என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Face Pack"

    • குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஃபேஷியல் செய்துகொள்வது நல்லது.
    • ஃபேஷியல் செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும்.

    ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்வது போன்று செய்யவும். இப்படி இரண்டு, மூன்று முறை முகம் முழுக்க மசாஜ் செய்தபடி அழுக்கை துடைத்து எடுக்கவும். தினமும் கூட பால் கொண்டு இப்படி க்ளென்ஸ் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.

    க்ளென்சிங் செய்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு காட்டன் துணியைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். பின் ஸ்கிரப் செய்யவேண்டும். அதற்கு, பொடித்த சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையுடன் 2, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்த பின், மென்மையாக தேய்த்து மசாஜ் செய்வது போல ஸ்கிரப் செய்யவும். கவனிக்க... சர்க்கரை சருமத்தை பதம் பார்த்துவிடாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண்ணின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். கழுத்துக்கும் சேர்த்து ஸ்கிரப் செய்யலாம். ஸ்கிரப் செய்த பின்னர், மேலிருந்து கீழ்நோக்கித் துடைக்கவும்.

    நன்றாகப் பழுத்த பப்பாளியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பப்பாளியை முகம் முழுவதும், கண்ணுக்கு அடியில், கழுத்தில் என வட்டவடியில் மசாஜ் செய்வது போல அப்ளை செய்யவும். பின் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்யவும். தாடைப் பகுதியில் 10 முதல் 20 முறை வரை மேல்நோக்கி மசாஜ் செய்யவும். கன்னம் பகுதியில் காதுவரை மசாஜ் செய்யவும். பின் மூக்கில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் செய்யவும். கண் பகுதிக்கு வட்ட வடிவில் நடுவிரல் கொண்டு மசாஜ் செய்யவும். பின், கண்களின் பக்கவாட்டுப் பகுதியான பொட்டுப் பகுதியில் விரல்களை வைத்து எடுக்கவும்.

    மசாஜ் செய்த பின் முகத்தில் ஊடுருவக்கூடிய காட்டன் துணியான காஸ் (gauze) போடவும். அதன் மேல் பேக் போட வேண்டும். பேக் ரெடி செய்ய, நல்ல பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் தூய்மையான தேன் ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை, முகத்தில் போடப்பட்டிருக்கும் காஸ் மீது அப்ளை செய்து கொள்ளவும். முகம் முழுவதும் அப்ளை செய்த பின் அதன் மீது சில்வர் ஃபாயில் கொண்டு மூடிவிடவும்,

    10 நிமிடங்களுக்குப் இந்த இந்த சில்வர் ஃபாயிலை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் காஸ் துணியை நீக்கவும். முகத்தை துடைத்துக் கொள்ளவும். பின் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். முகம் அவ்வளவு மென்மையாக, பளிச்சென்று ஆனதை உணர்வீர்கள்.

    • முகத்தில் எந்த மாசுவும் சேர விடாமல் தடுத்து அழகை அதிகரிக்கும்.
    • சருமத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கும்.

    பெண்களின் சருமத்தை பாலாடையோடு ஒப்பிடுவது வழக்கம். அத்தகைய மென்மையான, பளபளக்கும் சருமத்தை பெற அவ்வப்போது முகத்துக்கு 'பாலாடை மாஸ்க்' உபயோகிக்கலாம். பாலில் இருக்கும் 'லாக்டிக் அமிலம்' சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

    அதனால் அந்த இடத்தில் புதிய செல்கள் தோன்றி சருமம் எப்போதும் புதுப்பொலிவுடன் இருக்கும். பாலாடையை சருமத்தில் பூசுவதன் மூலம், திசுக்களில் தேங்கி இருக்கும் முகப்பருவை உருவாக்கும் கிருமிகள் நீங்கும். பாலாடையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவினால் 'பேஷியல்' செய்தது போன்ற பொலிவு கிடைக்கும்.

    பாலாடையை முகத்தில் நன்றாகத் தேய்த்து ஸ்கிரப் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் பாலாடையை அவ்வப்போது தடவி வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெய் தன்மைகொண்ட சருமத்தில் பாலாடையுடன் ரோஜா பன்னீர் அல்லது தயிர் கலந்து மாஸ்க் போன்று பயன்படுத்தலாம்.

    பாலாடையை அப்படியே உபயோகிக்காமல், சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால், சருமத்தில் பெரிய அளவில் இருக்கும் துவாரங்கள் சிறியதாகும். முகத்தில் எந்த மாசுவும் சேர விடாமல் தடுத்து அழகை அதிகரிக்கும்.

    பாலாடை பயன்படுத்தி தயாரிக்கும் பேஸ் மாஸ்க்குகள்:

    பாலாடை மற்றும் மஞ்சள்: 1 டீஸ்பூன் பாலாடையுடன், 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முகம் முழுவதும் பூசி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும்.

    பாலாடை மற்றும் கற்றாழை ஜெல்: 2 டீஸ்பூன் பாலாடையுடன், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும்.

    பாலாடை மற்றும் தேன்: 1 டீஸ்பூன் பாலாடையுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.

    • இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.
    • வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

    அதிகப்படியான வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவு இழந்து போகும். இந்தக் கருமையை, சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே 'பிளீச்சிங்' எனப்படுகிறது. எந்த விதமான ரசாயனமும் பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கும் இயற்கையானப் பொருட்களைப் பயன்படுத்தி கருமையை நீக்கி, சரும நிறத்தை பழையபடி கொண்டு வர முடியும். அதைப்பற்றி பார்க்கலாம்.

    ரசாயனக் கலவை கலந்த பிளீச்சிங் பொருட்களுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக புளி இருக்கிறது. இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.

    புளி - ஒரு எலுமிச்சை அளவு

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    அரிசி மாவு - 1 தேக்கரண்டி

    தேன் - 1 தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரோஜா பன்னீர், தண்ணீர் - தேவையான அளவு

    வெந்நீரில் புளியை ஊறவைத்து அதன் சாற்றை கெட்டியாக பிழிந்தெடுத்துக்கொள்ளவும். பிழிந்த சாறில் அரிசி மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை ரோஜா பன்னீர் கொண்டு நன்றாகத் துடைத்த பின்பு, புளி கலவையை முகம் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

    • சருமத்தை எவ்வித பக்க விளைவுகள் இன்றி அழகாக மாற்றலாம்.
    • சிவப்பு சந்தனத்தை எப்படி, எதனுடன் சேர்த்து பயன்படுத்துவது என்று காண்போம்.

    சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே இவற்றைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

    • உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அச்செயலை சிவப்பு சந்தனம் சிறப்பாக செய்யும். எனவே 2 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் முகம், கை, கால்களுக்கு தடவி வர, உங்கள் சருமம் நன்கு ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.

    • உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துங்கள். அதற்கு ஒரு பௌலில் 2 தேக்கரண்டி தயிர் அல்லது பாலை ஊற்றி, அதில் 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடி மற்றும் 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

    • பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு எளிதில் போக்கலாம். அதற்கு 4 தேக்கரண்டி தேங்காய் பாலில், 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 4 தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து கலந்து தினமும் முகத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.

    • சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் அந்த எண்ணெய் பசையை நீக்க, 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.

    • வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க சிவப்பு சந்தனம் உதவும். அதற்கு தினமும் 2 தேக்கரண்டி சந்தன பொடியில், தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    • சிலர் முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தினமும் சிவப்பு சந்தனப் பொடியை நீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வர, அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

    • கொத்தமல்லியில் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது.
    • கொத்தமல்லியை எந்தெந்த சருமப் பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் முகம் பளிச்சென்று பளிங்கு போல இருக்க வேண்டுமென்று தான் அதிகம் விரும்புவார்கள். அதற்கு வீட்டில் சமைக்க வைத்திருக்கும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை போதும்.

    கொத்தமல்லி இலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதன் தண்டு, இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கும் கொத்தமல்லியில் வைட்டமின் ஈ யும் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இது சருமப் பராமரிப்புக்கு மிகவும் மிகுந்தது.

    மாசுக்கள் மற்றும் தூசுகளால் சருமப் பிரச்சினைகள் அதிகம் உண்டாகின்றன.சூரிய ஒளியின் அதிகப்படியான வெப்பத்தால், புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்படைகிறது.சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் உண்டாகும்.

    இந்த பிரச்சினைகளைச் சரிசெய்ய கொத்தமல்லி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லி இலையை எந்தெந்த சருமப் பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    மூக்கு, வாய்க்குக் கீழ்ப்பகுதி மற்றும் நெற்றியில் அதிக அளவில் கரும்புள்ளிகள் இருக்கும். அவற்றைக் குறைக்க கொத்தமல்லி பெரிதும் உதவும்.

    2 ஸ்பூன் கொத்தமல்லி சாறெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்தில் இதை இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.

    சருமத்தில் கருந்திட்டுக்கள், முகம் முழுக்க ஒரே நிறமாக இல்லாமல் அன் ஈவன் டோனுடன் இருப்பவர்கள் சருமத்தின் நிறத்தைக் கூட்டவும் கருந்திட்டுக்களைக் களையவும் கொத்தமல்லி இலை சருமத்தில் சிறப்பாகச் செயலாற்றும்.

    கொத்தமல்லி இலையின் சாறுடன் சிறிது கற்றாழை ஜெல்லும் அதனுடன் தயிரும் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து நன்கு வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். பின்பும் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் நல்ல கலராகும். குறிப்பாக, எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த பலனைக் கொடுக்கும்.

    ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த 1 கப் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள்.

    அடுத்து அதில் (1 ஸ்பூன்) எலுமிச்சை சாறும், (1 ஸ்பூன்)கற்றாழை ஜெல், (1 ஸ்பூன்)ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். முதல் முறை பயன்படுத்தியதுமே நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.

    • கருவளையங்களை சரிசெய்ய அன்னாசி பழச்சாறு உதவும்.
    • பருவால் ஏற்பட்ட தழும்புகள் மறைய அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்தலாம்.

    அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இரண்டும் அதிகமாக இருக்கின்றன. இவையிரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக நார்மல் ஸ்கின் மற்றும் ஆயில் ஸ்கின் இரண்டுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது தொடங்கி முகத்தை பளபளப்பாக்கவும் மாசு மருவற்ற சருமத்தை பெறவும் பல வழிகளில் அன்னாசியை பயன்படுத்த முடியும்.

    க்ளியர் சருமத்துக்கு அன்னாசி பழம்

    அன்னாசியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது பருக்களுக்கு எதிராக போராடும் தன்மையை கொண்டிருக்கிறது. பருக்களும் பருவால் ஏற்பட்ட தழும்புகளும் அதிகமாக இருந்தால் அதை சரிசெய்ய அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்துங்கள்.

    அன்னாசி பழத்தின் சாறை சிறிதளவு எடுத்துக் கொண்டு முகம் மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் டோனராக ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே 15 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும்போது விரைவிலேயே பருக்களும் பருவால் வந்த தழும்புகளும் மறைந்து க்ளியர் சருமத்தை பெற முடியும்.

    கருவளையம் நீங்க அன்னாசி

    அதிகப்படியான சோர்வு, வயதாவது போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றிலும் அடிப்பகுதியிலும் கருவளையங்கள் தோன்றும். இந்த கருவளையங்களை சரிசெய்ய அன்னாசி பழச்சாறு உதவும்.

    அன்னாசி பழத்தில் அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இது வயதாவதால் உண்டாகும் கண் சுருக்கங்களை சரிசெய்ய உதவும். சிறிதளவு அன்னாசி பழத்தின் சாறினை எடுத்து அதை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து பத்து நிமிடங்கள் வரை கண்களை மூடி ஓய்வெடுங்கள். இதை தினமும் கூட செய்து வரலாம். இப்படி செய்து வரும்போது கண்களைச் சுற்றிலும் உண்டாகிற கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களை நீக்கச் செய்யும்.

    ஆரோக்கியமான நகங்களுக்கு அன்னாசி

    நகங்கள் அதிகமாக வறட்சியாவது, உடைதல் போன்ற பிரச்சினைகள் சிலருக்கு அடிக்கடி ஏற்படும். நகங்கள் ஆரோக்கியமில்லாமல் இருப்பதற்கு வைட்டமின் ஏ மற்றும் பி பற்றாக்குறை முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

    நகங்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அன்னாசி பழச்சாறு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். பைனாப்பிள் ஜூஸை குடிப்பதன் மூலம் வைட்டமின் பற்றாக்குறை சரிசெய்யப்படும். அதேபோல அந்த சாறினை நகங்களில் அப்ளை செய்யலாம். இப்படி செய்வதால் நகங்கள் உறுதியாகவும் அழகாகவும் மாறும்.

    அழகான பற்களுக்கு அன்னாசி

    அன்னாசி பழத்தில் உள்ள வைட்டமின் சி பற்களை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க உதவுகிறது.

    முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் பற்கள் மஞ்சள் கறை இல்லாமல் பளிச்சென வெண்மையாக இருந்தால் தான் முகத்தின் பளபளப்பு இன்னும் கூடும். இதற்கு அன்னாசி பழம் மிக உதவியாக இருக்கும்.

    அன்னாசி பழத்தின் சாறில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதை டூத் பிரஷில் தொட்டு நன்கு பல் தேய்க்க வேண்டும். இப்படி வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செய்தால் போதும். பற்கள் முத்து போல ஜொலிக்கும். அடிக்கடி செய்தால் இதிலுள்ள அமிலத்தன்மை பல் ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும்.

    • சருமத்தினை ஆரோக்கியமாக வைக்க சில அழகுக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
    • சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்கிறது.

    ஃபேஸ் பேக்குகளில் கிரீன் டீயை பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்து பளபளக்கச் செய்கிறது. கிரீன் டீ சருமத்தில் ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. இதனால் எளிதில் அல்லது இளம் வயதில் ஏற்படும் வயதான தோற்றத்தினை தடுக்கிறது. கிரீன் டீயில் டானின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கரு வளையங்கள் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. கிரீன் டீயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவைக் குறைத்து வடுக்களைத் தடுக்கின்றன. கிரீன் டீ பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடும் போது சருமத்தில் இருக்கும் சிறு சிறு துளைகளைச் சரி செய்கிறது.

    இரண்டு தேக்கரண்டியளவு அரிசி மாவு, ஒரு தேக்கரண்டியளவு கிரீன் டீ தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்து ஒன்றாகக் கலந்து கலவையாக்கிக் கொள்ளுங்கள். அதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஆனால் கலவையைக் கண்கள் மற்றும் வாய் பகுதியைச் சுற்றி அப்ளை செய்யாதீர்கள். இந்த கலவையை முகத்தில் 15 நிமிடங்கள் அல்லது கலவை காயும் வரை வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.

    எலுமிச்சை சாறு சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். எலுமிச்சை சாறு முகப்பருவுக்குத் தீர்வளித்து முகத்தில் இருக்கும் வடுக்களைச் சரி செய்யவும் உதவுகிறது. உங்களுக்கு எலுமிச்சை சாறு கிடைக்க விட்டால் தேன் பயன்படுத்தலாம்.

    அரிசி மாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளது. எண்ணெய் சருமத்திற்கு ஒரு அற்புதமான எக்ஸ்போலியேட்டராக அரிசி மாவு உதவும். மேலும் முகத்தில் இருக்கும் டனை அகற்றுவதற்கு அரிசி மாவு சிறந்த தீர்வாகும். அரிசி மாவு வைட்டமின் பி இன் மூலமாக இருப்பதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்கிறது.

    • ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது.
    • பிம்பிள் தழும்பு, கரும்புள்ளிகளை குறைக்கும்.

    ஆப்பிளில் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆப்பிள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து புத்துயிர் அளிக்கவும் செய்யும். ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை தக்க வைக்க உதவும். ஆப்பிளில் உள்ள காப்பர், சருமத்தைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் ஏ, சருமத்தை புற்றுநோய் செல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

    * ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுத்தத்தைக் குறைத்து, சோர்வை நீங்கி, புத்துயிர் அளிக்கவும் செய்யும். உங்கள் முகத்தின் பொலிவை உடனடியாக அதிகரிக்க நினைத்தால், இந்த மாஸ்க்கைப் போடுங்கள்.

    ஆப்பிள் - 1, தண்ணீர் - 1 கப்

    ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி முதல் முறை செய்யும் போதே, முகத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

    * ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இயற்கையாகவே சருமத்திற்கு பிரகாசத்தை வழங்க உதவும். இதில் உள்ள டானிக் அமிலம், மென்மையான சருமத்தைப் பெற உதவும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

    1 ஆப்பிள் தோல், 1 டீஸ்பூன் தேன்

    ஆப்பிளின் தோலை நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்ததும், முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

    * கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிள் மாஸ்க் பிம்பிள் தழும்புகளையும், கருமையான புள்ளிகளையும் குறைக்கும். நல்ல மாற்றத்தைக் காண்பதற்கு, இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறைப் பயன்படுத்த வேண்டும்.

    ஆப்பிள் - 1, தேன் - 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    ஆப்பிளை துருவி அதிலிருந்து சாற்றினை கையால் பிழிந்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    • காபியில் பல நன்மைகள் உள்ளன.
    • முகப்பருவைக் குறைக்கிறது.

    காபியில் சருமத்தைப் பொலிவாக்கும் அற்புதமான பண்புகள் உள்ளன. உண்மையில், காபியை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தோல் அழற்சி மற்றும் முகப்பருவைக் குறைக்கிறது.

    காபியில் பல நன்மைகள் உள்ளன, அவற்றில் ஒன்று தோல் பராமரிப்பு. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிஏஜிங் பண்புகள் நிறைந்த காபி, அற்புதமான சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. உண்மையில், காபியை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தோல் அழற்சி மற்றும் முகப்பருவைக் குறைக்கிறது.

    காபி மற்றும் பால் முகமூடியைத் தயாரிக்க, இரண்டு தேக்கரண்டி காபி தூள் மற்றும் பால் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். உங்கள் முகத்தில் 10-15 நிமிடங்கள் வைத்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நீங்கள் மென்மையான சருமத்தைப் பெற விரும்பினால், காபி மற்றும் பால் முகமூடி ஒரு எளிய மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வாகும். இது உங்கள் முகத்தில் உள்ள கறைகளை நீக்கி, உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும்.

    ஒரு தேக்கரண்டி காபி தூள், ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் ஒரு தேக்கரண்டி தயிர் கலந்து பேஸ்ட்டை உங்கள் முகத்தில் சமமாக தடவி 20 நிமிடங்கள் விடவும். பேஸ்ட்டை அகற்ற, மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும், சருமம் பளபளப்பாக இருக்கும். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள மந்தமான தன்மையை நீக்கி கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.

    ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் காபி பவுடரை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலக்கவும். நன்கு கலந்து பேஸ்ட் செய்து, உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாகவும் மென்மையாகவும் தடவவும். 15 நிமிடம் உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேக் சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது.

    • நேரத்திற்கு தூங்குவது கிடையாது.
    • நேரத்திற்கு சாப்பிடுவது கிடையாது.

    சில பேருக்கு 25 வயதைக் கடந்த உடனேயே வயதான தோற்றம் வர தொடங்கிவிடும். முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட தொடங்கும். கண்களுக்கு கீழே தோல் சுருங்கி இருக்கும். வாயை சுற்றி சுருக்கம் வரத் தொடங்கியிருக்கும். கழுத்தில் சுருக்கங்கள் அதிகமாக வரத் தொடங்கும்.

    முதலில் நம்முடைய தோல் சுருக்குவதற்கு காரணம், நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தான். நேரத்திற்கு தூங்குவது கிடையாது. நேரத்திற்கு சாப்பிடுவது கிடையாது. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய தண்ணீரை நாம் பருகுவது கிடையாது. நல்ல உணவை சாப்பிடுவது கிடையாது. ஊட்டச்சத்து உடலுக்கு கிடைப்பதில் குறைபாடு. இவை எல்லாவற்றையும் தாண்டி இன்றைய சூழ்நிலையில் இருக்கக் கூடிய மன அழுத்தம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும் போது நமக்கு வயதான தோற்றம் இளமையிலேயே வந்துவிடுகிறது.

    வயதான தோற்றத்தைத் தள்ளிப் போட வேண்டும் என்றால் நம்முடைய உணவு பழக்க வழக்கத்தில் இயற்கையாக கிடைக்கும் பழங்கள் காய்கறிகள் பயிறு வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். முகத்தில் இருக்கும் சுருக்கத்தை நீக்க வீட்டிலிருந்தபடியே பேஸ் மாஸ்க் தயாரிக்கலாம் வாங்க..

    மைசூர் பருப்பு 2 ஸ்பூன், பச்சரிசி 2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தேவையான அளவு அதாவது 2 ஸ்பூன் சிறிய பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு தயிர் – 1 ஸ்பூன், அரைத்த தக்காளி விழுது – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து விழுதாக கலந்து இதை உங்களுடைய முகத்தில் கீழ்ப் பக்கத்தில் இருந்து மேல்பக்கம் அப்ளை செய்து கொள்ள வேண்டும். கழுத்திலிருந்து பேஸ் மாஸ்க் போட வேண்டும்.

    பத்து நிமிடம் கழித்து உங்களுடைய தோல் இறுக்கி பிடிக்கத் தொடங்கும். அதன் பின்பு கையில் லேசாக தண்ணீரைத் தொட்டு உங்களுடைய முகத்தில் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி வந்தால், முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்து வந்தாலே வயதான தோற்றம் தள்ளிப் போகும். முகத்தில் சுருக்கம் வந்தவர்கள் இதை பயன்படுத்தினால் படிப்படியாக முகச்சுருக்கம் குறையும். முகத்தில் சுருக்கம் இல்லாதவர்கள் இளமையாக இருக்கும்போதே இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் வரக்கூடிய சுருக்கம் தள்ளிப்போகும். முயற்சி செய்து பாருங்கள்.

    • சிலருக்கு நெற்றியில் மட்டும் தழும்புகளும், நிற மாற்றமும் காணப்படுவதுண்டு.
    • இதை ஃபோர்ஹெட் டேனிங் என்று கூறுவார்கள்.

    சிலருக்கு உடலின் சில பாகங்களில் மட்டும் அல்லது முகத்தில் சில இடங்களில் மட்டும் நிறம் மாறுவதுண்டு. இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதோடு முகப்பொலிவையும் கெடுத்து விடுகிறது. மேலும், பல இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது இது நமது தன்னம்பிக்கையையும் கெடுத்து விடுகிறது. முகத்தில் இப்படி நிறம் மாறும் பாகங்களில் நெற்றியும் ஒன்றாகும்.

    பல சமயங்களில் நமது கன்னங்களும் முகத்தின் பிற பாகங்களும் பொலிவாக இருக்க, நெற்றியில் மட்டும் தழும்புகளும், நிற மாற்றமும் காணப்படுவதுண்டு. இதை ஃபோர்ஹெட் டேனிங் என்று கூறுவார்கள். டேனிங் காரணமாக, முகம் மற்றும் நெற்றியின் நிறம் வித்தியாசமாக தெரிகிறது. சில வீட்டு வைத்தியங்கள் மூலம் நெற்றியில் உள்ள டேனை எளிதாக சுத்தம் செய்யலாம்.

    மஞ்சள்

    மஞ்சள் அதிக மருத்துவ குணம் கொண்டது. மஞ்சள் பல சரும பிரச்சனைகளை நீக்க பயன்படுகிறது. இதனை பயன்படுத்தினால் நெற்றியில் உள்ள கருமை நீங்கும். பச்சை பாலில் மஞ்சளை கலந்து தோல் பதனிடும் இடத்தில் தடவி சிறிது நேரம் விட்டு பின் தண்ணீரில் கழுவவும். டேனிங் பிரச்சனை நீங்கும்.

    வெள்ளரிக்காய்

    வெள்ளரிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வெள்ளரிக்காயை உட்கொள்வதால் பல வித ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும். இதுமட்டுமின்றி, வெள்ளரிக்காய் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதன் மூலம், ஸ்கின் டேனிங் மற்றும் கருவளையம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். வெள்ளரிக்காய் துண்டுகளை சருமத்தின் நிறம் மாறிய இடத்தில் மசாஜ் செய்யவும். முகத்தை 30 நிமிடம் அப்படியே விட்டு பின்னர் தண்ணீரில் கழுவினால் தோல் சுத்தமாகும்.

    • முதுமையைத் தடுப்பதற்கு வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
    • வாழைப்பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    வயதாக ஆரம்பித்தவுடன், முகத்தில் முதுமையின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும், அதாவது சுருக்கங்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் தோல் பராமரிப்பு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதுமையின் அறிகுறிகளைத் தடுக்க, இன்று உங்களுக்காக சில வீட்டு வைத்தியங்கள் குறித்த தகவல்களை அளிக்கிறோம்.

    உங்கள் சருமப் பராமரிப்பில் இதை நீங்கள் பின்பற்றினால், அது உங்களை நீண்ட காலத்திற்கு அழகாகவும் இளமையாகவும் இருக்கலாம். இந்த உதவிக்குறிப்புகள் உங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. இது உங்கள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கிறது மற்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

    இதற்கு வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் தோலுரித்து நன்றாக மசிக்கவும். பின்னர் இந்த வாழைப்பழ பேஸ்ட்டை சீராக முகத்தில் தடவவும். அதன் பிறகு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க விட்டு உலர்த்த பிறகு சுத்தமான நீரினால் கழுவவும். இந்த வாழைப்பழ மாஸ்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினாலே, நீங்கள் நல்ல பலனைக் காணத் தொடங்குவீர்கள். வாழைப்பழத்தில் நல்ல அளவு வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி நிறைந்துள்ளதால், முகச் சுருக்கங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

    வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். வாழைப்பழத்தையும் வெண்ணெய்ப்பழத்தையும் ஒன்றாகப் பிசைந்து முகத்திலும் கழுத்திலும் மாஸ்க் போடவும். சுமார் 25 நிமிடங்கள் வரை காத்திருந்து, பிறகு கழுவவும்.

    வாழைப்பழத்தில் பன்னீர் சில துளிகள் விட்டுப் பிசைந்து அதனை ஃபேஸ் மாஸ்க்காகப் போட்டு அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் விட்டு பிறகு கழுவலாம்.

    வாழைப்பழத்தைக் குழைத்து, ஃபேஸ் மாஸ்க்காகப் போடவும். 20-25 நிமிடங்கள் கழித்து கழுவவும். சருமம் வறண்டு போயிருந்தால், இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் முகப் பொலிவு பெற, ஒரு டீஸ்பூன் வைட்டமின் E (வைட்டமின் E காப்சூலை உடைத்து அப்படியே அதிலுள்ளவற்றை ஊற்றிக் கலக்கினால் போதும்) மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் பொட்டாசியமும் நீரும் நிறைந்திருப்பதால், சருமத்தில் நீர்ச்சத்தைத் தக்கவைத்து சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள வாழைப்பழம் உதவுகிறது.

    உங்கள் முகத்திலோ முகப்பரு உள்ள பகுதிகளிலோ வாழைப்பழத் தோலின் உட்பகுதியை வைத்துத் தேய்த்தால் போதும். அழற்சியைக் குறைக்கிறது. பிசைந்த வாழைப்பழத்துடன் மஞ்சள் பொடி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தும் ஃபேஸ் மாஸ்க் போடலாம். அது முகப்பருக்களை ஒழிப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும் இயற்கையான பளபளப்பையும் பொலிவையும் கொடுக்கும்.

    கரும்புள்ளிகளின்மீது வாழைப்பழத் தோலைத் தேய்த்தால் அல்லது பிசைந்த வாழைப்பழத்தையே தேய்த்தால் வயதாவதால் தோன்றும் புள்ளிகளும், கரும்புள்ளிகளும், முகப்பரு வடுக்களும் குறைகின்றன. விரைவில் பலன் பெற, இதை குறைந்தது வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

    ×