என் மலர்
நீங்கள் தேடியது "daily wage"
- பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும் பண்ணை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் காட்டுத்தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பண்ணை தொழிலாளர் சங்க கூட்டம் வனிதா தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காட்டுத் தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும் பண்ணை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
தினக்கூலி ரூ. 750 ஆக உயர்த்தப்பட வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக கூட்டத்தில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக வேம்பு, செயலாளராக வனிதா, பொருளாளராக கிருஷ்ணவேணி, துணைத் தலைவராக பிரபாகரன், துணைச் செயலாளராக பரிமளா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், பண்ணை தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஊரக வேலை திட்ட நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்த வேண்டும்.
- தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381 ஆக கூலியை உயரத்தி வழங்கிட வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய செயலர் இளைய பெருமாள் தலைமையில் ஊரக வேலைத்திட்டத்தை சிதைக்காமல் செயல்ப டுத்திட கோரியும், தேர்தல் வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்ட நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்த வேண்டும் எனவும். தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381 ஆக கூலியை உயரத்தி வழங்கிட வேண்டும் எனவும், காலை 7 மணிக்கு வேலைத் தளத்திற்க்கு வரச் சொல்லி கட்டபப்படுத்துவதை கைவிட வலியுறித்தியும், தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்திட கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதே போன்று தலை ஞாயிறு ஊராட்சிஒன்றிய அலுவலகம் முன்பு அலெக்சாண்டர் தலைமை யில் 80 பேர் கோரி க்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டதுடன் உடனடியாக ஒன்றிய, தமிழக அரசுகள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.






