என் மலர்
நீங்கள் தேடியது "crpf"
புல்வாமா தாக்குதல் நடத்திய தற்கொலை பயங்கரவாதி ஆதில் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 3 முறை ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது. #PulwamaAttack #CRPF #AdilAhmedDar
ஸ்ரீநகர்:
புல்வாமா நகரில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலை நடத்தியவன் பெயர் ஆதில் அகமதுதார்.
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவனை மிகவும் திட்டமிட்டு ஜெய்ஷ்-இ- முகமது தலைவன் மசூத் அசார் தேர்வு செய்து இருந்தான்.
பாகிஸ்தான் உள்பட வெளிநாட்டு பயங்கரவாதிகளை தாக்குதலுக்கு பயன்படுத்தினால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசுக்கு குறிப்பாக இம்ரான் கானுக்கு நெருக்கடி வரும் என்பதால் காஷ்மீரைச் சேர்ந்த ஆதிலை தேர்வு செய்துள்ளனர். இவன் சிறு வயதிலேயே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டான்.
முதலில் இவன் ஜாகீர் மூஷா என்பவன் நடத்திய அன்சார் காஸ்வத் உல் ஹிந்த் என்ற இயக்கத்தில் இருந்தான். ஆனால் அந்த இயக்கத்துக்கு காஷ்மீர் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த இயக்கம் அல் கொய்தா இயக்கத்தின் ஒரு பிரிவாக காஷ்மீரில் இயங்கி வந்தது. ஆனால் இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி விட்டனர். 4 பேர் மட்டுமே மிஞ்சி இருந்தனர்.
இதையடுத்து அந்த இயக்கத்தில் இருந்து விலகிய ஆதில் அகமதுதார் ஜெய்ஷ்- இ-முகமது இயக்கத்தில் போய் சேர்ந்தான். மிக குறுகிய காலத்தில் இவன் மசூத் அசாரின் நம்பிக்கையை பெற்றான்.
ஜிகாத் எனும் புனித போரை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ஆதில் கூறி இருந்தான். எனவே அவனை மிகப்பெரிய தாக்குதலுக்கு மசூத் அசார் பயன்படுத்தி கொண்டான்.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இவர்கள் தனித்தனியாக காஷ்மீர் வந்து சேர்ந்தனர். பிறகு ஒருங்கிணைந்து தற்கொலை தாக்குதல் திட்டமிட்டனர். ஜனவரி மாதமே குண்டுகளை தயாரித்து காரில் பொருத்தினார்கள். பிறகு அந்த கார் மூலம் ஒத்திகை நடத்தப்பட்டது.
ஆதிலுக்கு சிறிய ரக காரை ஓட்டி சென்று தற்கொலை தாக்குதல் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அவன் 3 முறை ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது.
ஒத்திகை பார்த்தப்படி அவன் தற்கொலை தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. #PulwamaAttack #CRPF #AdilAhmedDar
புல்வாமா நகரில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலை நடத்தியவன் பெயர் ஆதில் அகமதுதார்.
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவனை மிகவும் திட்டமிட்டு ஜெய்ஷ்-இ- முகமது தலைவன் மசூத் அசார் தேர்வு செய்து இருந்தான்.
பாகிஸ்தான் உள்பட வெளிநாட்டு பயங்கரவாதிகளை தாக்குதலுக்கு பயன்படுத்தினால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசுக்கு குறிப்பாக இம்ரான் கானுக்கு நெருக்கடி வரும் என்பதால் காஷ்மீரைச் சேர்ந்த ஆதிலை தேர்வு செய்துள்ளனர். இவன் சிறு வயதிலேயே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டான்.
முதலில் இவன் ஜாகீர் மூஷா என்பவன் நடத்திய அன்சார் காஸ்வத் உல் ஹிந்த் என்ற இயக்கத்தில் இருந்தான். ஆனால் அந்த இயக்கத்துக்கு காஷ்மீர் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த இயக்கம் அல் கொய்தா இயக்கத்தின் ஒரு பிரிவாக காஷ்மீரில் இயங்கி வந்தது. ஆனால் இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி விட்டனர். 4 பேர் மட்டுமே மிஞ்சி இருந்தனர்.
இதையடுத்து அந்த இயக்கத்தில் இருந்து விலகிய ஆதில் அகமதுதார் ஜெய்ஷ்- இ-முகமது இயக்கத்தில் போய் சேர்ந்தான். மிக குறுகிய காலத்தில் இவன் மசூத் அசாரின் நம்பிக்கையை பெற்றான்.
ஜிகாத் எனும் புனித போரை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ஆதில் கூறி இருந்தான். எனவே அவனை மிகப்பெரிய தாக்குதலுக்கு மசூத் அசார் பயன்படுத்தி கொண்டான்.
கடந்த சில மாதங்களாக ஆதிலுக்கு தற்கொலை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காகவே 10 பேர் கொண்ட ஒரு தனி குழுவை மசூத் அசார் உருவாக்கி இருந்தான். அந்த குழுவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்று இருந்தனர்.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இவர்கள் தனித்தனியாக காஷ்மீர் வந்து சேர்ந்தனர். பிறகு ஒருங்கிணைந்து தற்கொலை தாக்குதல் திட்டமிட்டனர். ஜனவரி மாதமே குண்டுகளை தயாரித்து காரில் பொருத்தினார்கள். பிறகு அந்த கார் மூலம் ஒத்திகை நடத்தப்பட்டது.
ஆதிலுக்கு சிறிய ரக காரை ஓட்டி சென்று தற்கொலை தாக்குதல் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அவன் 3 முறை ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது.
ஒத்திகை பார்த்தப்படி அவன் தற்கொலை தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. #PulwamaAttack #CRPF #AdilAhmedDar
புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு, மவுன ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. #PulwamaAttack #Peoplepaytribute
ஜம்மு:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பலியான வீரர்களின் உடல்கள் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன.

இந்த தாக்குதல் சம்பவம் மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமும் நடத்தி வருகின்றனர்.
உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் லடாக் புத்த சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
வீரர்களின் யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், வீரர்களின் இறுதி யாத்திரைக்காக சென்றுள்ளனர். #PulwamaAttack #Peoplepaytribute
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பலியான வீரர்களின் உடல்கள் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன.
பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வீரர்களின் உடல்களுக்கு அந்தந்த மாநில தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் லடாக் புத்த சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
வீரர்களின் யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், வீரர்களின் இறுதி யாத்திரைக்காக சென்றுள்ளனர். #PulwamaAttack #Peoplepaytribute
பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #PulwamaAttack #CRPF #RahulGandhi
புதுடெல்லி:
காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயங்கரவா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நாடு துணை நிற்கும். பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடன் இருந்தார். #PulwamaAttack #CRPF #RahulGandhi
காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த சம்பவம் வெறுக்கத்தக்கது. இத்தகைய நடவடிக்கையால் இந்தியாவை எந்த சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது.

பயங்கரவா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நாடு துணை நிற்கும். பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடன் இருந்தார். #PulwamaAttack #CRPF #RahulGandhi
சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். #CRPFjawan #jawanshootsself #ChhattisgarhCRPFjawan
ராய்ப்பூர்:
90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது.
இரண்டாவது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (20-ந்தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை வீரர் ராஜிவ் குமார் சிங்(37) என்பவர் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தன்னிடம் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்திய ரிசர்வ் படையின் 148-வது படைப்பிரிவில் இடம்பெற்றிருந்த ராஜிவ் குமார் சிங், தலைநகர் ராய்ப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கபிர் நகர் காவல் நிலையத்துக்குள் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பலியான ராஜிவ் குமார் சிங் உத்தரப்பிரதேசம் மாநிலம், சன்டவுலி மாவட்டம், ஜமுனிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. #CRPFjawan #jawanshootsself #ChhattisgarhCRPFjawan
சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் துணை ராணுவ முகாமின் அருகே இன்று மாலை அரசு பேருந்தை வழிமறித்த நக்சலைட்கள் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை தீயிட்டு எரித்தனர். #Naxalstorchbus #bustorchedinBijapur
ராய்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம், ஜகதல்பூரில் இருந்து பசகுடா பகுதியை நோக்கிச் சென்ற பேருந்தை பிஜப்பூர் மாவட்டம், திமாபூர் அருகே இன்று மாலை 6 மணியளவில் சுமார் 25 நக்சலைட்கள் வழிமறித்தனர்.
பயணிகளை அனைவரையும் கீழே இறக்கிவிட்டு பேருந்தை தீயிட்டு எரித்தனர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் துணை ராணுவப்படை முகாம் உள்ளது குறிப்பிடத்தக்கது. #Naxalstorchbus #bustorchedinBijapur
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பயங்ரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரு வீரர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் மத்திய துணை ராணுவப் படையினர் வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இங்குள்ள ஃபத்தேக்டல் பகுதியில் ரோந்துப் படையினர் வந்தபோது மறைந்திருந்த சில பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த இரு வீரர்கள், ஒரு பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர். #Srinagargrenadeattack
சென்னை பூந்தமல்லியில் உள்ள சிஆர்பிஎப் பயிற்சி மையத்தில் அதிகாரிகள் அளித்த தண்டனையால் மன உளைச்சல் ஏற்பட்டு ராஜேஷ்குமார் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். #CRPF
சென்னை:
சென்னை பூந்தமல்லியில் சிஆர்பிஎப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பணியாற்றிய ராஜேஷ் குமார் (40) என்ற வீரர் பணி நேரத்தில் செல்போனில் பேசியதால், அதிகாரிகள் தண்டனை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சல் அடைந்த ராஜேஷ் குமார் இன்று தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில், 19 வீரர்கள் காயமடைந்துள்ளனர். #JammuAndKashmir #CRPFvehicleaccident
ஸ்ரீநகர்:
இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘இன்று அதிகாலை 21 பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்ற வாகனம், பெமினா தலைமையகம் அருகே செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுமார் 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகாமையில் உள்ள ஜெ.வி.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் ஸ்ரீநகரில் உள்ள இராணுவ முகாம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஒரு வீரர் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார். #JammuAndKashmir #CRPFvehicleaccident
இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘இன்று அதிகாலை 21 பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்ற வாகனம், பெமினா தலைமையகம் அருகே செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுமார் 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகாமையில் உள்ள ஜெ.வி.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் ஸ்ரீநகரில் உள்ள இராணுவ முகாம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஒரு வீரர் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார். #JammuAndKashmir #CRPFvehicleaccident