என் மலர்
நீங்கள் தேடியது "dry skin"
- குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான்.
- ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.
குளிர் காலத்தில் அதிகாலை பொழுதில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையும், குளிர்ந்த நீரும் உடலையும், உள்ளத்தையும் உறைய வைத்துவிடும். அதனால் சிலர் குளிப்பதற்கு தயங்குவார்கள். தினமும் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை மாற்றி ஓரிரு நாட்கள் குளியலுக்கு ஓய்வு கொடுத்துவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி குளிர் காலத்தில் குளியலை தவிர்ப்பது நல்லதல்ல. குளிர் காலத்திலும் ஏன் தவறாமல் குளிக்க வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

உடல் சுகாதாரம்
தனிப்பட்ட முறையில் உடல் சுகாதாரத்தை பேணுவதற்கு தவறாமல் குளிப்பது முக்கியமானது. கோடை காலத்தை ஒப்பிடும்போது குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காமல் இருக்கலாம். ஆனாலும் உடல் தொடர்ச்சியாக எண்ணெய்யை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். இறந்த சரும செல்களை உடலில் இருந்து அப்புறப்படுத்தும் செயல்முறையும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
வழக்கமாக குளிக்கும் செயல்முறையை தொடர்வது இந்த அசுத்தங்களை நீக்க உதவும். உடல் துர்நாற்றம், சருமத் தொற்றுகள் உள்ளிட்ட சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவும். பொதுவாக குளிர் காலத்தில் சருமம் வறட்சி அடையும், சரும எரிச்சலும் ஏற்படும். குளியல் மூலம் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த துணைபுரியும்.
நோய் எதிர்ப்பு சக்தி
குளிர் காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். அந்த நீரில் கலந்திருக்கும் மிதமான வெப்பம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். அது உடல் முழுவதும் நோய் எதிர்ப்பு செல்களை துரிதமாக கொண்டு செல்ல உதவிடும்.
சளி, காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களை உடல் திறம்பட எதிர்த்து போராடவும் உதவிடும். அத்துடன் சுடு நீர் குளியல் மூக்கடைப்பை தடுக்கவும், நாசி துவாரங்களை திறக்கவும் வழிவகை செய்யும்.

மன ஆரோக்கியம்
குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான். குறைவான சூரிய வெளிச்சம் மற்றும் பருவ கால நோய்த்தொற்றுகள் காரணமாக குளிர் காலம் மன ஆரோக்கியத்துக்கு சவாலாக இருக்கும். இதனை எதிர்த்து போராட சூடான குளியல் பயனுள்ளதாக அமையும்.
இந்த குளியல் உடலை தளர்வடையச் செய்து உடல் ஓய்வுக்கு வித்திடும். மன அழுத்தத்தை குறைத்து நல்ல உணர்வுகளை கொண்ட ஹார்மோன்களான எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டி மன நிலையை மேம்படுத்தும்.

சரும ஆரோக்கியம்
குளிர் காலத்தில் நிலவும் குளிர்ச்சியான காலநிலை மற்றும் உட்புற வெப்பம் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை அகற்றி சரும வறட்சி மற்றும் சரும எரிச்சலுக்கு வழிவகுக்கும். அந்த சமயத்தில் குளிக்கும் வழக்கத்தை தொடர்வது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது, குளியல் எண்ணெய்களை உபயோகிப்பது போன்றவை சருமத்திற்கு நன்மை பயக்கும்.
சருமத்தை மென்மையாக்கவும் உதவும். லோஷன்கள் மற்றும் கிரீம்களை பயன்படுத்துவதும் குளிர்கால சரும வறட்சியை எதிர்த்து போராட உதவிடும்.
தூக்கம்
வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவது தசைகளை தளர்த்தவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும். ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கும் வித்திடும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தூக்கம் அவசியம்.
குறிப்பாக குளிர்ந்த கால நிலை மற்றும் அழுத்தங்களில் இருந்து உடல் மீள்வதற்கு தூக்கம் அவசியமானது. அதற்கு குளியல் போடுவது முக்கியமானது.
- வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
- தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
சர்க்கரை நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு தோல் சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தோல் வறட்சி குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
பெரும்பாலும் பெரிபெரல் வாஸ்குலர் நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த நாளங்களில் உண்டாகும் மாற்றங்கள், குருதியோட்டத்தை குறைத்து, வறட்சியை உண்டாக்கி, சரும கொலோஜெனை சேதமடைய செய்து தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கிறது.

மேலும் ஆட்டோனாமிக் (தன்னியக்க) நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை சுரப்பது தடைப்பட்டு தோல் வறட்சியை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு வறண்ட சருமம் ஏற்பட முக்கிய காரணங்கள்:
கட்டுப்பாடற்ற அதிக ரத்த சர்க்கரை அளவு, குளிர்காலங்களில் காணப்படும் குளிர்ந்த வறண்ட காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம், புகை, மதுப்பழக்கம், மன அழுத்தம், ஹைப்போ தைராய்டிசம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை. சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்:
சருமத்தை தினமும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். செராமைடுகளைக் கொண்ட வாசனை இல்லாத கிரீம் அல்லது களிம்பை பயன்படுத்த வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

குளிக்கும்போது ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தவும். டியோடரண்ட் சோப்புகள் மற்றும் வலுவான பாடி வாஷ்களை தவிர்ப்பது நல்லது. குளித்த பின்னர் தோல் ஈரமாக இருக்கும் போதே மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால் அது நன்றாக உறிஞ்சப்பட்டு சருமம் நீரேற்றமாக இருக்க உதவுகிறது.
முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கழுவினால் போதும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, முலாம்பழம் போன்ற நீர்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்வது நல்லது.
- வறண்ட சருமம், ஜெரோசிஸ் அல்லது ஜெரோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது.
- உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
வறண்ட சருமம் என்பது தோல் வறட்சியாக கரடுமுரடாக, செதில்களாக உலர்ந்து காணப்படும் நிலையாகும். இந்த உலர்ந்த திட்டுகள் உருவாகும் இடம் நபருக்கு நபர் மாறுபடும். இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலையாகும். வறண்ட சருமம், ஜெரோசிஸ் அல்லது ஜெரோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு வாழ்வியல் மருத்துவ காரணங்கள் உள்ளது.

தோல் பராமரிப்பு:
மனித உடல் செல்களின் அழிவை ஏற்படுத்தும் பொருட்களை செல்களில் இருந்து அகற்றி செல்களின் அழிவை தடுப்பவை ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும். வைட்டமின்களில் ஏ, சி, ஈ மற்றும் தாதுக்களில் செலினியம், துத்தநாகம், அமினோ அமிலங்களில் குளுட்டத்தயோன், எல் அர்ஜினின் போன்றவை மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஆகும். இவை உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் இளமையுடனும் நோய் அணுகாமல், தோல் வசீகரத்துடனும் திகழலாம்.
பாதாம், பிஸ்தா, வால்நட், அனைத்து வகை கைக்குத்தல் அரிசி, காளான்கள், கடல் சிப்பி, பூண்டு, பருப்பு, வாழைப் பழங்கள் போன்றவற்றில் செலினியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.

பூசணி விதை, காளான், கடல் சிப்பி, இறால், கோழி இறைச்சி, சாக்லெட், பருப்பு வகைகள், கொண்டைக் கடலை, பீன்ஸ், முந்திரிப் பருப்பு போன்ற உணவு வகைகளில் துத்தநாகம் சத்து நிறைந்துள்ளது.
கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பசலைக் கீரை, பால் ஏடு, முலாம் பழம், முட்டை, மத்திச்சாளை மீன்கள், பப்பாளி, பிரக்கோலி, மாம்பழம், பச்சைப் பட்டாணி, முருங்கைக் கீரை, ஆரஞ்சு போன்ற உணவு வகைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
தோலை பராமரிப்பதற்கு சத்தான உணவுகள் மட்டும் அல்லாது, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். மன உளைச்சல், மன அழுத்தம் கூடாது. தினமும் ஆறு முதல் ஏழு மணிநேரம் தூக்கம் அவசியம். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

1) தோல் வறட்சி நீங்கி பளபளப்புடன், வாசனையுடன் திகழ நலுங்குமா பயன்படுத்த வேண்டும். நலுங்குமா தயாரிக்கும் முறை: பாசிப்பயறு, வெட்டி வேர், சந்தனத் தூள், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சு வேர், கிச்சிலிக் கிழங்கு ஆகிய இந்த ஏழு பொருட்களையும் சம அளவில் எடுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை சோப்பிற்கு பதிலாக தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி, சொறி, சிரங்கு நீங்கி, தோல் பளபளப்புடன் வாசனையுடன் இருக்கும்.
2) தோல் சொரசொரப்புடன் காணப்பட்டால், அருகம்புல் சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, அதை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு தோலில் தேய்த்து பின்பு குளித்து வந்தால் தோல் வறட்சிகள் நீங்கிவிடும்.
3) ஆவாரம் பூ தோல் வறட்சி, வியர்வை நாற்றத்தை நீக்குகிறது. ஆவாரம் பூ பொடி காலை, இரவு 500 மி.கி. வீதம் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளக்கும். இதை நலுங்குமா பொடியிலும் சேர்த்து குளியல் பொடியாக பயன்படுத்தலாம்.
4) பி.எச் 5.5 அளவுள்ள குளியல் சோப்புகளை பயன்படுத்தினால் தோல் வறட்சி, சொர சொரப்பு இருக்காது.
5) தேங்காய்ப் பால் சிறிதளவு எடுத்து அதனுடன் குங்குமப் பூ சேர்த்துக் காய்ச்சி, உடலில் தேய்த்து மாலை வெயிலில் சிறிது நேரம் காய்ந்து, பிறகு குளித்து வந்தால் உடல் மேன்மை அடையும். தோல் பளபளப்பாகும். தோல் நல்ல வனப்புடன் இருக்க தேங்காய்ப் பாலில் காய்ச்சிய விர்ஜின் தேங்காய் எண்ணெய்யை உடலில் தடவி ஒரு மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும்.
முகம் மிகவும் வறண்டு இருந்தால் கீறல்கள், சொரசொரப்புகள் ஏற்படும். இதனால் முக அழகே கெட்டு விடும். முகத்தை கீறல்கள் இல்லாமல் வைத்து கொள்ள இந்த குறிப்பு போதும். மேலும், இது முகத்தின் வறட்சியை முழுமையாக போக்கி விடும்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு
தயிர் 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில், தயிரை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து அவற்றுடன் உருளைக்கிழங்கை சாறாக்கி கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஃபேசியல் முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக வறட்சி நீங்கி விடும்.
பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள். ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்சு.
* தக்காளி சாறு, தேன், முல்தானி மட்டி போன்றவைகளை சேர்த்து கிரீம் போல் அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். வறண்ட சருமம் இதன் மூலம் பொலிவு பெறும்.
* வாழைப்பழம், பப்பாளிப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவைகளை சேர்த்து அதில் அரை தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடர் சேர்த்து கிரீம் போல ஆக்கி முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள்.
* ஓட்ஸ், பார்லி, சோயா மில்க் போன்றவைகளை சேர்த்து பேக் போடலாம்.
* கேரட் சாறில் முல்தானி மட்டி பவுடர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.
* பாலாடை, ஆப்பிள் இரண்டையும் சேர்த்து சருமத்தில் பூசுவதும் வறண்ட சருமத்துக்கு பொலிவை ஏற்படுத்தும்.
* பப்பாளி, ஆப்பிள் பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால், அதிகம் தண்ணீர் குடிப்பதும் சருமத்திற்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக வறண்ட சருமத்தினருக்கு ஆரோக்கியம் தரும்.
உங்கள் சருமத்துக்கு ஏற்ற திரவத்தன்மையுடன் கூடிய லோஷன்களை ஹேண்ட்பேக்கில் வைத்திருங்கள். இதனை 2 மணி நேரத்துக்கு ஒருமுறையோ, அல்லது சருமம் உலர்வாகத் தோன்றும் சமயத்திலோ எடுத்து அப்ளை செய்யுங்கள். ஏசி பயன்பாட்டில் அதிக நேரம் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 6 முறையாவது முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
வாட்டர் ஸ்ப்ரே பாட்டிலில், ரோஸ் வாட்டரை நிரப்பி, உங்கள் டேபிளில் வைத்துக்கொள்ளுங்கள். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தில் ஸ்ப்ரே செய்துகொண்டால், முகத்தின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். அல்லது ஆல்ஹாகல் சேர்க்காத ஈரத்தன்மையுடன் கூடிய வைப்ஸ் மூலம் அவ்வப்போது முகத்தில் லேசாகத் துடைத்துக்கொண்டால், புத்துணர்வுடன் வைத்திருக்க முடியும்.

குளிக்கும்போது சில சொட்டு தேங்காய் எண்ணெய்யை நீரில் சேர்த்து குளிக்கலாம். இது, சருமத்தில் எண்ணெய்ப் பசை இருக்க உதவும். அதேபோல, குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி, மிதமான வெந்நீரில் குளித்துவந்தால், வறண்ட சருமம் சரியாகிவிடும்.
வாழைப்பழக் கூழுடன் பட்டர் ஃப்ரூட் கலந்து, சருமத்தில் பூசி, ஊறவைத்துக் கழுவுவதன் மூலம் சருமம் மிருதுவாகும்.
நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது, இந்த எண்ணெய்யை உடலில் தடவிக்கொள்ளுங்கள்.