என் மலர்
நீங்கள் தேடியது "BSF jawans"
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Chhattisgarh
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் நக்சலைட்டுகள் பலர் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் பகுதியில் நவீன ரக வெடிகுண்டு மூலம் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #Chhattisgarh