என் மலர்
நீங்கள் தேடியது "boat capzised"
மகாராஷ்டிரா மாநிலத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமான உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NandurbarBoatcapzise
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் மாவட்டத்தில் நர்மதை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் படகு சவாரி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், நர்மதை ஆற்றில் இன்று சென்ற படகில் சுமார் 60க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆற்றின் நடுவில் சென்றபோது படகு நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 39 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NandurbarBoatcapzise