்பிக்கை தரக்கூடிய உளவியல் ஆலோசனைகளை கூற வேண்டும். எச்.ஐ.வி. நோயை கட்டுப்படுத்த மருந்து இருக்கிறது என்று அவரை நம்பும்படி செய்ய வேண்டும்.

    இன்று கிராம மக்களும், படித்தவர்களும், அறியாமையால் ரத்த சோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றுங்கள் என்று சொல்கிறார்கள். இது தவறு. மருத்துவர்கள் ரத்த சோகையை நீக்க தேவையான சத்துணவு உணவுகளையும், மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தும்படி பரிந்துரை செய்கின்றனர். ஆனால் சிலர் ரத்தம் ஏற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு ரத்தம் ஏற்றிக்கொள்வதால் பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

    தேவையான போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை, சாலை விபத்து, அதிக உதிரப் போக்கு, அணுக்கள் குறைபாடு உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான அளவு ரத்தத்தை முன்கூட்டியே முறையாக பரிசோதனை செய்து கொடுக்கப்பட்ட ரத்தத்தையே பயன்படுத்துவார்கள்.

    பெண்கள் கருவுற்றவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் ரத்த சோதனை மறுக்காமல் முறையாக செய்துகொள்ள வேண்டும்.

    ரத்த சோதனையின் போது இரும்பு சத்து மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன. அதை அவர்கள் முறையாக சாப்பிடுகிறார்களா என்று ஊழியர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இதனால் ரத்தம் ஏற்றப்படுவது குறைவாகவே உள்ளது. இன்று பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்து மருத்துவ உதவிகளையும் மன நல ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

    சாத்தூர் பெண்ணுக்கு நேர்ந்த நிகழ்வு அனைவரின் மனதையும் நெகிழச் செய்யும் நிகழ்வு. இது மருத்துவத்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாடமாக அமைந்து, மற்றொரு இதுமாதிரியான நிகழ்வு நடக்காதிருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

    அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் தங்களுக்கு ஒரு பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். சிறந்த உயிர் காப்பு மருந்தாக திகழும் ரத்தமேற்றுதல் பக்க விளைவுகள் கொண்ட ஒரு அபாயகரமான மருந்தாகவும் நிகழக்கூடும் என்பதை மறக்கக்கூடாது. இதில் மனித தவறுகளுக்கு துளியளவும் இடமில்லை என்பதை ரத்த வங்கிகளில் பணிபுரியும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். ரத்த வங்கியில் தானம் செய்ய வரும் உன்னத கொடையாளி நுழையும் தருணத்தில் இருந்து, ரத்தப்பை வெளியே செல்லும் வரை கடைபிடிக்க வேண்டிய முறைகள் அனைவராலும், அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். பிறர் நலனுக்காக தன் நலனை பேணி காக்கும் தன்னார்வ ரத்த கொடையாளிகள் ஊக்குவித்து அதிகரிக்க வேண்டும்.

    ரத்தம் ஏற்றுவது கடைசி ஆயுதமாக அனைத்து மருத்துவர்களும் பயன்படுத்த வேண்டும். மாற்று வழிகளை முதலில் செய்ய வேண்டும். அவசியமாக தேவைப்படும் போது, முழு ரத்தம் கேட்காது அந்தந்த ரத்த கூறுகளை மட்டும் கேட்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது ஒரு மருத்துவ உதவியாளர் அருகில் இருக்க வேண்டும்.

    ரத்த வங்கி ஒழுங்கு முறைகள் எழுத்திலும், செயலிலும் நடைமுறைப்படுத்தப்படுவதே இம்மாதிரியான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவும்.

    டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன்,
    முன்னாள் துணை இயக்குனர்,
    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்.
    சிவகாசியில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். #kanimozhi #HIVBlood #PregnantWoman
    சென்னை:

    திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    சிவகாசியில் அரசு மருத்துவமனையில் பெறப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி வைரஸ் உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

    எச்ஐவி குறித்து இத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னும், சுகாதாரத் துறை ஊழியர்களின் கவனக் குறைவால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண், ஒரு மாதத்தில் குழந்தை பெற உள்ளார்.

    இந்த வைரஸ் அக்குழந்தைக்கு பரவாமல் தடுப்பதற்கும், அப்பெண்ணின் நலனை பாதுகாப்பதற்கும் அரசு உயரிய சிகிச்சை வழங்குவதோடு, உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். 

    சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்தது போதுமானதல்ல.  உடனடியாக அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.  #kanimozhi #HIVBlood  #PregnantWoman
    இரத்த சுத்திகரிப்பு செயல்முறையை தூண்ட உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அத்தகைய உணவுவகைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    சீரான ரத்த ஓட்டம் உடலியக்கத்திற்கு மிக அவசியம். சுவாசத்திற்கு அவசியமான ஆக்சிஜனை கடத்துவதற்கும், ஹார்மோன்கள், சர்க்கரை, கொழுப்புகள், செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம், தவறான உணவு பழக்கங்கள் போன்றவற்றால் உடலில் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கமுடியாதது.

    அவைகளை அப்புறப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது. அதற்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் அதனை சுத்திகரிப்பதும் முக்கியமானது. நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவை இயற்கையாகவே ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்கின்றன. எனினும் ரத்த சுத்திகரிப்பு செயல்முறையை தூண்ட உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அத்தகைய உணவுவகைகள்!

    * உடலில் உள்ள நச்சுக் களை அகற்ற உதவும் இயற்கை சுத்திகரிப் பானாக பிராக்கோலி விளங் குகிறது. இது காய்கறி வகையை சேர்ந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள நச்சுக் களை நீக்கவும் பிராக் கோலி உதவுகிறது. பிராக்கோலியை காய்கறி சாலட்டாக தயாரித்தோ, சமையலில் சேர்த்தோ சாப்பிடலாம்.

    * ஆப்பிள், பிளம்ஸ், பேரிக்காய், கொய்யாப் பழம் போன்றவை ரத்தத்தை சுத்திகரிக்கும் பழ வகைகள். இவை ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புக்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், கழிவுகளை நீக்கும் பணியையும் செய்கின்றன.

    * தக்காளி பழத்தில் இருக்கும் லைகோபின், குளுதாதயோன் போன்றவையும் உடலிலுள்ள கழிவுகள், ரசாயனங்களை நீக்கும் தன்மை கொண்டவை.

    * ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பெர்ரி இன பழங்களையும் சாப்பிட்டு வருவது நல்லது. அவை கல்லீரலின் ஆரோக்கியத்தை காக்க உதவும்.

    * கீரை வகைகள் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கு துணை நிற்பவை. கல்லீரலில் உள்ள நொதிகளை அதிகரிக்கவும், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவி புரியும்.

    * பீட்ரூட் சாறு இயற்கை யாகவே உடலில் நச்சுத் தன்மையற்ற நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கல்லீரல் வீக்க பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். ஆதலால் பீட்ரூட்டை ஜூசாகவோ, சாலட்டா கவோ, பொரியலாகவோ தயார் செய்து சாப்பிடுவது நல்லது.

    * சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவது சிறந்தது. இதில் இரும்பு சத்து அதிகமிருக்கிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, ரத்த ஓட்டத்தையும் சீராக பராமரிக்கவும், ரத்தத்தை தூய்மைப் படுத்தவும் வெல்லம் உதவுகிறது.

    * குடிநீர், இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை மேற்கொள்கிறது. சிறுநீரகம் மூலம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளி யேற்றுகிறது. இரவு முழுவதும் செப்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இவ்வாறு செய்து வருவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.

    * முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படுவதற்கு, ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக இருக்கின்றன. ரத்தத்தை சுத்திகரித்து தூய்மைப்படுத்துவதன் மூலம் தலைவலி, ஒவ்வாமை, குமட்டல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். 
    நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்து ஓடுவதாக உத்திர பிரதேசத்தில் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அம்மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியுள்ளார். #OmPrakashRajbhar
    லக்னோ:

    உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டாக்டர். சகுந்தலா மிஸ்ரா தேசிய மறுவாழ்வு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், சுகெல்டியோ பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும் அமைச்சரவை மந்திரியுமான ஓம் பிரகாஷ் ராஜ்பரும் கலந்து கொண்டனர்.

    அப்போது வாரணாசியில் சமீபத்தில் ஏற்பட்ட மேம்பால விபத்து குறித்து பேசிய ஓம் பிரகாஷ், ’நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்துள்ளது., அதை அகற்றுவது எளிதான காரியம் அல்ல’ என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ஓம் பிரகாஷ், ‘சட்ட ஒழுங்கு சார்ந்த விஷயங்களில், ஆந்திரா, கேரளாவை விட உ.பி சிறப்பாகவே திகழ்கிறது. இருப்பினும் சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் யோகி ஆதியநாத்தும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை’ என தெரிவித்தார்.

    ஓம் பிரகாஷ் ராஜ்பர் இவ்வாறு பா.ஜ.க.வை தாக்கிப் பேசுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது என ஓம் பிரகாஷ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Corruptioninblood #OmPrakashRajbhar
    ×