என் மலர்
நீங்கள் தேடியது "eid"
- புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும்.
- ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை தினத்தில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும், இவரது புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான்.
அந்த வகையில், ரம்ஜான் பண்டிகை நாளான (ஏப்ரல் 11) இன்று சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் கூடினர். ஒரே சமயத்தில் ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன் ஒன்று கூடியதால், அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். எனினும், காவலர்களால் ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்க காவலர்கள் தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து கலைந்து போக வலியுறுத்தினர். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நடிகருக்கு வாழ்த்து தெரிவிக்க கூடிய ரசிகர்கள் மீது தடியடி நடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சல்மான் கான் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்திற்கு "சிக்கந்தர்" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
ஈகைத் திருநாளை இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டாடுவர். தங்களது புலன்களின் கட்டுப்பாட்டை முழுமைப்படுத்திவிட்ட மகிழ்ச்சியில் கொண்டாடுவர். தங்களால் நோன்பு ஏற்க முடிந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டாடுவர். பல நாட்கள் மனஸ்தாபங்களை மகிழ்ச்சியான தினத்தில் மறந்துவிட வேண்டுமென்று நட்பு பாராட்டும், உறவை மேம்படுத்தும் தினமாகக் கொண்டாடுவர். தனது மகிழ்ச்சியில் மற்றவர்களைப் பங்கேற்க அழைத்துச் சகோதர சமுதாய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அகம் மகிழ்ந்து விருந்து படைத்துக் கொண்டாடுவர். அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களைத் தமது சந்தோஷத்தில் இணைத்துக் கொண்டு கொண்டாடுவர்.
மனம் மற்றும் உடல் கட்டுப்பாட்டுக்கான முப்பது நாள் நோன்பு பயிற்சி முடிந்து தொழுகைக்கு முன்பு கட்டாயமாக ஃபித்ராவை அதாவது தான் சாப்பிடும் ஒருநாளுக்குத் தேவையான அளவு (சராசரியாக இரண்டரை கிலோ) அரிசியையோ, கோதுமையையோ தானமாகத் தந்த பிறகே ஈகைத் திருநாளுக்கான தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இந்த வகையான தானத்தை ஆரம்பிக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் கடமை. ஆதலால் ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் ஃபித்ரா அரிசியையும் நான்கு மடங்காகவே தர வேண்டும். அதாவது ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியமாகும். இவ்வகைத் தர்மம் ஏழைகளுக்கு உணவாகும், நோன்பாளிகளைத் தூய்மைப்படுத்தவும், நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமையும். நோன்பு நோற்க முடியாதவர்கள் சார்பில் கொடுக்கப்படும் ஃபித்ரா ஏழைகளுக்கு உணவளித்த நன்மை கிடைக்கும்.
இந்தத் தானத்தை மிகவும் வசதிப் படைத்தவர்கள்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தனக்கு ஒருவேளை உணவு இருந்தால் அதில் பங்கு வைத்துத் தானம் செய்ய இயன்றாலும் செய்யலாம். கடன் இல்லாதவர்கள் இவ்வகையான தானம் செய்வது சிறப்பானது. ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி, அதையே பல்லாண்டுகளுக்கு முன்பாக வலியுறுத்தும் விதமாக, இருப்பதைப் பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்டதுதான் ஸகாத்தும், ஹதியாவும், ஃபித்ராவும்.

ஸகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும். பெரும்பாலும் ஈகைத் திருநாளின் போதே அந்த வருடத்திற்கான ஸகாத்தை செலுத்திவிடுவதே வழக்கத்தில் உள்ளது. நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என ஸகாத் கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். ஃபித்ராவும் ஹதியாவும் கையேந்துபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஸகாத் என்பது சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள, அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும் தாழ்ந்து செல்லும் துர்பாக்கியம் நிகழ்வதைக் காக்கும் கவசமாகிறது ஸகாத்.
ஈகைத்திருநாள் கொண்டாட்டம் என்பது கொடுப்பதும் குதூகலிப்பதும்.