search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bodi Leopard"

    போடி அருகே ஆடுகளை சிறுத்தை அடித்துக்கொன்றதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இதனையொட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    போடி மீனாட்சிபுரம் 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் திலகம். இவர் நேற்றிரவு தனது வீட்டு தோட்டத்தில் ஆடுகளை கட்டிவைத்திருந்தார். இன்று காலை பார்த்தபோது அந்த ஆடுகள் கொடூரமான நிலையில் உடல் சிதைந்து கிடந்தன.

    இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. எனவே சிறுத்தைதான் ஆடுகளை அடித்து கொன்றிருக்க கூடும் என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை மற்றும் போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்த சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தை நடமாட்ட பீதியால் கிராமமக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×