search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "carnage"

    • கிராமத்தைச் சேர்ந்த பெண்களை RSF வீரர்கள் கடத்த முயன்றுள்ளனர்.
    • சுமார் 80 கிராமவாசிகளை பாராளுமன்ற படை [RSF] வீரர்கள் சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.

    உள்நாட்டுப் போர் 

    உள்நாட்டுப் போரினால் சூடான் நாடு துண்டாடப்பட்டு வருகிறது. சூடான் ராணுவத்தின் இருவேறு பிரிவுகளான SAF மற்றும் RSF [பாராளுமன்ற படை] ஆகிய படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது. 

    பசி -  பஞ்சம் - பாலியல் பலாத்காரம் 

    இந்த போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பசியால் மக்கள் மண்ணையும், இலைகளையும் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவுக்காக தினமும் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட பெண்கள் வரிசையில் நிற்கும் அவல நிலையில்தான் தற்போது சூடான் உள்ளது.

     

     

     

    பாராளுமன்றப் படுகொலை

    இந்நிலையில் மத்திய சூடானில் உள்ள சினார்[Sinnar] மாகாணத்தில் ஜால்க்னி [Jalqni] என்ற கிராமத்தில் பாராளுமன்ற படை [RSF] வீரர்கள் சுமார் 80 கிராமவாசிகளை கடந்த வியாழனன்று சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.

    முன்னதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களை RSF வீரர்கள் கடத்த முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமற்ற கிராம மக்கள் எதிர்த்து நின்ற நிலையில் அவர்களை நோக்கி RSF வீரர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    அதிகாரம்

    கடந்த புதன் கிழமை அன்று ஸ்விடர்லாந்தில் அமெரிக்காவால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சூடான் ராணுவம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சூடான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி மக்களை எந்தவித வாரண்ட்டும் இன்றி கைது செய்யலாம் என்ற அதிகாரம் ராணுவத்துக்கு வழங்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

     

    ×