என் மலர்
நீங்கள் தேடியது "Ebola"
- 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
- எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
கம்பாலா:
ஆப்பிரிக்க நாட்டின் எபோலா ஆற்றங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1976-ம் ஆண்டு எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 2014 முதல் 2016-ம் ஆண்டில் எபோலா தொற்றால் சுமார் 11 ஆயிரம் பேர் இறந்தனர். பின்னர் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே தலைநகர் கம்பாலாவில் ஒரு நர்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன்மூலம் இந்த ஆண்டு எபோலா தொற்றுக்கு பலியான முதல் நபர் இவர் ஆவார். இதனையடுத்து அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிகாரோ:
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 2013-ம் ஆண்டு ‘எபோலா’ நோய் பரவியது. முதலில் கினியா நாட்டில் பரவிய நோய் பின்னர் சிரியாலோன், லைபிரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் பரவியது.
2016-ம் ஆண்டு வரை இந்த நோய் தொடர்ந்து பரவி வந்தது. இதில் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரத்து 310 பேர் உயிரிழந்தனர். இந்த நோய் ‘எபோலா’ என்ற வைரசால் பரவுகிறது.
1976-ல் இதேபோல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் பரவி 150 பேர் பலியானார்கள். அதன்பிறகு 2013-ம் ஆண்டுதான் மிக அதிக அளவில் தான் தாக்குதல் இருந்தது. 2016-க்கு பிறகு நோய் கட்டுக்குள் வந்தது.
இந்த நோய் மனிதனிடமிருந்து மனிதனுக்கு உடனடியாக தொற்றக்கூடியதாகும். இதனால் சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் கூட நோய் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.
‘எபோலா’ நோய் கட்டுக்குள் இருந்த நிலையில் இப்போது காங்கோ குடியரசு நாட்டில் மீண்டும் பரவி இருக்கிறது. இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் மட்டுமே ‘எபோலா’ கிருமிக்கு உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். மற்றவர்கள் ‘எபோலா’ நோயினால் தான் உயிரிழந்தார்களா? என்று உறுதிப்படுத்த முடிய வில்லை.
தற்போது 36 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிசசை பெற்று வருகிறார்கள். அவர்களில் 18 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. மீண்டும் ‘எபோலா’ நோய் பரவி இருப்பது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது.
அனைத்து நாடுகளும் உஷாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. காங்கோ குடிரசில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுத்துள்ளனர்.
‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை கொடுத்தே நோயை குணப்படுத்தி வருகிறார்கள். #Eboladisease