என் மலர்
நீங்கள் தேடியது "Deep well"
- 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்டார்.
- மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இன்டி தாலுகா லச்சனா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் முஜகொண்டா (30) இவரது மனைவி பூஜா (26) இவர்களுக்கு சாத்விக் என்ற 14 மாத ஆண் குழந்தை உள்ளது.
இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் கரும்பு, எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். தற்போது மழையில்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சதீஷ் முஜகொண்டாவின் தந்தை சங்கரப்பா என்பவர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்டார்.
இதற்கிடையே நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென சாத்விக் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினர். அப்போது குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஆக்ஸிஜன் செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும் ஆழ்துளை கிணற்று க்குள் கேமிராக்களை உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இரவானதால் மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தது. கர்நாடக மாநிலம் பெல்காம், கலபுரக்கி மற்றும் ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆழ்துளை கிணற்றை ஒட்டி இணையாக ஜே.சி.பி மூலம் குழி தோண்டி குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கி வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பூபாலன், போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவன் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் கை, கால்கள் அசைவதை கேமிரா மூலம் மீட்பு குழுவினர் உறுதி செய்தனர்.
- அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
- மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென சாத்விக் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினர். அப்போது குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஆக்ஸிஜன் செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும் ஆழ்துளை கிணற்றுக்குள் கேமிராக்களை உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதைதொடர்ந்து நள்ளிரவில் மீட்பு குழுவினர் தோண்டிய பள்ளத்தில் நடு நடுவில் பாறைகள் வந்ததால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டது.
இதனையடுத்து இன்று காலை முதல் மீட்புப்பணியை தீவிரப்படுத்திய மீட்பு குழுவினர் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் தொடர்ந்து பணியாற்றி குழந்தையை உயிருடன் மீட்ட குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
#WATCH | Karnataka: A 1.5-year-old child was recused alive after he fell into an open borewell in the Lachyan village of Indi taluk of the Vijayapura district; visuals of the rescue carried out by NDRF and SDRF teams.
— ANI (@ANI) April 4, 2024
(Source: SDRF) pic.twitter.com/MtVRNPUz1u
- ஆழ்துளை கிணறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைப்பதில் ரூ.968 கோடி முறைகேடு நடந்ததாக புகார்.
- மாநகராட்சி தலைமை என்ஜினீயர் பிரகலாத் ராவ் மற்றும் உதவி என்ஜினீயர்களின் அலுவலகத்திலும் அவர்கள் சோதனை நடத்தினர்.
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2016-2018-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் ஒப்பந்தம் அடிப்படையில் அமைக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த சித்தராமையா காலக்கட்டத்தில் பெங்களூரு நகரில் 9,558 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் 2016-2018-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைப்பதில் ரூ.968 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது ஒரே நபருக்கு ஆழ்துளை கிணறு அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து 2019-ம் ஆண்டு பா.ஜனதா பிரமுகர் என்.ஆர்.ரமேஷ் என்பவர் ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்தார். அதில் அப்போதைய மேயர், 5 என்ஜினீயர்கள், 5 உதவி என்ஜினீயர்கள் உள்பட 40 பேரின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
பின்னர், இந்த வழக்கு லோக் ஆயுக்தாவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரித்து வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அமலாக்கத்துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் மாநகராட்சி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பின் துணை தலைவராக இருந்த அம்பிகாவதி என்பவரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். அப்போது 40 கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியது.
இதுகுறித்து விசாரித்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூரு ஹட்சன் சர்க்கிள் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தலைமை என்ஜினீயர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் மாநகராட்சி தலைமை என்ஜினீயர் பிரகலாத் ராவ் மற்றும் உதவி என்ஜினீயர்களின் அலுவலகத்திலும் அவர்கள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை இரவு 10 மணி வரை 11 மணி நேரம் நடந்தது. இதில் ஆழ்துளை கிணறுகள், கான்கிரீட் சாலை அமைப்பது தொடர்பாக நடந்த முறைகேடு குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களை தலைமை என்ஜினீயர், உதவி என்ஜினீயர்களிடம் காட்டி, தீவிர விசாரணை நடத்தினர். அதற்கு என்ஜினீயர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அதை விசாரணைக்காக எடுத்து சென்றனர். மேலும் இது குறித்த விசாரணைக்கு என்ஜினீயர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.