என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exit polls"

    பகுஜன் சமாஜ் கட்சி திடீரென பல்டி அடித்துள்ளதால் சோனியா -மாயாவதி சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 23-ந்தேதி சோனியா கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் உத்தரபிரதேசம் சென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

    இதைத் தொடர்ந்து மாயாவதி இன்று (திங்கட்கிழமை) சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பேச முடிவு செய்திருந்தார். அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. 8 கருத்து கணிப்புகளில் 7-ல் பாரதீய ஜனதாதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த கருத்து கணிப்பு முடிவுகள் மாயாவதி மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் டெல்லிக்கு செல்லும் முடிவை தவிர்த்தார்.

    தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேவைப்பட்டால் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கலாம் என்று அவர் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. இதனால் சோனியா- மாயாவதி சந்திப்பு தள்ளி போய் உள்ளது.

    இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர் சத்தீஸ் சந்திரமிஸ்ரா கூறுகையில், “டெல்லியில் இன்று எங்கள் கட்சி தலைவர் மாயாவதிக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லை. டெல்லியில் யாரையும் சந்தித்து பேசும் திட்டமும் இல்லை. அவர் லக்னோவில்தான் இருக்கிறார்” என்றார்.

    மாயாவதி திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டதால் சந்திரபாபு நாயுடு முயற்சிகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாயாவதியை போனில் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தெரிய வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே காங்கிரஸ் கட்சியை மாயாவதி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக ராகுலின் செயல்பாடுகளில் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். என்றாலும் உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை தனக்கு ஆதரவாக மாற்ற முடியும் என்று நினைத்தார்.

    ஆனால் கருத்து கணிப்புகளில் அவருக்கு சாதகமான வகையில் அதிக வெற்றி கிடைக்கும் என்று கூறப்படவில்லை. எனவே 23-ந்தேதி வரை காத்திருக்க அவர் தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந்தேதி மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வருமாறு சோனியா அழைப்பு விடுத்து இருந்தார். அந்த அழைப்பை ஏற்று டெல்லி செல்ல போவதாக பல்வேறு கட்சி தலைவர்களும் அறிவித்து இருந்தனர்.


    பாரதீய ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஓரணியாக ஜனாதிபதியை 23-ந்தேதி இரவே சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளால் எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    எனவே 23-ந்தேதி சோனியா கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கருத்துக்கணிப்புகளை மட்டும் வைத்து எந்த முடிவையும் சொல்ல முடியாது என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுதினம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் காங்கிரசாரால் அனுஷ்டிக்கப்படுகிறது. கர்நாடக மாநில ஐ.என்.டி.யூ.சி. சார்பில் ஆண்டு தோறும் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி நினைவு ஜோதி யாத்திரை பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூரை அடையும்.

    இந்தஆண்டு ஜோதி யாத்ரா கடந்த 15-ந் தேதி பெங்களூருவில் தொடங்கியது. புதுவை வழியாக நாளை ஸ்ரீபெரும்புதூரை யாத்ரா சென்றடையும். நேற்று மாலை ஜோதி யாத்ரா புதுவைக்கு வந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரசார் இந்திராகாந்தி சிலை அருகே வரவேற்றனர். லெனின் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் யாத்திரை குழுவினர் இரவு தங்கியிருந்தனர்.

    இன்று காலை மீண்டும் யாத்திரை புறப்பட்டது. இதற்கான வழியனுப்பு விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது. முதல்- அமைச்சர் நாராணசாமி ஜோதியை அவர்களிடம் வழங்கி வழியனுப்பி வைத்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெய மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், துணைத்தலைவர் தேவதாஸ், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், தனுசு, நிர்வாகிகள் சீனுவாசமூர்த்தி, கே.எஸ்.பி.ரமேஷ், ஜனார்த்த னன், இளையராஜா, பிரேமலதா, ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர் ராஜீவ்காந்தி. அவர் காலத் தில்தான் அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகியவற்றில் நாடு பெரும் வளர்ச்சியடைந்தது. அவர் உயிரோடு இருந்திருந்தால் நாடு மேலும் பல வளர்ச்சிகளை கண்டு இருக்கும். அவரின் நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

    இதனையொட்டி நினைவு யாத்திரை பெங்களூருவில் இருந்து வந்துள்ளது. நாளை புதுவை காங்கிரசார் சார்பில் ராஜீவ்சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூருக்கு செல்கிறோம். அங்கு நடைபெறும் அமைதி பேரணியில் பங்கேற் கிறோம்.

    நாட்டில் 80 கோடி வாக்காளர்கள் இருக்கும் போது 5 அல்லது 6 லட்சம் வாக்காளர்களிடம் மட்டும் கருத்துக்களை கேட்டு வெளியிடுவது சரியானதாக இருக்காது.

    கடந்த காலத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீண்டும் வெற்றி பெற்று அவரே பிரதமர் ஆவார் என கருத்துக்கணிப்பு கூறியது. ஆனால், அவர் தோல்வியடைந்தார். 2009-ம் ஆண்டு மன்மோகன்சிங் தோல்வி அடைவார் என கருத்துக்கணிப்பு கூறியது.

    ஆனால், மன்மோகன்சிங் பிரதமர் ஆனார். இதுபோல பல மாநிலங்களில் கருத்துக் கணிப்பு பொய்யாகி உள்ளது. எனவே, கருத்துக்கணிப்புகளை மட்டும் வைத்து எந்த முடிவையும் சொல்ல முடியாது. அதேபோல இந்த ஆண்டும் கருத்துக் கணிப்புகள் பொய்த்து போகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லுமுல்லு செய்யும் முயற்சி என மம்தா பானர்ஜி பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் இன்று மாலை வெளியான சில ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லுமுல்லு செய்யும் முயற்சி என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இன்றிரவு தனதுடுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை. இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் எல்லாம் வாக்கு இயந்திரங்களை மாற்றவும் அவற்றில் தில்லுமுல்லு செய்யவும் ஆடப்படும் நாடகம்தான்.

    உறுதியோடும், தைரியமாகவும், ஒற்றுமையாகவும் எதிர்த்துப் போராடி இந்த போர்க்களத்தில் நாம் வென்றாக வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
    தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இங்கு அதிமுக கூட்டணிக்கு 4 தொகுதிகளும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 34 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு 29 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 9 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    அயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், கருக்கலைப்புக்கு ஆதரவாக பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Irishabortionlaws
    டப்ளின்:

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு உயிரிழந்தார்.

    இந்த விவகாரம் அயர்லாந்து மக்களிடையே  கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அத்துடன், கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது.

    அதன்படி கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினை அறியும் வகையில் நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் 6500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.



    இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

    அயர்லாந்து தேசிய தொலைக்காட்சி மற்றும் ஐரிஷ் டைம்ஸ் சார்பில் தனித்தனியாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஐரிஷ் டைம்ஸ் சார்பில் நாடு முழுவதும் 160 வாக்குச்சாவடிகளில் 4000 பேரிடமும், தேசிய தொலைக்காட்சி சார்பில் 175 மையங்களில் 3800 பேரிடமும் கருத்து கேட்கப்பட்டது.

    தேசிய தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், கருக்கலைப்புக்கு ஆதரவாக 69.4 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர். இதேபோல் ஐரிஷ் டைம்ஸ் வாக்கெடுப்பில் 68 சதவீதம் பேர் கருக்கலைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    எனவே, பொதுவாக்கெடுப்பின் முடிவுகள், கடுமையான கருக்கலைப்பு தடைச் சட்டத்தை ரத்து செய்ய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Irishabortionlaws
    ×