என் மலர்
நீங்கள் தேடியது "bomb threat"
- மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு.
- வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
- சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.
- கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
திருப்பூர்:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு போன் வந்தது.
அதில் பேசிய நபர், திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் இருந்து பேசுவதாகவும், தனக்கு அருகே இருந்து மது அருந்திய 2பேர் , திருப்பூர் படியூரில் உள்ள முருகன் கோவில், கோவை மருதமலை முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுங்கள் என்று பேசி விட்டு உடனே போனை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சென்னை போலீசார் திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனையிட்டனர்.
அப்போது போனில் தகவல்தெரிவித்த நபர் அங்கு இல்லை. மேலும் அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.இதில் போனில் பேசிய நபர் திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்த சரவணன் (வயது 47)என்பது தெரியவந்தது. இன்று காலை அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 2019ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய அவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. மேலும் உண்மையிலேயே 2பேர் கோவிலில் குண்டு வைத்து தகர்க்க போவதாக பேசியதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தாரா?, அல்லது மனநிலை பாதிப்பு காரணமாக இப்படி செயல்பட்டாரா? என்று போலீசார் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு அதில் மர்மநபர்கள் யாராவது வந்து சென்றுள்ளனரா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவில்களில் குண்டு வைக்கப்போவதாக வந்த தகவலால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 4 மாதங்களுக்கு பிறகு போலீசில் பிடிபட்டார்
- ஜூலை மாதம் 26-ந் தேதி மர்ம ஆசாமி குறுந்தகவல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டராக அம்ரித் பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி மர்ம ஆசாமி குறுந்தகவல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்திடம், கலெக்டர் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கொண்டு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிக்கினார் இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி, தஞ்சை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
உடனே அங்கு சென்ற ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி குமார் தலைமையிலான போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், டெல்லியை சேர்ந்த நிதின் சர்மா (வயது 40) என்பதும், செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் என்பதும், அதுபோன்ற திருட்டு செல்போன் மூலம் பலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்ததோடு, ஊட்டி கலெக்டருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்தது
. எனினும் அவர் தொடர்ந்து தனது பெயரை மாற்றி, மாற்றி கூறி வருகிறார். இதனால் அவருக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு சிக்கியது குறிப்பிடத்தக்கது.
- மீண்டும் டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
- கோவையில் கார் வெடிகுண்டு சம்பவம் தற்போது தான் மெல்ல மக்கள் மறக்க தொடங்கியுள்ளனர்.
குனியமுத்தூர்,
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கூறிவிட்டு போனை துண்டித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போத்தனூர் போலீசார் கட்டுப்பட்டு வரைக்கும் வந்த போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த பீர் முகமது என்கிற பச்சை மிளகாய் பீர் முகமது (வயது 44) என்பது தெரியவந்தது.
இவர் டாஸ்மாக் கடைக்கு சென்று இலவசமாக மது கேட்டு தராததால் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இவர் இதற்கு முன்பு மெரினா கடற்கரை உள்பட சில இடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது போத்தனூர், குனியமுத்தூர், உக்கடம், சென்னை உள்பட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் பீர்முகமதை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கார் வெடிகுண்டு சம்பவம் தற்போது தான் மெல்ல மக்கள் மறக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியது.
- மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் சார்டர் விமானம் சென்றுள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அந்த விமானம் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
ஜாம் நகர்:
மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் சார்டர் விமானம் சென்றுள்ளது. கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 236 பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானம் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தபோலிம் விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோவா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
மாஸ்கோவில் இருந்து 244 பயணிகளுடன் அஸூர் ஏர் விமானம் கோவா சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், கோவா ஏர் டிராபிக் கன்ட்ரோலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, குஜராத் ஜாம்நகர் விமான நிலையத்தில் இரவு 9.49 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ராஜ்கோட் மற்றும் ஜாம்நகர் ரேஞ்ச்) அசோக் குமார் யாதவ் கூறியதாவது:-
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து 236 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உள்ளூர் அதிகாரிகள், போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கப் படையுடன் இணைந்து விமானத்தை சோதனை செய்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்தும் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானம் டபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளதாக கோவா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தபோலிம் விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோவா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது.
- மர்ம நபர் மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
- கோவையில் இருந்து மதுரைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போஸ்க்கும் மற்றொரு பயணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கோவையில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அதுபற்றி உடனே மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள், மதுரை வரும் கோவை ரெயிலில் சோதனை நடத்த வெடிகுண்டு நிபுணர்களுடன் தயாரானார்கள்.
மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்த கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் அனைத்து பெட்டிகளுக்கும் சென்று அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
ஆனால் ரெயிலில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் மர்ம நபர் போனில் கூறிய தகவல் பொய் என்பது தெரியவந்தது. பொய்யான தகவலை கூறி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாரை அலைக்கழித்த மர்ம நபர் குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, அது மதுரை மேலூர் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த செல்போன் வைத்திருக்கும் நபரை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் மேலூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்த போஸ் (வயது35) என்பதும், போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தன்று கோவையில் இருந்து மதுரைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போஸ் பயணம் செய்தபோது அவருக்கும், மற்றொரு பயணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நபரை சிக்க வைப்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாகவும் போலீசில் போஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும் தகவல் உண்மை தானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவை போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
- போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை அறியும் பணியில் இறங்கினர்.
கோவை:
சென்னையில் உள்ள தலைமை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு இரவு 11 மணியளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை குண்டு வீசி தாக்க போவதாக கூறினார். கூறிய உடனேயே தனது செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவை போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு அப்படி எதுவும் இருந்ததாக தெரியவில்லை. இதனால் அது புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை அறியும் பணியில் இறங்கினர்.
கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை பெற்று அது எங்கிருந்து வந்தது என சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவில்பாளையம் பகுதியில் ரோட்டில் சென்ற போது செல்போன் சிக்னல் காண்பித்தது. அப்போது அந்த வழியாக சென்ற நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தான் டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்த ஸ்ரீதர்(வயது51). கட்டிட தொழிலாளி என்பதும், குடிபோதையில் அவரது மனைவியிடம் சண்டை போட்டு விட்டு டாஸ்மாக் கடையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
- சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் மர்ம பொருள் எதுவும் சிக்கவில்லை.
ஈரோடு:
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை ஒரு போன் வந்தது.
அதில் பேசிய மர்ம நம்பர் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் ஈரோடு பஸ் நிலையத்தில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க போவதாகவும் கூறிவிட்டு போனின் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்னை போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் உஷாரான போலீசார் உடனடியாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு சோதனையிட சென்றனர்.
மேலும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோப்பநாய் கயல் வரவழைக்கப்பட்டது.
ஈரோடு ரெயில் நிலையம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
இதேபோல் டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் போலீ சார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ரேக்காக சென்று சோதனையிட்டனர்.
ஈரோடு மணிக்கூண்டு பகுதிகளிலும் ஒவ்வொரு பகுதியாக சென்று சோதனையிட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் மர்ம பொருள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் ஈரோடு மாநகர் முழுவதும் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
இதனையடுத்து வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். போலீஸ் கட்டுப்பாட்டுக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபர் இருக்கும் பகுதியை போலீசார் ட்ராக் செய்தனர்.
இதில் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (34) என தெரிய வந்தது. அவரை பிடிக்க ஈரோடு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.
ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் சுற்றித்திரிந்த சந்தோஷ்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
இந்நிலையில் சந்தோஷ்குமார் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி தெரிந்து உள்ளார். இவரது நடவடிக்கை பிடிக்காமல் முதல் மனைவி மற்றும் 2-ம் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.
அவ்வப்போது கிடைக்கும் வேலையை பார்த்து சுற்றி வந்துள்ளார். சந்தோஷ் குமார் ஏற்கனவே 2019-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டு என 2 முறை இதேபோன்று சென்னை காவல் கட்டு ப்பாட்டு அறைக்கு போன் செய்து ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்று புரளியை கிளம்பி இருந்தார்.
அப்போது இது குறித்து அவரிடம் கேட்டபோது வீட்டில் சாப்பாடு சரியில்லை. ஜெயில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதால் இவ்வாறு போன் செய்து செய்து மிரட்டல் விடுத்ததாக கூலாக பதில் சொன்னார்.
இந்நிலையில் 3-வது முறையாக மிரட்டல் விடுத்து கைதாகி உள்ளார். இந்த முறை மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது,
சும்மா பொழுது போக்குக்காக போன் செய்து மிரட்டியதாக மீண்டும் கூலாக கூறினார். இதனைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து டவுன் போலீசார் அசோக்குமார் மீது 506 (1), கொலை மிரட்டல் விடுப்பது, 507 பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய ல்பட்டது என 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் சந்தோஷ் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
- பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
டெல்லி சாதிக் நகரில் தி இந்தியன் பள்ளி இருக்கிறது. அந்த பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார்.
- போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர் கோபத்தில் செய்த காரியத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாசில் இருந்து நேற்று (வியாழன் கிழமை) மதியம் 2 மணி அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணி, குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார்.
விமானத்தை தவறவிட்ட கோபத்தில், அந்த பயணி விமான நிலைய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்தில் ஏற்றப்பட்ட தனது லக்கேஜில் வெடிபொருட்கள் இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து விமான நிலையம் விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
எனினும், பயணி கூறியதை போன்று வெடிபொருட்கள் எதுவும் அவரது லக்கேஜில் கிடைக்கவில்லை. இதையடுத்து பயணியை போலீசார் கைது செய்தனர். பயணி கோபத்தில் விடுத்த மிரட்டல் காரணமாக விமானம் 37 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டதில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை.
- வெடிகுண்டு என நினைத்து தேங்காய் கொண்டு செல்ல சிஐஎஸ்எப் அனுமதிக்கவில்லை என பயணி பேசியிருக்கிறார்
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் நேற்று மாலை 4.55 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு ஆண் பயணி செல்போனில் பேசும்போது வெடிகுண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இது, அருகில் இருந்த பெண் பயணியின் காதில் விழ, அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். விமான ஊழியர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். பாதுகாப்பு படையினர் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போனில் பேசிய ஆண் பயணி, புகார் அளித்த பெண் பயணி இருவரும் கீழே இறக்கப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. ஆனால் செல்போனில் பேசிய பயணி கைது செய்யப்பட்டு, விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற பயணிகளுடன் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வேலை நிமித்தமாக துபாய்க்கு புறப்பட்ட பயணி தனது தாயுடன் தொலைபேசியில் பேசியபோது, அவரின் அருகில் அமர்ந்திருந்த பெண் பயணிக்கு அந்த உரையாடல் கேட்டுள்ளது. அப்போது, "வெடிகுண்டு இருக்கலாம் என்று பயந்து சிஐஎஸ்எப் வீரர்கள் தனது பையில் தேங்காயை அனுமதிக்கவில்லை, ஆனால் பையில் வைத்திருந்த பான் மசாலாவை கொண்டு செல்ல அனுமதித்தனர்" என பேசியிருக்கிறார். இதில் வெடிகுண்டு என்ற வார்த்தையை கேட்டதும் பெண் பயணி புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.