என் மலர்
நீங்கள் தேடியது "deficit"
- ரஷியாவிற்கு, போரினால் ஏற்படும் செலவினங்களின் அதிகரித்திருக்கிறது
- ராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் உற்பத்தி ரஷியாவில் அதிகரித்திருக்கிறது
கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.
இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவத்தின் துணையோடு உக்ரைன் போரிட்டு வருகிறது.
ரஷிய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போரினால் ஏற்படும் செலவினங்களின் அதிகரிப்பால் ரஷியாவின் 2023-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உள்ள ராணுவ செலவினங்களுக்கான தொகை இரு மடங்காகியுள்ளது. 2023-க்கான ராணுவ செலவுக்கு ரஷியா சுமார் ரூ.45 ஆயிரம் கோடி ($54 பில்லியன்) திட்டமிட்டிருந்தது. ஆனால் முதல் அரையாண்டிலேயே இதைவிட 12 சதவீதம் அதிகம் செலவிட்டிருக்கிறது.
போரை தீவிரமாக ரஷியா நடத்தி வந்தால், அதனால் ஏற்படும் அதிகமான ராணுவ செலவின் காரணமாக பட்ஜெட் தொகையில் விழும் துண்டு இன்னும் அதிகமாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
போரின் காரணமாக ராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் தொடர்புடைய உற்பத்திகள் ரஷியாவில் அதிகரித்திருக்கும் வேளையில் ஏற்றுமதி வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்லாமல் பிற தொழில்களும் போரினால் மிகவும் நலிந்து வருகிறது.
உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் போர் விரைவில் முடிவுக்கு வருவது அனைத்து நாடுகளுக்கும் நல்லது என பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்த நிலை ஒருவாரம் நீடிக்கும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வானம் மேக கூட்டமாக இருக்கும். சில நேரங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரம் பெய்த மழை அளவு வருமாறு:-
செஞ்சி 4 செ.மீ., மதுரை விமானநிலையம், பூண்டி தலா 3 செ.மீ., புதுச்சேரி, பெருங்களூர் தலா 2 செ.மீ., திருத்தணி, சிவகங்கை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
நடப்பு ஆண்டின் தென்மேற்கு பருவமழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை வெளியிட்டது. அதில், தென்னிந்தியாவில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில், மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்னிந்தியாவில், மொத்தம் 125 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில், 54 மாவட்டங்களில் பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது. அதாவது, 40 சதவீத மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாகவே பெய்துள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 32 மாவட்டங்களில், 20 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. ஒரு மாவட்டத்தில், மிகஅதிக பற்றாக்குறையாக பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் நிலைகுலைந்துள்ள கேரளாவில், 10 மாவட்டங்களில் அதிக மழையும், 2 மாவட்டங்களில் மிகஅதிக மழையும் பெய்துள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 4 மாவட்டங்களிலும் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.
கர்நாடகாவில், மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களிலும், இதர பகுதியில் உள்ள 2 மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.
தெலுங்கானாவில், மொத்தம் உள்ள 31 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாக பருவமழை பெய்துள்ளது. லட்சத்தீவிலும், பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.
நாடுதழுவிய அளவில், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், மழைப்பொழிவு 27 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. நாட்டில் உள்ள 91 பெரிய அணைகளின் மொத்த கொள்ளளவில் 63 சதவீத நீர்மட்டம் உள்ளது. தென்னிந்தியாவில், 31 அணைகளில் 76 சதவீத நீர்மட்டம் உள்ளது.
இவ்வாறு இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது. #MID #Tamilnadu