என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gandhi"

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர். #GandhiJayanti #MahatmaAt150 #NarendraModi #RahulGandhi
    நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 2 (இன்று) காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

    டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் மோடி காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



    அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களும் மரியாதை செலுத்தினர்

    மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் பலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். #GandhiJayanti #MahatmaAt150 #NarendraModi #RahulGandhi
    கையில் துடைப்பத்துடன் மகாத்மா காந்திக்கு மெழுகு சிலை வைக்க வேண்டும் என மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #CleanIndia #PMModi #MadameTussauds
    புதுடெல்லி:

    உலகப்புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகு சிலைகள் லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் இதேபோன்ற அருங்காட்சியகம் கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது. இங்கு, மகாத்மா காந்தி, பகத்சிங், நேதாஜி, அப்துல்கலாம் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி, அமிதாப் பச்சன், டாம் குரூஸ், சல்மான் கான், சச்சின், கோலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இங்கு மெழுகு சிலை உள்ளது. இந்நிலையில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் முன்னர் அதன் நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி கூறிய பரிந்துரை ஒன்றை அருங்காட்சியக நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம், 1.25 பில்லியன் மக்களை தூய்மை குறித்து ஊக்குவிக்கும் வண்ணம் மகாத்மா காந்தியின் கையில் துடைப்பத்துடன் இருக்கும் படி மெழுகு சிலை வைக்க வேண்டும் என மோடி, அருங்காட்சிய நிர்வாகிகளை கேட்டுள்ளார்.

    மேலும், காந்தி கையில் துடைப்பம் வைத்திருக்கும் படியான புகைப்படத்தை தான் அனுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 

    எனினும், மகாத்மா காந்தி கையில் நீண்ட குச்சி வைத்திருக்கும் படியான மெழுகு சிலையே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்துத்துவ இயக்கங்களின் முன்னோடியாக கருதப்படும் விநாயக் தாமோதர் சவாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சில அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரது பிறந்தநாள் நேற்று இந்த அமைப்பினரால் விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.

    காந்தி மற்றும் சவார்கர்

    ×