என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cannabis plants"

    • 5 கிலோ சிக்கியது
    • பெண் உட்பட 2 பேர் கைது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை மலை கிராமத்தில் வேப்பங்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

    கஞ்சா செடிகள்

    அப்போது விவசாய நிலத்தில் கஞ்சா வாசனை வந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது மிளகாய் செடிகள் இருந்துள்ளன. சற்று உள்ளே சென்று பார்த்த போது கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதன்பின்னர் மிளகாய் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த 2.5 கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். அருகில் இருக்கும் மற்றொரு நிலத்தில் தேடிப்பார்த்த போது அங்கும் கஞ்சா செடிகள் இருப்பது தெரியவந்தது.

    அங்கு இருந்த 2.5 கிலோ கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 5 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் பயிரிடப்பட்ட நிலத்தின் உரிமையாளர் கமலா(வயது45), மற்றொரு நிலத்தின் உரிமையாளர் முத்துக்குமார் (21) என்ற 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.
    • தடை செய்யப்பட்ட வெடிமருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் அதிகப்படியான கஞ்சா புழக்கம் இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தொடர்ந்து புகார் வந்தவண்ணம் இருந்தது. கடந்த வாரம் ஊட்டி பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தால் கஞ்சாவை மாவட்டத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்து வலுவான கோரிக்கை எழுந்தது.

    இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையிலான சிறப்பு போலீசார்கள் கஞ்சா வேட்டையில் இறங்கினர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி கண்ணெரிமுக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமா ன்காண், முஜாஹிர், சரவ ணன், சிவமணிகண்டன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சபீர்கான் ஆகியோர்கள் மோகன் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.

    பின்பு போலீசார் அவரது வீட்டில் மேலும் கஞ்சா செடிகள் இருக்கிறதா? என்று சோதனை செய்தபோது அவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்பு அவரிடமிருந்து சுமார் 125 கிராம் கொண்ட 5 வெடிமருந்து நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், மருந்துகளை வெடிக்க வைக்கும் ஒயர்கள் போன்றவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 80 கஞ்சா செடிகளை வளர்த்த ராகுல் சௌத்ரி (46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • கஞ்சா செடிகளை லைட் மற்றும் ஏசி பொருத்தி அவர் வளர்த்து விற்று வந்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் சுமார் 80 கஞ்சா செடிகளை வளர்த்த ராகுல் சௌத்ரி (46) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ராகுலின் தந்தை நொய்டாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக 2013 இல் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். அதனால் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் ராகுலுக்கு காவல்துறையில் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவரால் அந்த போலீஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை.

    இதனையடுத்து வியாபாரத்தில் இறங்கிய ராகுலுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலைக் குறைப்பதற்காக ராகுல் கஞ்சா அடிக்க தொடங்கினார். பின்னர் தனது தேவைக்காக வீட்டில் கஞ்சா வளர்க்க தொடங்கி பின்னர் அதனையே தனது தொழிலாக அவர் மாற்றியுள்ளார்.

    நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வெப் சீரிஸ்களை பார்த்து ஆன்லைனில் கஞ்சா விதைகளை தனது வீட்டில் ராகுல் கஞ்சா வளர்க்க தொடங்கியுள்ளார். அங்கு சுமார் 80 கஞ்சா செடிகளை லைட் மற்றும் ஏசி பொருத்தி வளர்த்து விற்று வந்துள்ளார்.

    இந்நிலையில் இந்த வீட்டில் கஞ்சா வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனை செய்த போலீசார் ராகுலை கைது செய்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

    ×