என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight fare hike"

    • விடுமுறை முடிந்த நிலையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால் விமானத்தை தேர்வு செய்யும் மக்கள்.

    பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்ததால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

    இந்நிலையில் விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். குறிப்பாக, பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால், மக்கள் விமானத்தில் பயணிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதுபோன்ற சூழல்களில் விமான பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதன்படி, மதுரை- சென்னைக்கு வழக்கமாக ரூ.3,999 ஆக கட்டணம் இருந்த நிலையில், இன்றைய தினம் விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரித்துள்ளது.

    அதேபோல திருச்சி – சென்னை இடையே வழக்கமாக ரூ.2,199 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது ரூ.ரூ.11,089 ஆக உயர்ந்துள்ளது.

    தூத்துக்குடி – சென்னை இடையே வழக்கமான கட்டணம் ரூ 4,199 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,365ஆக உயர்ந்துள்ளது.

    சேலம் – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ 2,799 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.10,441 வரை அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

    • பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது.
    • திரிவேணி சங்கமத்தில் நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் 3 நதிகள் சேரும் திரிவேணி சங்கமத்தில் நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களிலும் கட்டணம் எகிறி உள்ளது. அமாவாசை திதி நாளை வரும் நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல விமான கட்டணம் ரூ.59 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    எரிபொருள் விலை உயர்வால் உள்ளூர் விமான கட்டணம் தூரத்திற்கு ஏற்றது போல உயர்த்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பெட்ரோல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. அதை சமாளிக்க ‘இண்டிகோ’ விமான நிறுவனம் உள்ளூர் பயணிகள் விமான டிக்கெட் கட்டணத்தை  உயர்த்தியுள்ளது.

    அதன்படி 1000 கி.மீட்டர் தூரத்திற்குள் பயணம் செய்பவர்களுக்கான கட்டணம் ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1000 கி.மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்வோருக்கு ரூ.400 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எண்ணெய் விலை சீரடைந்ததும் டிக்கெட் கட்டண உயர்வு வாபஸ் பெறப்படும்” என அறிவித்துள்ளது.

    இதே டிக்கெட் கட்டண உயர்வை பின்பற்ற மற்ற விமான நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. எனவே அனைத்து விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews

    ×