என் மலர்
நீங்கள் தேடியது "gnanavel"
- நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பு பெற்ற படம் ‘ஜெய்பீம்’.
- இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

ஜெய்பீம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி ஜெய் பீம் படக்குழு சில பிரச்சனைகளையும் சந்தித்தது. இருப்பினும் இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

ஜெய்பீம்
இந்நிலையில் 'ஜெய் பீம்' படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனைக் கொண்டாடும் விதமாகப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இயக்குனர் ஞானவேல் 'ஜெய்பீம்' படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

ஜெய்பீம்
தொடர்ந்து சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஜெய் பீம் படம் ஓராண்டு நிறைவு செய்வதை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. திரைக்கதை முதல் இயக்கம் வரை இப்படம் வலுப்பெற்றுக் கொண்டேயிருந்தது. இந்த அர்த்தமுள்ள படத்தை கொடுத்த என் சகோதரர் ஞானவேல் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரம் என் வாழ்வில் ஓர் மைல்கல்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Happy to celebrate one year of #JaiBhim From script to execution this film kept getting stronger & stronger.. I thank my brother @tjgnan Gnanavel & Team for giving us this most meaningful film. Lawyer Chandru is a landmark role in my career! https://t.co/iSLn1Tj3ir
— Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2022
- 'ஜெய்பீம்' திரைப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான '2 டி' எண்டர்டைன்மென்ட்ஸ் தயாரித்தது.
- இப்படக்குழுவினர் மீது சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான '2 டி' எண்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் படக் குழுவினர் மீது, சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர்.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 'ஜெய்பீம்' படம் எடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் உறவினரும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை, தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாகவும், காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாக்கண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி, விரைந்து விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், வழக்கை செப்டம்பர் 15 -ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
- முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இணைந்து “சத்தியதேவ் லா அகாடமி”-யை உருவாக்கியுள்ளனர்.
- இந்த “சத்தியதேவ் லா அகாடமி”-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் "சத்தியதேவ்" அவர்களின் நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் "சத்தியதேவ் லா அகாடமி"-யை (Sathyadev Law Academy) முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த அகாடமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், "சத்தியதேவ் லா அகாடமி"யை உருவாக்கிய சூர்யா மற்றும் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்களை இயக்குனராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியதேவ் லா அகாடமியைத் தொடங்கி வைத்தேன். இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.

சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணிபுரிவது; இவை பயிற்சி செய்வது! எனவே, நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். நீதியரசர் சந்துரு அவர்களோடு, ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
- வேல் என்பது முருகனது ஞானசக்தி.
- முருகனது திருக்கை வேல் வழிபாட்டினால் ஆணவத்தையும், தீவினையையும் அழிக்கலாம்.
சமய வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும், மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின் தோற்றமும், விழுமியங்களும் துணையாக அமைந்தது.
பண்டைய தமிழ் இலக்கியங்கள் முருகனைக் குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாகப் போற்றினாலும் அப்பெருமான் உலகம் முழவதும் நிரம்பியிருக்கிறான்.
அவனது திருவருள் எங்கனும் பரவி அருள் பாலிக்கின்றது. இயற்கையழகுடன் கூடிய இடங்களில் அவனது கோயில்கள் எழுந்துள்ளன. காடு, மலை, சோலை, அரங்கம் எங்கனும் அவனுக்குக் கோயில்கள் உண்டு. அதுவே முருகனது தெய்வீகப் பெருமைக்கு சான்று.
மக்களுக்கு உயிர்த்துணையாக விளங்கும் கடவுள் முருகப்பெருமான், அம்மை அப்பனோடு எழுந்தருளி அருள்பாலிக்கும் அற்புத தெய்வம். அடியார்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும், ஒற்றுமை தெய்வம் வள்ளி தெய்வயானை சமேதராய் விளங்கும் அழகு தெய்வம்.
இத்தகைய சிறப்பினால் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் அடியார்களை உள்ளன்புடன் முருகனைத் தரிசித்து விழிபடும் வண்ணம் ஆற்றுப்படுத்து கின்றார். முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவனாகிய முருகன் யாவும் நிறைவு பெற்ற பு+ரணப் பொருள்.
உபநிடத வாக்கியம் பு+ரணத்தின் சிறப்பைக் கூறும் ஓம் பு+ர்ணமத பு+ர்ணமிதம் பு+ர்;ணாத் பு+ர்ணமுதச்யதே என்ற உபநிடதச் சிந்தனையின் படி பு+ர்ணமாகிய பொருளில் இருந்து பு+ர்;ணம் உதயமாகி உள்ளது என்பது விளக்கப்படுகின்றது.
பு+ர்ணமாகிய சிவப்பரம்பொருளிடம் இருந்து பு+ரணமாகிய முருகப்பெருமான் உதயமாகி உள்ளான் என்றும் கொள்வதில் தவறில்லை. புதியரில் புதியவனாகவும் முடிவிற்கு முடிவானவனாகவும் விளங்கும் முருகன் நினைத்தவுடன் அடியார்களுக்கு அருள்பாலிப்பவன்.
அஞ்சுமுகம் தோன்றில்
ஆறுமுகம் தோன்றும்
நெஞ்சமதில் அஞ்சலென
வேல்தோன்றும் நெஞ்சில்
ஒருகால் நினைக்கில்
இருகாலும் தோன்றும்
முருகா என் றோதுவார் முன்
என்ற பாடல் முருகனது திருவருட் சிறப்பை கூறும். முருகனுக்குள் எண்ணற்ற திருநாமங்கள் அவனது தெய்வீகப் பெருமைகளை எமக்கு உணர்த்துகின்றன.
அவனுக்குரிய திருநாமங்களில் செவ்வேள் என்பது குறிப்பிடத்தக்கது.
முருகனது திருவுருவினை செந்நிறமாகவே கண்டனர். காலைப்பொழுதிற் கண்ணிற்கு இனியதாய் கீழ்த் திசையிற்றோன்றும் இளஞாயிறு செவ்வொளிப் பிழம்பாய்த் தோன்றும் தன்மையைக் கண்டு மகிழ்ந்த மாதர் அவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் முருகப்பெருமானையும் செவ்வேள் சேஎய் என அழைத்தனர். கந்தபுராணத்தில் கச்சியப்பர் முருகனது தோற்றத்தினைப் பற்றி குறிப்பிடுகிறது.
அருவமும் உருவும் ஆகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்
மேனி ஆகக் கருணைகூர் முகங்கள்
ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஓரு திருமுருகன் வந்தாங்கு
உதித்தனன் உலகம் உய்ய
என்ற பாடல் தரும் கருத்தின் பொருத்தப்பாட்டினையும் இங்கு உவந்து நயக்க முடிகின்றது.
முருகனது வழிபாடு நிகழும் ஆலயங்கள் தென்னாட்டிலும் ஈழத்திலும் பெருமளவில் உள்ளன. முருகனது திருக்கரத்தில் விளங்கும் ஞானவேல் முருகவழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்றது.
வேல் என்பது முருகனது ஞானசக்தி முருகப் பெருமானின் துணையை அவனது வேலின் வழிபாட்டால் அடியவர்கள் பெறுவர்.
வீரவேல் தாரைவேல்
விண்ணோர் சிறைமீட்ட
தீருவேல் செவ்வேள்
திருக்கைவேல் வாரி
குளித்த வேல் கொற்றவேல்
சு+ர்மார்ப்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை
என்ற நக்கீரரின் பாடல் வேலின் சிறப்பினைக் கூறும். ஞானமாகிய அறிவுக்கு மூன்று பண்புகள் உண்டு. அவை ஆழம், அகலம், கூர்மை என்பன வேலின் அடிப்படைப்பகுதி. ஆழ்ந்தும் இடைப்பகுதி அகன்றும், நுனிப்பகுதி கூர்மையாகவும் இருக்கும். பரம்பொருளின் தத்துவத்தை மணிவாசகர் வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே எனப் போற்று கின்றார்.
இவ்வேலின் தத்துவம் அப்பரம்பொருள் தத்துவத்தை எமக்கு உணர்த்துகின்றது. முருகனது திருக்கை வேல் வழிபாட்டினால் ஆணவத்தையும், தீவினையையும் அழிக்கலாம்.
அருணகிரிநாதர் வேல்வகுப்பு என்ற தனிப்பாடலினால் இந்த ஞானசக்தியைச் சிறப்பாகப் புகழ்ந்துள்ளார். முருகனது திருவுருவ வழிபாட்டுக்கு நிகராக அவனது திருக்கையில் விளங்கும் ஞானவேலினை வைத்து வழிபடும் மரபு பண்டைக்காலம் முதல் இருந்து வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் வேற்கோட்டம் என்ற குறிப்பு வேலை முருகனாக வழிபடும் மரபை கூறுகின்றது.
- ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் அமோக வெற்றி பெற்றது.
- ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார்.
ரஜினிகாந்த நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தலைவர் 170 என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டு இருக்கிறது. தலைவர் 170 படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.
இந்த படத்தின் மற்ற நடிகர்கள் விவரம் நாளை முதல் அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ரஜினியின் புதிய படத்தை ஞானவேல் இயக்குகிறார்.
- இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது.

ராணா டகுபதி
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'தலைவர் 170'திரைப்படத்தில் 'பாகுபலி' நடிகர் ராணா டகுபதி இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து 'தலைவர் 170' திரைப்படத்திலும் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளனர்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

மேலும், இப்படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, "படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தற்போது செல்கிறேன். அடுத்த படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும். 170-வது படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.
- ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

தலைவர் 170 போஸ்டர்
மேலும், இப்படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 'தலைவர் 170' திரைப்படத்தில் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Welcoming the incredibly versatile talent ? Mr. Fahadh Faasil ✨ on board for #Thalaivar170??#Thalaivar170Team gains a powerful new addition with the astonishing performer ? #FahadhFaasil joining them. ???@rajinikanth @tjgnan @anirudhofficial @RanaDaggubati… pic.twitter.com/cOYwaKqbAL
— Lyca Productions (@LycaProductions) October 3, 2023
- ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

தலைவர் 170 போஸ்டர்
மேலும், இப்படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 'தலைவர் 170' திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. 1991-ம் ஆண்டில் வெளியான 'ஹம்' திரைப்படத்தில் ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
Welcoming the Shahenshah of Indian cinema ✨ Mr. Amitabh Bachchan on board for #Thalaivar170??#Thalaivar170Team reaches new heights with the towering talent of the one & only ? @SrBachchan ???@rajinikanth @tjgnan @anirudhofficial #FahadhFaasil @RanaDaggubati… pic.twitter.com/BZczZgqJpm
— Lyca Productions (@LycaProductions) October 3, 2023
- ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளனர்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. நியூ லுக்கில் ரஜினி இருக்கும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
#Thalaivar170 ?? journey begins with an auspicious pooja ceremony ?? today at Trivandrum ?@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4 @ritika_offl @officialdushara @srkathiir @GMSundar_ @RakshanVJ @KKadhirr_artdir @philoedit… pic.twitter.com/t5LHE6sgoA
— Lyca Productions (@LycaProductions) October 4, 2023
- நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’.
- இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் 'ஜெய் பீம்'. இந்த படத்தில் லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.

இந்நிலையில், 'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மகிழ்ச்சியை படக்குழுவினர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா, முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சூர்யா பதிவு
அதில், "ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
— Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2023
திரைப்படம்… pic.twitter.com/kW25rvVgGM
- நடிகர் ரஜினி இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார்.
- இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படத்தின் மும்பை படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இதைத்தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்நிலையில், ரஜினியின் 171-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ், ரஜியின் மிகப்பெரிய ரசிகர் என்பதால் எப்படி வில்லனாக நடிப்பார் என்ற கேள்வியும் வலம் வருகிறது.
விஜய்யின் சில படங்களில் ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.