என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bronze medal"

    ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஷ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #JoshnaChinappa
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.  

    இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில், தீபிகா பல்லிகல் மலேசிய வீராங்கனை நிக்கோல் டேவிட்டிடம் தோல்வியடைந்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    இதையடுத்து மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா, மலேசியாவின் சிவசங்கரியை எதிர்கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் 1-3 என ஜோஷ்னா தோல்வியடைந்தார். எனவே அவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.



    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #JoshnaChinappa
    ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.#AsianGames2018 #DipikaPallikal
    ஜகார்த்தா

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.  

    இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில், தீபிகா பல்லிகல் மலேசிய வீராங்கனை நிக்கோல் டேவிட்டை எதிர்கொண்டார். இப்போட்டியில் தீபிகா 0-3 என தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.



    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    தீபிகாவைத் தொடர்ந்து மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா, மலேசியாவின் சுப்ரமணியம் சிவசங்கரியை எதிர்கொள்கிறார். #AsianGames2018 #DipikaPallikal
    ஆசிய விளையாட்டு போட்டியின் வுஷு போட்டியில் இந்தியாவிற்கு ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவில் மூன்று வெண்கல பதக்கம் கிடைத்தது. #AsinGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. வுஷு போட்டியில் ஆண்களுக்கான சண்டா 56 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சந்தோஷ் குமார் அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறினாலே பதக்கம் உறுதி என்பதால் ஏற்கனவே பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் சந்தோஷ் குமார் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த டிரவுங் ஜியாங் புய்-ஐ எதிர்கொண்டார். இதில் 0-2 என சந்தோஷ் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.



    பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி சீனாவின் யிங்யிங் காய்-ஐ எதிர்கொண்டார். இதில் ரோஷிபினா தேவி 0-1 எனத் தோல்வியடைந்தார். இதனால் இவரும் வெண்கல பதக்கம் வென்றார்.

    இதேபோல் ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் சூர்ய பானு பார்ட்டப் வெண்கல பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியாவிற்கு மூன்று வெண்கல பதக்கம் கிடைத்தது.
    ×