search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G. K. Vasan"

    • நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்கின்றனர்.
    • தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டு உள்ள பருத்தி செடிகளை முறையாக, முழுமையாக கணக்கெடுக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் அப்பகுதியில் சாகுபடி செய்த பருத்தி செடி பாதிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். இதில் தற்போது சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டு உள்ள பருத்தி செடிகளை முறையாக, முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உரிய நஷ்ட ஈடு கிடைக்கும் வகையில் நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.

    டெல்டா மாவட்டப் பகுதிகளில் மழையால் வீணாகியுள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடிக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மின்மோட்டார் அமைக்க ரூ. 75 ஆயிரம் வரையும் செலவு செய்ய வேண்டியுள்ளது.
    • மானியத்தை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆழ்துளை கிணறு அமைக்க சுமார் ரூ. 9 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், மின்மோட்டார் அமைக்க ரூ. 75 ஆயிரம் வரையும் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆழ்துளை கிணறு அமைக்க, மின் மோட்டார் அமைக்க வேளாண் துறை மூலம் மானியமாக சுமார் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இது போதுமானதல்ல என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆண்டு முழுவதும் மழைக்காலம், வெயில்காலம் என எக்காலத்திலும் விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்பதற்காக இடத்திற்கு ஏற்ப புதிய கிணறு அல்லது புதிய ஆழ்துளை கிணறு ஆகியவற்றை அமைக்க விவசாயிகளுக்கு மானியத்தை உயர்த்தி கொடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    விவசாயிகள் பம்பு செட் அமைக்கவும், மோட்டார், பைப்லைன், ஆழ்துளை கிணறு அமைக்கவும் மற்றும் நீர் பாசனத்திற்கு தேவையான அனைத்து கருவிகளை வாங்கவும், டிராக்டரை விருப்பப்படும் நிறுனங்களில் வாங்கவும், இவற்றிற்காக மானியத்தை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

    ×