என் மலர்
நீங்கள் தேடியது "chattisgarh"
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளின் அனல் பிரச்சாரத்துடன் இரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவடைந்தது. #ChattsgarhAssemblyElections #SecondPhaseCampaign
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதி மற்றும் 20-ம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 72 தொகுதிகளில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள 72 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.
கடைசி நாளான இன்று பாஜக சார்பில் பிரதமர் மோடி, முதல் மந்திரி ராமன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ் மற்றும் அஜித் ஜோகி கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பாஜக வெற்றி பெறும் என தகவல் வெளியானது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign
சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, தலித் என்பதால் சீதாராம் கேசரியால் காங்கிரஸ் தலைவராக தொடர முடியவில்லை என தெரிவித்தார். #ChattisgarhAssemblyElections #BJP #PMModi
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் சென்ற வாரம் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 72 தொகுதிகளில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் மகசமுந்த் என்ற இடத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் தலைவராக சீதாராம் கேசரி இருந்தபோது, அவரது 5 ஆண்டு பதவிக்காலத்தை அக்கட்சி நிறைவு பெற விடவில்லை. அவருக்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. சோனியா புதிய தலைவராக வேண்டும் என்பதற்காகவும், அவர் தலித் என்பதற்காகவும் சீதாராம் கேசரி பாதியிலேயே தூக்கி வீசப்பட்டார்.

கடந்த சில பத்தாண்டுகளாக டெல்லியில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடைபெற்றது. இந்த ரிமோட் ஒரு குடும்பத்தின் கைகளில் இருந்தது. அவர்களுக்கு பாஜக மீது பயம் ஏற்பட்டது. ஒரு குடும்பத்தைச் சேராத திறமை வாய்ந்த ஒருவரை கட்சி தலைவராக காங்கிரஸ் நியமிக்க முடியுமா.
காங்கிரசை சேர்ந்த ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறை ஆட்சி செய்ததை எண்ணிப் பாருங்கள். மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவர்கள் ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே சிந்தித்தனர். மக்கள் நலத்திட்டங்கள் கிடைப்பதை பற்றி சிந்திக்கவில்லை. இவர்கள் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்.
சத்தீஸ்கரின் வளர்ச்சிக்காக ராமன் சிங் ஏராளமாக உழைத்து வருகிறார். மாநிலம் வலுப்பெற வேண்டும் என்றால், அவருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். #ChattisgarhAssemblyElections #BJP #PMModi
சத்தீஸ்கரில் நாளை நடைபெறவுள்ள முதல் கட்ட தேர்தலின் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் படைவீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். #ChattisgarhAssemblyElections #FirstPhaseCampaign
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கரில் நாளை (12-ம் தேதி) மற்றும் 20-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
சத்தீஸ்கரில் நாளை முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார், டி.வி. கேமராமேன் உள்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். #ChattisgarhAssemblyElections #FirstPhaseCampaign
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்களின் அனல் பிரச்சாரத்துடன் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதி மற்றும் 20-ம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக 18 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 72 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது.

கடைசி நாளான இன்று பாஜக சார்பில் அமித் ஷா, முதல் மந்திரி ராமன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ் சார்பில் தலைவர் ராகுல் காந்தியும் பாஜகவை கடுமையாக தாக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதல்கட்டமாக 18 தொகுதிகளில் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் 187 பேர் களத்தில் உள்ளனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக வெற்றி பெறும் என தகவல் வெளியானது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும், 90 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress
சத்தீஸ்கரில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.
அந்த மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.
இந்த ஆலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. அப்போது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இரும்பு ஆலை நிர்வாகத்தினர் செயல் தலைமை அதிகாரி (CEO) எம்.ரவி என்பவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆலையின் பொது மேலாளர் பாண்டியராஜா மற்றும் துணை பொது மேலாளர் நவீன்குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்பெனியின் ஊழியர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
சத்தீஸ்கரில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.
அந்த மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.
இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றபோது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 19 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இரும்பு ஆலை நிர்வாகத்தினர் செயல் தலைமை அதிகாரி (CEO) எம்.ரவி என்பவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆலையின் பொது மேலாளர் பாண்டிய ராஜா மற்றும் துணை பொது மேலாளர் நவீன் குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர். #FuelPrice #Congress
ராய்ப்பூர்:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடந்த 10ம் தேதி பாரத் பந்த் போராட்டம் நடத்தியது.
இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர்.
ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்த சைக்கிள்களை பாதுகாவலர்கள் வாசலில் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து சட்டசபைக்குள் காங்கிரசார் கோஷமிட்டனர். இதனால் சபாநாயகர் சட்டசபையை சிறிது ஒத்திவைத்தார். #FuelPrice #Congress
பிரதமர் மோடியின் ஆட்சியை பற்றி கேள்வி எழுப்புவதற்கு ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் கிடையாது என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #RahulGandhi
ராய்ப்பூர்:
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் குருபத் கிராமத்தில் உள்ள பிரயாககிரி மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 60 ஆண்டு காலமாக காங்கிரசார் இந்தியாவை ஆட்சி செய்து வந்துள்ளனர். அப்பொழுது கிராமங்களுக்கு ஏன் மின்சார வசதி கிடைக்கவில்லை? விவசாயிகளுக்கு பயனளிக்க கூடிய கொள்முதல் விலை ஏன் கிடைக்கவில்லை?
இந்தியாவை ஆட்சி செய்த 60 ஆண்டுகளின் கணக்குகளை காட்டவேண்டும் என மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கின்றனர். நீங்கள் பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி குறித்து கணக்கு கேட்கிறீர்கள். உங்களுக்கு மோடி ஆட்சி பற்றி கேள்வி கேட்க எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. #AmitShah #RahulGandhi
சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதமடைந்ததால், ராய்ப்பூரில் விமான சேவை சிறிது பாதிக்கப்பட்டது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதால் ராய்ப்பூர் விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, ராய்ப்பூர் விமான நிலையத்தில் விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், மின்னல் தாக்கியதில் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதமடந்தது.
இதனால் விமானங்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. கட்டுப்பாட்டு கருவியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து வருகிறோம். விரைவில் விமான சேவை தொடங்கும் என தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்து மற்றும் லாரியை எரித்து சேதப்படுத்திய நக்சல்கள், தண்டவாளத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். #NaxalAttack
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதியாகும். அதனால் இங்கு நக்சல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தின் கமவாடா பகுதியில் சாலையில் சென்ற பேருந்து மற்றும் லாரியை சிறைபிடித்த நக்சல்கள் அவற்றுக்கு தீ வைத்து எரித்தனர்.
மேலும், தண்டேவாடா பகுதியில் தண்டவாளங்களை சேதப்படுத்தினர். இதனால் அந்த வழியாக சென்ற பயணிகள் ரெயில் தடம் புரண்டது.
தகவலறிந்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். நக்சல்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட் ஒருவன் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டான். #Naxalgunneddown #Chhattisgarh
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஐ.ஜி. சுந்தர் ராஜ் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது எடப்பால் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை போலீசார் சுற்றிவளைத்தனர்.
இதனால், நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Naxalgunneddown
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஐ.ஜி. சுந்தர் ராஜ் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது எடப்பால் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை போலீசார் சுற்றிவளைத்தனர்.
இதனால், நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Naxalgunneddown
சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தேங்காய் லாரிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 6500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #Chhattisgarh #CannabisCaptured
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூர். இங்கு முக்கிய சாலை வழியாக அதிக அளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அந்த வழியாக வந்த தேங்காய் லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேங்காய்களுக்குள் மறைத்து மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றபட்ட கஞ்சா சுமார் 6545 கிலோ எடை கொண்டதாகும். இதுதொடர்பாக கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உடையவர்கள் குறித்து கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #Chhattisgarh #CannabisCaptured
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூர். இங்கு முக்கிய சாலை வழியாக அதிக அளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அந்த வழியாக வந்த தேங்காய் லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேங்காய்களுக்குள் மறைத்து மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றபட்ட கஞ்சா சுமார் 6545 கிலோ எடை கொண்டதாகும். இதுதொடர்பாக கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உடையவர்கள் குறித்து கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #Chhattisgarh #CannabisCaptured