என் மலர்
நீங்கள் தேடியது "Electric Car"
- இந்திய எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனம் நாட்டின் மிக குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது.
- புதிய PMV எலெக்ட்ரிக் கார் மூன்று வித ரேன்ஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மும்பையை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. Eas-E பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் PMV (பெர்சனல் மொபிலிட்டி வெஹிகில்) எனும் புதிய பிரிவை உருவாக்கி இருக்கிறது. புதிய PMV Eas-E மாடல் இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
புதிய PMV Eas-E மாடலின் அறிமுக விலை ரூ. 4 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய Eas-E மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 20 ஆயிரம் ஆகும். PMV Eas-E விலை அறிமுக சலுகையாக முதல் 10 ஆயிரம் முன்பதிவுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த காரை வாங்க இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டு இருப்பதாக PMV எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது.

PMV Eas-E மாடலில் 48 வோல்ட் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 50 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது முழு சார்ஜ் செய்தால் 120, 160 மற்றும் 200 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் வகையில் மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த காரின் அதிகபட்சம் வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இந்த காரை 15A சார்ஜர் மூலம் நான்கு மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். 2915mm நீளமாக இருக்கும் PMV Eas-E மாடலில் ஓட்டுனர் சேர்த்து இருவர் பயணம் செய்ய முடியும்.
தோற்றத்தில் PMS Eas-E முன்புறம் எல்இடி லைட் ஸ்ட்ரிப், எல்இடி ஹெட்லேம்ப் உள்ளது. பின்புறத்தில் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 4ஜி கனெக்டிவிட்டி, பல்வேறு டிரைவிங் மோட்கள், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிமோட் பார்க்கிங் அசிஸ்ட், குரூயிஸ் கண்ட்ரோல், ஏசி, பவர் விண்டோ, கீலெஸ் எண்ட்ரி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஆன்போர்டு நேவிகேஷன், ரியர் கேமரா, முன்புறம் டிஸ்க் பிரேக், ஏர்பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
- மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது.
- இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.
மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்- XUV400-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா XUV400 மாடலின் உற்பத்தி அடுத்த மாதம் துவங்கும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு மற்றும் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என மஹிந்திரா அறிவித்துள்ளது.
புதிய மஹிந்திரா XUV400 மாடலில் 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் 150 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காருடன் 50 கிலோவாட், 7.2 கிலோவாட் AC மற்றும் 3.3 கிலோவாட் AC சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன.

ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய மஹிந்திரா XUV400 மாடல் தோற்றத்தில் XUV300 போன்றே காட்சியளிக்கிறது. இதில் பிளான்க்டு-அவுட் முன்புற கிரில், புதிய 15 இன்ச் அலாய் வீல்கள், ஸ்மோக்டு எல்இடி டெயில் லைட்கள், டூயல் டோன் நிற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா XUV400 மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கலர்டு MID, எலெக்ட்ரிக் சன்ரூஃப், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் விலை டாடா நெக்சான் EV மேக்ஸ் மற்றும் எம்ஜி இசட்எஸ் EV போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம்.
- இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வாகனங்கள் மீது தனி பிரியம் கொண்டவர்.
- தனது இல்லத்தில் ஏராளமான பைக் மற்றும் கார்களை வாங்கி கரேஜ் ஒன்றை எம்எஸ் தோனி வைத்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் கார் மற்றும் பைக் மீது அதீத மோகம் கொண்டவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. உலக கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளுக்கு பெயர் பெற்ற எம்எஸ் தோனி தனது வீட்டில் ஏராளமான பழைய மற்றும் அதிநவீன கார், பைக் வாங்கி சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த வரிசையில், எம்எஸ் தோனி கரேஜில் புதுவரவு வாகனமாக கியா EV6 சேர்ந்து இருக்கிறது. இது எம்எஸ் தோனி வாங்கி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் வீடியோவில், எம்எஸ் தோனி கியா EV6 மாடலில் கிரிக்கெட் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருடன் அமரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கிரெ நிறம் கொண்ட கியா EV6 மாடல் முற்றிலும் புதிதாக காட்சியளிப்பதோடு, தற்காலிக பதிவு எண் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கியா EV6 விலை உயர்ந்த முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்த கார் சிபியு முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. மேலும் கியா EV6 மாடல் குறுகிய எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கியா EV6 மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக காரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த கியா இந்தியா முடிவு செய்துள்ளது. இதுவரை இந்திய சந்தையில் மட்டும் சுமார் 200-க்கும் அதிகமான கியா EV6 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் கியா EV6 விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இதில் 2 வீல் டிரைவ் வசதி, முன்புறம் மவுண்ட் செய்யப்பட்ட ஒற்றை மோட்டார் உள்ளது. இது 229 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே கார் வெவ்வேறு பேட்டரி மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய டாடா எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2022 டாடா டிகோர் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டாடா டிகோர் EV விலை ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. 2022 டாடா டிகோர் EV மாடல் புதிய நிறத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் முன்பை விட அதிக ரேன்ஜ் வழங்குகிறது.
2022 டிகோர் EV மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய காரை விட 15 கிலோமீட்டர் வரை அதிக ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் தற்போது முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. இதன் செயல்திறன் அளவில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த வகையில் இந்த கார் 74 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

மேம்பட்ட டாடா டியாகோ EV மாடலில் லெதர் இருக்கை மேற்கவர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு இந்த எலெக்ட்ரிக் செடான் மாடலில் டாடாவின் Z கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. ஏற்கனவே டிகோர் EV XZ மற்றும் XZ+ மாடல்களை பயன்படுத்துவோருக்கு இதற்கான அப்டேட் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது.
டாடா டிகோர் EV XZ+ லக்ஸ் இந்த சீரிசில் டாப் எண்ட் மாடலாக உள்ளது. இந்த வேரியண்ட் டாடா டிகோர் EV XZ+ வேரியண்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. புதிய டாடா டிகோர் EV XZ+ லக்ஸ் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2022 டிகோர் EV மாடல் இந்திய சந்சதையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனம், டாடா டியாகோ EV 20 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை அறிமுகம் செய்தது. இதன் முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்கியகது.
இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இந்த விலை காரை முதலில் முன்பதிவு செய்யும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும். முன்பதிவு துவங்கிய முதல் நாளே காரை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டாடா டியாகோ EV மாடலை முன்பதிவு செய்தனர் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருந்தது.

புதிய டாடா டியாகோ EV மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்த நெக்சான் EV மாடல் இந்தியாவில் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இதைத் தொடர்ந்து நெக்சான் EV மேக்ஸ், டிகோர் EV ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டியாகோ EV போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து வருகிறது.
இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் பயணிகள் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 89 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. முன்னதாக தனது 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருந்தது. வரும் ஆண்டுகளில் மேலும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடாட மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
- வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- சமீபத்தில் தான் வால்வோ தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது.
வால்வோ இந்தியா நிறுவனம் உள்நாட்டில் அசெம்பில் செய்யப்பட்ட XC40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் முதல் யூனிட்டை சமீபத்தில் தான் வெளியிட்டது. தற்போது XC40 ரிசார்ஜ் மாடலின் இந்திய விலையை உயர்த்துவதாக வால்வோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
விலை உயர்வை அடுத்து வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலின் விலை தற்போது ரூ. 56 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது காரின் முந்தைய விலையை விட ரூ. 1 லட்சம் அதிகம் ஆகும். எலெக்ட்ரிக் மாடல் விலை உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில், அதன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வால்வோ XC60 B5 அல்டிமேட் எஸ்யுவி மற்றும் XC90 B6 அல்டிமேட் எஸ்யுவி மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து இரு கார்களின் விலை தற்போது முறையே ரூ. 66 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ. 96 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே காரின் பெட்ரோல் மைல்டு-ஹைப்ரிட் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் சர்வதேச சந்தையில் உதிரி பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே கார் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக வால்வோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் நவம்பர் 24 ஆம் தேதி வரை கார்களை முன்பதிவு செய்தவர்கள் இந்த விலை உயர்வில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வால்வோ உறுதிப்படுத்தி விட்டது.
- பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் புது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- இது அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்பதோடு முழு சார்ஜ் செய்தால் 500 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் பிரவைக் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி - டெஃபி-யை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிரவைக் டெஃபி எஸ்யுவி விலை ரூ. 39 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பிரவைக் டெஃபி அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். மேலும் இந்த கார் பவர், ஸ்பீடு மற்றும் ரேன்ஜ் உள்ளிட்டவைகளில் அதிரடி நம்பர்களை குறி வைத்து எட்டியிருக்கிறது. இது போன்ற செயல்திறன் கொண்ட தயாரிப்புகளை ஜெர்மனி மற்றும் தென் கொரிய நிறுவனங்கள் மட்டுமே இந்திய சந்தையில் வழங்கி வருகின்றன.

புதிய பிரவைக் டெஃபி மாடலில் 402 ஹெச்பி பவர் மற்றும் 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் திறன் இரு ஆக்சில்களுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படுகிறது. மேலும் புதிய டெஃபி மாடல் ஆல் வீல் டிரைவ் வசதி கொண்டிருக்கிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பிரவைக் டெஃபி மாடலில் உள்ள 90.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிக கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
- சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய சிட்ரோயன் எலெக்ட்ரிக் விலை மற்றும் இந்திய வெளியீடு பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பிரென்ச் நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் சிட்ரோயன் நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் மாடலாக C3 ஹேக்பேக்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியானது.
தற்போது சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சிட்ரோயன் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் மாடல் e-C3 அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை சிட்ரோயனின் தாய் நிறுவனமான ஸ்டெலாண்டிஸ் தலைமை செயல் அதிகாரி கார்லஸ் டவெரிஸ் தெரிவித்து இருக்கிறார்.

புதிய எலெக்ட்ரிக் காரின் சரியான வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் தற்போது அறிவிக்கப்படவில்லை. எனினும், 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வை தொடர்ந்து இந்த காரின் வெளியீடு நடைபெறும் என கூறப்படுகிறது. வெளியீட்டு விவரத்துடன், எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையை மேலும் குறைவாக நிர்ணயம் செய்வதற்கான விலை வடிவத்தை உருவாக்க ஸ்டெலாண்டிஸ் கடுமையாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
குறைந்த விலை, வாகனத்தின் தரம் என பல்வேறு இலக்குகளை எவ்வளவு வேகமாக அடைகிறோம் என்பதை பொருத்து இந்தியாவில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்வது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையை குறைப்பது மிகப் பெரிய சவால் என அவர் மேலும் தெரிவித்தார்.
- இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
- ஏற்கனவே இந்த கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வருகிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் வாகனத்திற்கான முன்பதிவு இந்தியாவில் டிசம்பர் 20 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே இந்த காரின் டெஸ்டிங் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் இந்திய விலை விவரங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
கியா நிறுவனத்தின் EV6 மாடல் உருவாக்கப்பட்ட E-GMP பிளாட்ஃபார்மிலேயே புதிய ஐயோனிக் 5 மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பானரோமிக் சன்ரூஃப், 20 இன்ச் அளவில் பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் அலாய் வீல்கள், முழு சார்ஜ் செய்தால் 412 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கிறது. இதன் உள்புறம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டிசைனை பொருத்தவரை ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், ஃபிளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், பிக்சலேட் டிசைன் கொண்ட எல்இடி டெயில் லைட்கள், இண்டகிரேடெட் ஸ்பாயிலர், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, ஃபௌக்ஸ் முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் பெரிய கன்சோலில் ஒரு ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்றும் மற்றொரு ஸ்கிரீன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபுளோடிங் செண்டர் கன்சோல், 2-ஸ்போக் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் 2023 ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், RWD மற்றும் AWD வெர்ஷ்ன்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இந்த இரு வேரியண்ட்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐயோனிக் 5 மாடல் உள்நாட்டிலேயே அசெம்பில் செய்யப்படும் என தெரிகிறது.
- மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் கார் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- தற்போது மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் XUV400 மாடல் மூலம் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கியது. இதன் வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் ஆட்டோமோடிவ் வடிவமைப்பாளர் பிரதாப் போஸ் மற்றும் முன்னணி அழகி ரிம்ஜிம் ததுவுடன் இணைந்து ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
மஹிந்திரா ஆட்டோமோடிவ் டெக் ஃபேஷன் டூர் சீசன் 6 நிகழ்வில் மஹிந்திரா XUV400 ஸ்பெஷல் எடிஷன் காட்சிப்படுத்தப்பட்டது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஃபேஷனை ஃபேப்ரிக்ஸ்-ஐ முதன்மை உபகரணமாக கொண்டு வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஃபேப்ரிக் சார்ந்து உருவாக்கப்பட்ட தீம், ட்வின்-பீக் காப்பர் நிற மஹிந்திரா லோகோ புளூ நிற அவுட்லைன் பெற்று இருப்பதோடு ரிம்ஜிம் தது எக்ஸ் போஸ் கையெழுத்து இடம்பெற்று இருக்கிறது. இந்த லோகோ விண்ட்ஷீல்டு மற்றும் இதர வெளிப்புற பாகங்களில் பொருத்தப்படுகிறது.

காரின் உள்புறத்தில் ஃபேப்ரிக் சார்ந்த எலிமண்ட்கள் கேபின் முழுக்க காணப்படுகிறது. ரிம்ஜிம் தது எக்ஸ் போஸ் லோகோ சீட் ஹெட்ரெஸ்ட் மீது காணப்படுகிறது. இச்சுடன் ஆர்க்டிக் புளூ தீம் கார் இண்டீரியர் முழுக்க பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா XUV400 மாடல் பேஸ், EP மற்றும் EL.A என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரில் 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது.
இதில் உள்ள மோட்டார்கள் 150 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 456 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை மஹிந்திரா XUV400 மாடல் 4200mm நீளமாக உள்ளது.
- டொயோட்டா நிறுவனம் சமீபத்திய சர்வதேச மோட்டார் விழா ஒன்றில் இன்னோவா மாடலை சார்ந்த எலெக்ட்ரிக் எம்பிவி ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது.
- புதிய ப்ரோடோடைப் மாடல் இன்னோவா க்ரிஸ்டா மாடல் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் டொயோட்டா, இந்த ஆண்டு நடைபெற்ற இந்தோனேசியா சர்வதேச மோட்டார் விழாவில் இன்னோவா காரை சார்ந்து உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் எம்பிவி மாடலின் கான்செப்ட் ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது. இந்த மாடல் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடல் போன்றே காட்சியளித்தது.
எனினும், சற்றே பழைய IMV2 லேடர்-ஆன்-ஃபிரேம் பிளாட்ஃபார்மில் எலெக்ட்ரிக் வாகனம் எதையும் அறிமுகம் செய்யப் போவதில்லை என டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கான்செப்ட் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகளுக்காகவே உருவாக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், இன்னோவா க்ரிஸ்டா மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் எம்பிவி மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ஸ்பை படங்களில் காரின் முன்புறம், இன்னோவா க்ரிஸ்டா மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், பிளான்க்டு-அவுட் கிரில் டிசைன் மற்றும் புளூ அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளது.
மற்ற காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை ரிடிசைன் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், எல்இடி ஹெட்லேம்ப்களில் புளூ இன்சர்ட்கள், டி-பில்லர், புதிய பக்கவாட்டு டிகல்களில் "இன்னோவா EV" ஸ்டிக்கர்கள் மற்றும் பின்புறத்தில் EV பேட்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடலின் தொழில்நுட்ப விவரங்கள் அல்லது மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இதன் காரணமாக இந்த காரின் பேட்டரி திறன், அதிகபட்ச ரேன்ஜ் மற்றும் பவர் அவுட்புட் பற்றிய விவரங்களும் மர்மமாகவே உள்ளது. இதுதவிர டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் இன்னோவா ஹைகிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் சாலைகளில் சோதனை செய்யப்பட்ட போதிலும், இது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியான விஷயம் தான்.
Photo Courtesy: Carwale
- எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எம்ஜி ZS EV தாய்லாந்தில் எம்ஜி VS என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல மிட்சைஸ் எஸ்யுவி ZS மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இதுதவிர ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முன்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. எம்ஜி ZS EV தாய்லாந்து சந்தையில் எம்ஜி VS என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய எம்ஜி ZS ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம், ரி-வொர்க் செய்யப்பட்ட முகப்பு பகுதி, அளவில் பெரிய - வட்ட வடிவம் கொண்ட கிரில் உள்ளது. இத்துடன் மெல்லிய, கூர்மையான கிடைமட்டமாக பொருத்தப்பட்ட கிரில் காணப்படுகிறது. ஹெட்லேம்ப்களும் மாற்றப்பட்டு ஷார்ப்-எட்ஜ், ஆல் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புற பம்ப்பர் புதிதாக மாற்றப்பட்டு, டைமண்ட் பேட்டன், பெரிய ஏர் இண்டேக் வழங்கப்பட்டுள்ளது.

காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதன் மெஷிண்டு அலாய் வீல்களில் ரிவைஸ்டு டிசைன், டெயில் லேம்ப்களில் புதிய எல்இடி இன்சர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் இண்டீரியர் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இதில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பெரிய பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.
தாய்லாந்தில் புதிய எம்ஜி ZS ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கிறது. இதில் 1.5 லிட்டர் 115 PS NA பெட்ரோல் என்ஜின், 1.3 லிட்டர் 140 PS டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ZS EV மாடலில் தொடர்ந்து 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இது முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய ZS அல்லது ZS EV மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், புது மாடல்கள் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 துவக்கத்திலோ இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இரு மாடல்களின் தற்போதைய வெர்ஷன் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.