search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "food party"

    • குரங்குக்கு வாழை இலையில் தடல் புடல் சாப்பாடு விருந்து வழங்கப்பட்டது.
    • வயிறு நிறைந்ததும் அது தனக்குரிய வேலையை காட்ட தொடங்கியது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹிரிசாவே நுகேஹள்ளி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றது. விழாவில் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் ஏராளமானோர் குவிந்தனர்.

    திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சுட சுட சுவையான உணவு விருந்து பரிமாறப்பட்டது. அப்போது குரங்கு ஒன்று மண்டபத்திற்குள் புகுந்து மாப்பிள்ளையின் அருகில் அமர்ந்தது.

    அந்த குரங்குக்கு வாழை இலையில் தடல் புடல் சாப்பாடு விருந்து வழங்கப்பட்டது. அது ஹாயாக பந்தியில் உட்கார்ந்து ருசிக்க, ருசிக்க சாப்பிட்டது. வயிறு நிறைந்ததும் அது தனக்குரிய வேலையை காட்ட தொடங்கியது.

    பந்தியில் சாப்பிட்டு கொண்டிருந்த மற்றவர்களின் வாழை இழைகளை பிடித்து இழுத்தும், அதில் இருந்த உணவுகளை கீழே இழுத்து போட்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

    மேலும் நாற்காலியிலும், மேஜையிலும் தாவி, தாவி குதித்து இலையில் இருந்த உணவுகளை தூக்கி வீசியது.

    மேலும் திருமண விழாவிற்கு வந்திருந்த சுசீலாம்மா, லீலாவதி, நிங்ககவுடா, கவுரம்மா, கிரிஜாம்மா மற்றும் மஞ்சுஸ்ரீ என்ற 7 வயது சிறுமி ஆகியோரை துரத்தி துரத்தி கடித்து குதறி காயப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமணத்திற்கு வந்த 2 வீட்டார் உறவினர்களும் அங்கும், இங்குமாக ஓடினர்.

    பின்னர் அங்கிருந்து வெளியே வந்த குரங்கு அதே சாலையில் உள்ள மாவு ஆலைக்குள் புகுந்து ஹொன்ன ஹள்ளியை சேர்ந்த கிரிகவுடா, திம்மே கவுடா ஆகியோைரயும் கடித்து குதறியது. இவர்கள் அனைவரும் ஹிரிசாவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதால் மேல்சிகிச்சைக்காக ஹாசன் மற்றும் ஆதிசுஞ்சனகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் குரங்கு புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

    ×