என் மலர்
நீங்கள் தேடியது "earth"
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் பூமியில் விழுந்த 10 கிலோ எடை கொண்ட விண்கல், வீட்டின் கதவு அசையாமல் இருக்க முட்டுக் கொடுக்க வைக்கப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. #space #NASA #Meteorite
நியூயார்க்:
அமெரிக்காவின் மிக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனாசிர்பெஸ். இவரை மிச்சிகனை சேர்ந்த நபர் ஒருவர் சந்தித்தார். அவர் தன்னிடம் 30 ஆண்டுகளாக இருக்கும் ஒரு கல்லை கொடுத்து அதன் தன்மை குறித்து ஆராயும் படி கூறினார்.
சுமார் 10 கிலோ எடையுள்ள அந்த கல்லை மோனா சிர்பெஸ் ஆய்வு மேற்கொண்டார். அதில் அந்த நபர் கொடுத்தது வினோதமான விண்கல் என தெரியவந்தது.
1930-ம் ஆண்டுகளில் அதாவது சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு மிச்சிகனில் உள்ள எட்மோர் என்ற இடத்தில் விளைநிலத்தில் விழுந்தது. அதன் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்(ரூ.75 லட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான விண்கற்களில் 90 சதவீத முதல் 95 சதவீதம் வரை இரும்பு இருக்கும். ஆனால் இதில் 88 சதவீதம் இரும்பும், 12 சதவீதம் நிக்கலும் இருப்பது சிறப்பு அம்சமாகும்.
இந்த வினோதமான விண்கல்லை அந்த நபர் தனது வீட்டின் கதவு அசையாமல் இருக்க கடந்த 30 ஆண்டுகளாக முட்டுக் கொடுக்க பயன்படுத்தி வந்தார்.
தற்போது விண்கல் என்று தெரிந்த நிலையில் அதை விற்க பெயர் வெளியிடப்படாத உரிமையாளர் விரும்புகிறார். விண்கல் விற்பனை தொகையில் 10 சதவீதத்தை மிக்சிகன் மத்திய பல்கலைக் கழகத்துக்கு வழங்க இருப்பதாக தெரிவித்தார். #space #NASA #Meteorite
அமெரிக்காவின் மிக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனாசிர்பெஸ். இவரை மிச்சிகனை சேர்ந்த நபர் ஒருவர் சந்தித்தார். அவர் தன்னிடம் 30 ஆண்டுகளாக இருக்கும் ஒரு கல்லை கொடுத்து அதன் தன்மை குறித்து ஆராயும் படி கூறினார்.
சுமார் 10 கிலோ எடையுள்ள அந்த கல்லை மோனா சிர்பெஸ் ஆய்வு மேற்கொண்டார். அதில் அந்த நபர் கொடுத்தது வினோதமான விண்கல் என தெரியவந்தது.
1930-ம் ஆண்டுகளில் அதாவது சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு மிச்சிகனில் உள்ள எட்மோர் என்ற இடத்தில் விளைநிலத்தில் விழுந்தது. அதன் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்(ரூ.75 லட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
தனது ஆய்வு முடிவை உறுதி செய்ய மோனா அந்த கல்லை வாஷிங்டனில் உள்ள ஸ்மித் சோனியன் இன்ஸ்டிட்யூட் என்ற புகழ் பெற்ற அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைத்தார். அது விண்கல் என அந்த மையம் உறுதி செய்தது. மேலும் அதை விலை கொடுத்து வாங்கவும் முன்வந்துள்ளது.

பெரும்பாலான விண்கற்களில் 90 சதவீத முதல் 95 சதவீதம் வரை இரும்பு இருக்கும். ஆனால் இதில் 88 சதவீதம் இரும்பும், 12 சதவீதம் நிக்கலும் இருப்பது சிறப்பு அம்சமாகும்.
இந்த வினோதமான விண்கல்லை அந்த நபர் தனது வீட்டின் கதவு அசையாமல் இருக்க கடந்த 30 ஆண்டுகளாக முட்டுக் கொடுக்க பயன்படுத்தி வந்தார்.
தற்போது விண்கல் என்று தெரிந்த நிலையில் அதை விற்க பெயர் வெளியிடப்படாத உரிமையாளர் விரும்புகிறார். விண்கல் விற்பனை தொகையில் 10 சதவீதத்தை மிக்சிகன் மத்திய பல்கலைக் கழகத்துக்கு வழங்க இருப்பதாக தெரிவித்தார். #space #NASA #Meteorite
செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமியை நெருங்குவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. #NASA
லாஸ்ஏஞ்சல்ஸ்:
பூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகம் முதலில் இருக்கிறது. 26 மாதங்களுக்கு ஒருமுறை பூமி நீள்வட்ட பாதையில் செவ்வாயை கடந்து செல்லும்.
அதன்படி இந்த மாதம் 27-ந்தேதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான தூரம் குறைகிறது. இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 லட்சம் கி.மீ. தொலைவில் வருகின்றன. இத்தகவலை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் புழுதி புயல் தாக்கியது. இருந்தாலும் டெலஸ்கோப்பில் செவ்வாய் கிரகம் மிக பிரகாசமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் இன்று பூமியை நெருங்கும் காட்சியை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் கிரிப்த் வானிலை ஆய்வு மையம் ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்புகிறது. இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு 5 கோடியே 57 லட்சம் கி.மீ. தூரத்தில் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வந்தது. #NASA
பூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகம் முதலில் இருக்கிறது. 26 மாதங்களுக்கு ஒருமுறை பூமி நீள்வட்ட பாதையில் செவ்வாயை கடந்து செல்லும்.
அதன்படி இந்த மாதம் 27-ந்தேதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான தூரம் குறைகிறது. இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 லட்சம் கி.மீ. தொலைவில் வருகின்றன. இத்தகவலை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது.
பொதுவாக செவ்வாய் கிரகம் 38 கோடி கி.மீ. தூரத்தில் சுழலும் இன்று பூமிக்கு 5 கோடியே 76 லட்சம் கி.மீட்டர் நெருக்கத்தில் வருகிறது. எனவே, செவ்வாய் கிரகத்தை டெலஸ்கோப் மூலம் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் புழுதி புயல் தாக்கியது. இருந்தாலும் டெலஸ்கோப்பில் செவ்வாய் கிரகம் மிக பிரகாசமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் இன்று பூமியை நெருங்கும் காட்சியை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் கிரிப்த் வானிலை ஆய்வு மையம் ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்புகிறது. இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு 5 கோடியே 57 லட்சம் கி.மீ. தூரத்தில் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வந்தது. #NASA
பல ஆண்டுகளுக்கு பின்னர் பூமியை செவ்வாய் கிரகம் மிக அருகாமையில் நெருங்கி வருவதால் இம்மாதம் 30,31 தேதிகளில் நீலவானம் செந்நிறமாக மாறப்போகும் எழில் கோலத்தை கண்டு ரசிக்கலாம்.
ஐதராபாத்:
சந்திரனுக்கு அடுத்தபடியாக விண்வெளித்துறை ஆய்வில் உலக நாடுகளின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ள கிரகமாக செவ்வாய் விளங்குகிறது. இந்தியாவும் தனது பங்குக்கு ‘மங்கல்யான்’ செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 30,31 தேதிகளில் பூமியை செவ்வாய் கிரகம் மிக அருகாமையில் நெருங்கி வருவதால் அப்போது நீலவானம் செந்நிறமாக மாறப்போகும் எழில் கோலத்தை கண்டு ரசிக்கலாம் என ஐதராபாத்தில் உள்ள பிர்லா அறிவியல் மைய இயக்குனர் டாக்டர் பி.ஜி. சித்தார்த் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகள் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் சுமார் 20 கிலோ அகலம் கொண்ட குளிர் ஏரியை கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பலகோடி ஆண்டுகளாக உறைநிலை படலமாக இருந்த செவ்வாயில் இந்த ஆய்வின் மூலம் உயிரினங்கள் உருவாகும் சாத்தியக்கூறுகள் உண்டா? என்பது சந்தேகம்தான். எனினும், செவ்வாயின் சுற்றுப்பகுதியில் நடத்திய நுண்ணுயிரியல் ஆய்வுகள் அதை உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், அறிவியல்சார்ந்த நம்பிக்கைகளுக்கு மாறாக இந்த பிரபஞ்சத்தின் முதல் வாழ்க்கைகான அஸ்திவாரம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றி இருக்க வேண்டும். எனவே, நமது அடுத்தகட்ட விண்வெளி முகாம்களுக்கும், குடியிருப்புகளுக்கும் செவ்வாய்தான் சிறந்த இடமாக இருக்க முடியும். இதற்கு அங்கு காணப்படும் திரவ நீரும் நமக்கு மிக சிறந்த சாதகமான அம்சமாக அமைந்துள்ளது எனவும் டாக்டர் சித்தார்த் சுட்டிக்காட்டியுள்ளார். #Marscomes #closesttotheearth
செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும். இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். #Mars #Earth
சான்பிரான்சிஸ்கோ:
சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன.
அவ்வாறு சுற்றி வரும் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும்.
ஏனெனில் சூரிய கதிர்களால் பிரதிபலிக்கப்பட்டு அது பிரகாசிக்கும். இந்த தகவலை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வந்தது.
தற்போது நிகழும் இந்த சம்பவம் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். #Mars #Earth
சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன.
அவ்வாறு சுற்றி வரும் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும்.
ஏனெனில் சூரிய கதிர்களால் பிரதிபலிக்கப்பட்டு அது பிரகாசிக்கும். இந்த தகவலை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வந்தது.
தற்போது நிகழும் இந்த சம்பவம் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். #Mars #Earth
எதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக மாற வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார். #25hours #futureEarth
நியூயார்க்:
அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில்,
140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44 ஆயிரம் கிமீட்டர் தூரம் விலகி சென்று உள்ளது. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது தற்போது 24 மணி நேரமாக உள்ளது.
நிலவு வருடத்திற்கு 3.82 சென்டி மீட்டர் விலகி சென்றுள்ளது.சென்று கொண்டு இருக்கிறது இவ்வாறு செல்வதால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிகம் தூரம் சென்று விடும் இதனால் பூமியின் சுற்றும் வேகத்தி மாறுபாடு ஏற்பட்டு பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை..!" என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். பல வேலைகள் நேரமின்மை காரணத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் ஒத்திவைக்கப்படுவது வழக்கம். ஒரு நாளில் அதிக மணி நேரம் கிடைக்காதா என்று பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு விரும்பியது போல் எதிர்காலத்தில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என்று புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.
கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில், இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது. எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். #25hours #futureEarth
அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில்,
140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44 ஆயிரம் கிமீட்டர் தூரம் விலகி சென்று உள்ளது. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது தற்போது 24 மணி நேரமாக உள்ளது.
நிலவு வருடத்திற்கு 3.82 சென்டி மீட்டர் விலகி சென்றுள்ளது.சென்று கொண்டு இருக்கிறது இவ்வாறு செல்வதால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிகம் தூரம் சென்று விடும் இதனால் பூமியின் சுற்றும் வேகத்தி மாறுபாடு ஏற்பட்டு பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை..!" என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். பல வேலைகள் நேரமின்மை காரணத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் ஒத்திவைக்கப்படுவது வழக்கம். ஒரு நாளில் அதிக மணி நேரம் கிடைக்காதா என்று பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு விரும்பியது போல் எதிர்காலத்தில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என்று புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.
கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில், இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது. எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். #25hours #futureEarth
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, பூமி மாசுபடுவதை தடுக்க மரக்கன்று நடுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் தேசிய பசுமைப்படை சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது,
உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், தங்களது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் மற்றும் பள்ளி வளாகத்தினை சுற்றியுள்ள பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து அதனை முறையாக பராமரித்திட வேண்டும்.
மேலும், மரக்கன்றுகளை நட்டு வைப்பதன் மூலம் தேவையற்ற மாசுக்களை நீக்கி சுத்தமான காற்று கிடைப்பதோடு சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
மரங்கள் மழை வளம் பெருவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. இயற்கை சம நிலை மேம்படைவதற்கும், புவி வெப்ப மயமாதலை குறைப்பதற்கும் இயற்கை சீற்றங்களை தணிக்கக் கூடிய தன்மையும் மரங்களுக்கு உண்டு.
மேலும், பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை மரங்கள் உருவாக்குகின்றன. மனிதனின் வாழ்வில் மரங்கள் என்பது இன்றியமையாதவையாகும். மரங்களின் தேவைகளை நல்ல முறையில் அறிந்து கொண்டு பிறருக்கும் அதன் தேவையை எடுத்துரைக்க வேண்டும்.
எனவே, மாணவர்களாகிய நீங்கள் பூமி மாசுபடுவதை தடுத்து பூமிக்கு மேல் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்திடவும் இயற்கையோடு ஒன்றிட எதிர்கால சந்ததியினருக்காக மரக்கன்றுகளை நாம் நட்டு அதனை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கும் வகையில் முதற்கட்டமாக நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் தேசிய பசுமைப்படை சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது,
உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், தங்களது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் மற்றும் பள்ளி வளாகத்தினை சுற்றியுள்ள பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து அதனை முறையாக பராமரித்திட வேண்டும்.
மேலும், மரக்கன்றுகளை நட்டு வைப்பதன் மூலம் தேவையற்ற மாசுக்களை நீக்கி சுத்தமான காற்று கிடைப்பதோடு சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
மரங்கள் மழை வளம் பெருவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. இயற்கை சம நிலை மேம்படைவதற்கும், புவி வெப்ப மயமாதலை குறைப்பதற்கும் இயற்கை சீற்றங்களை தணிக்கக் கூடிய தன்மையும் மரங்களுக்கு உண்டு.
மேலும், பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை மரங்கள் உருவாக்குகின்றன. மனிதனின் வாழ்வில் மரங்கள் என்பது இன்றியமையாதவையாகும். மரங்களின் தேவைகளை நல்ல முறையில் அறிந்து கொண்டு பிறருக்கும் அதன் தேவையை எடுத்துரைக்க வேண்டும்.
எனவே, மாணவர்களாகிய நீங்கள் பூமி மாசுபடுவதை தடுத்து பூமிக்கு மேல் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்திடவும் இயற்கையோடு ஒன்றிட எதிர்கால சந்ததியினருக்காக மரக்கன்றுகளை நாம் நட்டு அதனை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கும் வகையில் முதற்கட்டமாக நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.
அமெரிக்காவில் கிளாயுயா எரிமலை வெடித்ததின் அதிர்வு காரணமாக அங்கு பூமியில் வெடிப்பு ஏற்பட்டு பிளவுகள் ஏற்பட்டன. #Volcano
ஹவாஸ்:
அமெரிக்காவின் ஹவாஸ் தீவில் கிலாயுயா என்ற எரிமலை உள்ளது. அது கடந்த 3-ந்தேதி முதல் வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து லேசான புகை வெளியேறி வந்தது.
இந்த நிலையில் நேற்று அந்த எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியது. அதில் இருந்து எரிமலை குழம்பு வழிந்தோடுகிறது. கரும்புகை வெளியேறுகிறது. நாலாபுறமும் பாறைகள் சிதறுகின்றன.

கிளாயுயா எரிமலை வெடித்ததின் அதிர்வு காரணமாக அங்கு பூமியில் வெடிப்பு ஏற்பட்டு பிளவுகள் ஏற்பட்டன. முன்னதாக அப்பகுதியில் கடுமையான சூறாவளிக் காற்று வீசியது. இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் நிறுவனங்களின் ஜன்னல்கள் கதவுகள் ‘படபட’ வென அடித்தன. அதன் பின்னர்தான் எரிமலையில் இருந்து கியாஸ் மற்றும் குழம்பு வெளியேறியது.
கிளாயுயா எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. அதில் இருந்து வெளியான கரும்புகை விண்ணில் பரவியது. அதை மரத்தின் மீது ஏறி ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். #Volcano
அமெரிக்காவின் ஹவாஸ் தீவில் கிலாயுயா என்ற எரிமலை உள்ளது. அது கடந்த 3-ந்தேதி முதல் வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து லேசான புகை வெளியேறி வந்தது.
இந்த நிலையில் நேற்று அந்த எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியது. அதில் இருந்து எரிமலை குழம்பு வழிந்தோடுகிறது. கரும்புகை வெளியேறுகிறது. நாலாபுறமும் பாறைகள் சிதறுகின்றன.
எனவே பாதுகாப்பு கருதி கோனா கடற்கரை பகுதியில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிளாயுயா எரிமலை வெடித்ததின் அதிர்வு காரணமாக அங்கு பூமியில் வெடிப்பு ஏற்பட்டு பிளவுகள் ஏற்பட்டன. முன்னதாக அப்பகுதியில் கடுமையான சூறாவளிக் காற்று வீசியது. இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் நிறுவனங்களின் ஜன்னல்கள் கதவுகள் ‘படபட’ வென அடித்தன. அதன் பின்னர்தான் எரிமலையில் இருந்து கியாஸ் மற்றும் குழம்பு வெளியேறியது.
கிளாயுயா எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. அதில் இருந்து வெளியான கரும்புகை விண்ணில் பரவியது. அதை மரத்தின் மீது ஏறி ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். #Volcano